search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மு.க.ஸ்டாலினிடம் முந்தி வரப்போவது யார்?
    X

    மு.க.ஸ்டாலினிடம் முந்தி வரப்போவது யார்?

    • 2 அமைச்சர்களுக்கு இடையே அதிக உறுப்பினர்களை சேர்ப்பது யார் என்ற போட்டி உருவாகி இருக்கிறதாம்.
    • ரேசில் முந்தி முதலமைச்சரிடம் நல்ல பெயர் வாங்கப்போவது யார் என்பது 2 மாதங்கள் கழித்து தெரிந்துவிடும்.

    தி.மு.க.வில் மேலும் ஒரு கோடி பேரை உறுப்பினர்களாக சேர்க்கும் பணியைத் தொடங்க இன்னும் 8 நாட்களே உள்ளன. ஆன்லைன் மூலம் உறுப்பினர்களை சேர்க்காமல் அச்சடிக்கப்பட்ட படிவங்களில் முழு விவரமும் பெறப்பட்டு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கட்சியினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறார். அதற்கு ஏற்ப படிவங்கள் அச்சிடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் குறைந்தபட்சம் புதிதாக 50 ஆயிரம் பேரை சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த இலக்கை விட அதிகம் சேர்த்து எல்லோரையும் அசர வைக்க வேண்டும் என்று சில அமைச்சர்கள் சுறுசுறுப்பாகி இருக்கிறார்கள்.

    அந்த வகையில் 2 அமைச்சர்களுக்கு இடையே அதிக உறுப்பினர்களை சேர்ப்பது யார் என்ற போட்டி உருவாகி இருக்கிறதாம். கோவில், கோவிலாக ஓடிக்கொண்டிருக்கும் அந்த அமைச்சரை யாராலும் இந்த விஷயத்தில் நெருங்கக் கூட முடியாது என்று இப்போதே பேசிக் கொள்கிறார்கள். ரேசில் முந்தி முதலமைச்சரிடம் நல்ல பெயர் வாங்கப்போவது யார் என்பது 2 மாதங்கள் கழித்து தெரிந்துவிடும்,

    Next Story
    ×