search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுரண்டையில் மகளிர் காங்கிரசார் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    சுரண்டையில் மகளிர் காங்கிரசார் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்

    • மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி சேர்மக்கனி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
    • பழனிநாடார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கையில் தீப்பந்தம் ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்.

    சுரண்டை:

    ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து தென்காசி மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் சுரண்டையில் தீப்பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி சேர்மக்கனி தலைமை தாங்கினார். சுரண்டை நகர்மன்ற தலைவர் வள்ளி முருகன், நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பழனிநாடார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கையில் தீப்பந்தம் ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்.

    ஆர்ப்பாட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் பாலசுப்ரமணியன், அமுதா சந்திரன், ராஜ்குமார், சாந்தி தேவேந்திரன், பூக்கடை முருகன், மாணிக்கம், கஸ்பா செல்வம், ஜெயச்சந்திரன், ஆட்டோ செல்வராஜ், கந்தையா, ஆனந்த், கோபி கணேசன், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் காந்திமதி, புஷ்பவல்லி, சண்முகசுந்தரி, சக்தி முப்புடாதி, சீதாலட்சுமி, வேலம்மாள், கவுன்சிலர் மேரி, பாரிசா, முத்துச்செல்வி, மைனர் சுவாமிதாஸ் மற்றும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×