என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக்கொள்கை தான் பின்பற்றப்படும்.
    • மத்திய அரசு எவ்வளவு நிதியை நிறுத்தினாலும் இரு மொழிக்கொள்கை தான் செயல்படுத்தப்படும் என முதலமைச்சரே தெரிவித்து உள்ளார்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.30 மணி அளவில் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து விழுப்புரத்தில் 23 மருந்தகங்களை திறக்கப்பட்ட நிலையில் விழுப்புரம் புதுவை சாலை, சாலை அகரத்தில் கூட்டுறவு முதல்வர் மருந்தகத்தினை வனத்துறை அமைச்சரும் மாநில தி.மு.க. துணை பொது செயலாளருமான பொன்முடி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ., விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வும், வன்னியர் அறக்கட்டளை உறுப்பினருமான அன்னியூர் சிவா, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், கோலியனூர் சேர்மன் சச்சிதானந்தம், மாவட்ட தி.மு.க. பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

    மருந்தக விற்பனையை தொடங்கி வைத்த பின்னர் அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக்கொள்கை தான் பின்பற்றப்படும். அதை யாராலும் அசைக்க முடியாது. மும்மொழி கொள்கையை தமிழகத்தில் யாராலும் புகுத்த முடியாது. மத்திய அரசு எவ்வளவு நிதியை நிறுத்தினாலும் இரு மொழிக்கொள்கை தான் செயல்படுத்தப்படும் என முதலமைச்சரே தெரிவித்து உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆளும் கட்சியாக இருக்கும்போது வெல்கம் மோடி என்பார்கள்.
    • இந்தி படித்தால் தான் தேசப்பற்று என்றால் அது தேச துரோகம்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலானது கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்றபோது கஞ்சனூர் அருகேயுள்ள நேமூர் கிராமத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சீமான் மீது காங்கிரஸ் கட்சி நிர்வாகி ரமேஷ் கஞ்சனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

    அந்த புகாரின் பேரில் இவ்வழக்கு விசாரணை விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் கடந்த முறை சீமான் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து இவ்வழக்கில் ஆஜராகுவதிலிருந்து விலக்கு அளிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் தொடுத்த மனு தள்ளுபடி செய்யபட்டதால் இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    மும்மொழிக்கொள்கை கடைபிடித்தால் தான் நிதி ஒதுக்குவோம் என்பது எப்படி ஜனநாயகமாக இருக்கும்.

    மாநிலங்கள் கொடுக்கும் வரி வருவாயின் பெருக்கம் தான் மத்திய அரசின் நிதி. இது நாட்டின் பொதுவுடைமையாக இருக்கும் இறையாண்மைக்கு நேர் எதிர்மறையானது. இந்தியா ஒருமைப்பாடு மிக்க நாடாக இருக்க வேண்டும் என்றால் எல்லா மொழிகளுக்கும் இடமளிக்க வேண்டும்.

    என்னுடைய பணத்தை எடுத்து வைத்துகொண்டு பணம் கொடுப்போம் என்பது திமிறு. இந்தி கட்டாயம் படிக்க வேண்டும் என்ற தேவை என்ன இருக்கிறது. இந்தி படித்தால் பசி, பட்டினி தீர்ந்துவிடுமா. மொழி வாரியாக தான் இந்தியா பிணைந்து இருப்பதாகவும், தாய் மொழி தமிழ் பயன்பாட்டு மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. எதனை வேண்டுமானாலும் படிப்பேன் என்பது எனது விருப்பம்.

    வேறொரு மொழியை கற்க நாடோடி கூட்டமாக வாழ வைக்க நினைக்கிறீர்களா. நடிகர் சரத்குமார் அனைத்து மொழிகளும் பேசுகிறார். விரும்பினால் எந்த மொழி வேண்டுமானாலும் கற்போம்.

    மரத்தின் வேர் வலுவாக இருக்க வேண்டும். இந்தியா ஒரு தேசம் என்பதும் ஒரு மொழி என்பதும் கொடுமையானது. அது தேவை என்றால் இந்தி கற்றுக் கொள்கிறோம். கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்றால் அதை செய்ய முடியாது. மும்மொழிக்கொள்கை மோசடி கொள்கை. கொள்கை மொழி அவரவர் தாய்மொழியில் தான் இருக்க வேண்டும். 3-ம் வகுப்பில் பொதுத்தேர்வு வைக்க கூடாது. அப்படி அந்த தேர்வில் தோல்வி பெற்றால் பிஞ்சு மனதில் நஞ்சு வளராதா.

    ஆட்சிக்கு வந்து 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம் என்றார்கள். அதை செய்யவில்லை. தமிழக அரசு கோழை கூடார கூட்டமாக உள்ளது. ஆளும் கட்சியாக இருக்கும்போது வெல்கம் மோடி என்பார்கள். எதிர்கட்சியாக இருந்தால் கோ பேக் மோடி என்பார்கள்.

    கல்வி மாநிலத்தின் உரிமை. மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி எத்தனை அமைக்க வேண்டும் என்ற உரிமையை மாநில அரசுக்கு கொடுக்க வேண்டும். இந்தி எதற்காக தேவை என்பதற்கு அண்ணாமலை காரணம் கூற வேண்டும்.

    இந்தி படித்தால் தான் தேசப்பற்று என்றால் அது தேச துரோகம். தமிழ் தான் பூர்வகுடி மக்கள். இந்தி தேவை என்றால் மட்டுமே கற்று கொள்வோம். அண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் குழந்தைகள் அரசு பள்ளியில் கல்வி பயிலவில்லை என கூறுகிறார்.

    தமிழகத்தில் மக்கள் பல்வேறு பிரச்சனைக்களாக போராடி வருகின்றனர். நல்லாட்சி கொடுக்கிறேன் என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு மனசாட்சி இருக்கிறதா. ஈரோடு இடைத்தேர்தலில் ஏன் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வந்து வாக்கு சேகரிக்கவில்லை. பாலியல் வன்கொடுமை, மயிலாடுதுறையில் கள்ளச்சாராயத்தை தடுத்த வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார். அப்பா என்னப்பா இப்படி பண்றீங்களே என்று கேட்டு இருக்கிறார்கள்.

    இவ்வாறு சீமான் கூறினார்.

    • கொள்கை மொழி தமிழ் என தெளிவாகவே குறிப்பிட்டுள்ளோம்.
    • இந்தி எனக்கு எதற்காக தேவை என்பதை அண்ணாமலை தெளிவாக கூறுவாரா?

    மும்மொழி கொள்கை தொடர்பாக நா.த.க. வரைவு அறிக்கையை சுட்டிக்காட்டிய பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அண்ணாமலை நாம் தமிழர் வரைவு அறிக்கையை ஒழுங்காக படிக்க வேண்டும்.

    * கொள்கை மொழி தமிழ் என தெளிவாகவே குறிப்பிட்டுள்ளோம். பயன்பாட்டு மொழி ஆங்கிலம் தெளிவாக எழுதி இருக்கிறேன்.

    * உலகின் எல்லா மொழிகளும் விருப்ப மொழிகள். இந்தி உட்பட விரும்பினால் கற்போம் என்று போட்டுள்ளேன்.

    * இந்தி எனக்கு எதற்காக தேவை என்பதை அண்ணாமலை தெளிவாக கூறுவாரா?

    * தெற்காசியா முழுவதும் பரவி வாழ்ந்தோர் தமிழ் பேசும் நாகர்கள் என்றார் அம்பேத்கர்.

    * தேவை என்றால் இந்தி படிக்கிறோம். உணவு, மொழி, உடை எல்லாம் அங்கங்கு வாழுகின்ற கால சூழல் தான் தீர்மானிக்கும் என்று கூறினார்.

    • மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவேன் என்பது திமிர்தனமாக தான் தெரிகிறது.
    • உலகம் முழுவதும் மொழி வழியே தான் தேசிய இனங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

    அவதூறு வழக்கு விசாரணைக்காக விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் ஆஜரான நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவேன் என்பது திமிர்தனமாக தான் தெரிகிறது.

    * ஒரே மொழி என்பது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானது.

    * இந்தி கற்றே ஆக வேண்டும் என வலிந்து திணிப்பது ஏன்?

    * உலகம் முழுவதும் மொழி வழியே தான் தேசிய இனங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

    * மற்ற மொழிகளை கற்பது என் விருப்பம். கட்டாயம் பிற மொழிகளை கற்க வேண்டும் என வற்புறுத்துவது ஏன்?

    * எங்களின் அடையாளமாக உள்ள எங்கள் தாய் மொழியை அழித்து நாடோடி கூட்டமாக அலையவிடப் போகிறீர்களா? என்று கூறினார்.

    • நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
    • இந்த வழக்கு இன்று விக்கிரவாண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அவதூறு வழக்கு விசாரணைக்காக விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜரானார்.

    முன்னதாக, கடந்த 2019-ல் விக்கிரவாண்டி சட்டசபை உறுப்பினராக இருந்த ராதாமணி இறந்ததை தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

    அந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரகலதாவை ஆதரித்து கஞ்சனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேமூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

    அப்போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சீமான் மீது காங்கிரஸ் கட்சியின் விழுப்புரம் மாவட்ட தலைவர் ரமேஷ் விக்கிரவாண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு இன்று விக்கிரவாண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜரானார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிறந்த பெண் குழந்தை முதல் மூதாட்டி வரை எல்லோரையுமே அம்மா என்று கூப்பிடுவோம்.
    • செல்போனில் படம் பார்ப்பதும், செல்பி எடுப்பதும் தான் முதலமைச்சரின் வேலையா?

    விழுப்புரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சி.வி.சண்முகம் பேசியதாவது:

    * பிறந்த பெண் குழந்தை முதல் மூதாட்டி வரை எல்லோரையுமே அம்மா என்று கூப்பிடுவோம்.

    * இன்னொருவரை அப்பா என்று அழைத்தால் அதன் அர்த்தமே வேறு.

    * சூடு, சுரணை, மானம் உள்ள யாரும் பிறரை அப்பா என்று அழைக்க மாட்டார்கள்.

    * சொன்னால் என் மீது வழக்கு போடுவார்கள். போட்டுக்கொள்ளுங்கள்.

    * செல்போனில் படம் பார்ப்பதும், செல்பி எடுப்பதும் தான் முதலமைச்சரின் வேலையா? என்று அவர் பேசினார்.

    • மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த கலைச்செல்வி வீடு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அடுத்த நடுவனந்தல் கிராமத்தில் அரசு பஸ் டிரைவர் வீட்டில் இருந்த 40 பவுன் நகையை திருடிய மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த நடுவணந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (40) அரசு பஸ் டிரைவர். இவர் வழக்கம்போல் பணிக்கு சென்ற நிலையில் இவரது மனைவி கலைச்செல்வியும் நேற்று மாலை உடல் நிலை சரியில்லாததால் திண்டிவனம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

    இதனை நோட்டமிட்ட மர்மநபர் ஒருவர் வீட்டை திறந்து வீட்டில் இருந்த 40 பவுன் நகையை திருடிச் சென்றுள்ளார். இந்த நிலையில் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த கலைச்செல்வி வீடு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்பு வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் பீரோவில் இருந்த 40 பவுன் நகை திருடப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் சந்தேகப்படும்படியான நபர் ஒருவரின் ஊருக்கு நேரில் சென்று பார்த்த போது அவர் தலைமறைவானது தெரிய வந்தது. அந்த நபரின் செல்போன் மூலமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திண்டிவனம் அருகே பட்டப்பகலில் வீட்டில் இருந்த 40 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் இந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • திருமணத்தை ஒரு அவாள் வந்து நடத்தி வைத்தால்.. புரியாத மொழியில் பேசுவார்கள்
    • இந்த திருமணத்தில் எல்லோரும் தமிழில் வாழ்த்துகிறோம்

    தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக மாநில மகளிரணி பிரச்சாரக்குழுச் செயலாளர் தேன்மொழி அவர்களின் இல்லத் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு, மணமக்கள் ரூபன்சாந்தகுமார் - அனுபிரியா தம்பதியரை வாழ்த்தினார்.

    இந்த திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் பொன்முடி, "இந்த திருமணத்தை ஒரு அவாள் வந்து நடத்தி வைத்தால்.. புரியாத மொழியில் பேசுவார்கள்.. அது மந்திரம் அல்ல, என்.சி.சி. யில் சொல்லும் இந்தி கமாண்ட். அம்மாதிரி இல்லாமல் இப்போது எல்லோரும் தமிழில் வாழ்த்துகிறோம்" என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.

    • தண்டபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் அலங்காரம்.
    • மிளகாய் பொடி இடித்தல், மிளகாய் பொடி அபிஷேகம் நடைபெற்றது.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச விழா நேற்று நடந்தது.

    இவ்விழாவை முன்னிட்டு கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விழா நடைபெற்று வந்தது. நேற்று காலை தண்டபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் அலங்காரம், மகா தீபாரதனையும், காவடி பூஜையும், நடைபெற்றது.

    பிற்பகல் 2 மணி அளவில் பாலதண்டாயுதபாணி சாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்று பக்தர் ஒருவருக்கு மார்பு மீது மிளகாய் பொடி இடித்தல், மிளகாய் பொடி அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செடல் சுற்றுதல் தீமிதித்தல், தேர் வீதி உலா ஆகியவை நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தேவதானம் பேட்டை கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
    • புகாரின் பேரில் பேராசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பேராசிரியர் குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    திண்டிவனம்:

    தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு ஆசிரியர்கள், பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவருக்கு அப்பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

    தற்போது திண்டிவனத்தில் கல்லூரி மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்து கைதான சம்பவம் அரங்கேறி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இந்தக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவிக்கு பொருளாதார பேராசிரியராக குமார் பாடம் எடுத்து வருகிறார்.

    இவர் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை தொலைபேசி மூலமாகவும் மற்றும் சமூக வலைதள மூலமாகவும் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி பேராசிரியர் மாணவியின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு தவறான முறையில் பேசி பாண்டிச்சேரிக்கு போகலாம் எனக் கூறி அழைத்ததாகவும் அதற்கு மாணவி மறுத்து விட்டதாகவும் மேலும் அன்று இரவு 9 மணி அளவில் வீடியோ கால் மூலம் மாணவியின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி மாணவி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் பேராசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பேராசிரியர் குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மாவட்ட செயலாளர் நிரஞ்சனுக்கு 200-க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் வரவேற்பளிக்க திரண்டு இருந்தனர்.
    • டிரைவர் சிவச்சந்திரன் உட்பட 15 பேர் மீது மயிலம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.

    மயிலம்:

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அனைத்து மாவட்டங்களிலும் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக நிரஞ்சனை த.வெ.க தலைவர் விஜய் தேர்வு செய்துள்ளார்.

    நேற்று காலை 11 மணி அளவில் மயிலம் அடுத்துள்ள கூட்டேரிப்பட்டிற்கு வருகை தந்த கட்சியின் மாவட்ட செயலாளர் நிரஞ்சனுக்கு 200-க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் வரவேற்பளிக்க திரண்டு இருந்தனர்.

    இந்நிலையில் போலீசாரிடம் அனுமதி பெறாமல் பொது இடத்தில் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு கிரேன், பொக்லின், டாடா ஏசி போன்ற வாகனங்களை சாலையில் நிறுத்தி கூட்டேரிப்பட்டு 4 முனை சாலையில் போக்குவரத்து பாதிப்பு மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வடக்கு மாவட்ட செயலாளர் நிரஞ்சன், மணிகண்டன், ஜீவன், ரமேஷ், தனசேகர், டேவிட், ஹேமச்சந்திரன், சங்கீதா, திவாகர், பிரதாப், தவப்புதல்வன், பார்த்திபன் மற்றும் ஜே.சி.பி. டிரைவர் வெண்ணி,கிரேன் ஆபரேட்டர் பிரபாகரன், டாட்டா ஏ.சி. டிரைவர் சிவச்சந்திரன் உட்பட 15 பேர் மீது மயிலம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.

    • ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தடுக்க உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெறவேண்டும்.
    • இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக சுங்கச்சாவடிகள் உள்ளது.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கவர்னர், அரசுக்கு இடையிலான மோதல் உயர்கல்வியை பாதிக்கக்கூடாது. பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தரின் நீடிக்கப்பட்ட பதவிக்காலம் முடிவடைந்தது. பாரதியார், கல்வியியல், அண்ணா, பெரியார், அழகப்பா, அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஆறுடன் பாரதிதாசன் பல்கலைக்கழகமும் இணைந்து 7 பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. உயர்கல்விதுறையில் உள்ள 13 பல்கலைக்கழகத்தில் 11 பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி காலியாகிவிடும். துணைவேந்தர் கையெழுத்து இல்லாத சான்றிதழ்கள் செல்லதக்கது அல்ல. இந்த நிலை நீடிக்கக்கூடாது. துணைவேந்தர் நியமனம் தொடர்பான வழக்கில் சாதகமான தீர்ப்பு பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழக அரசு பள்ளிகளில் 3,192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய 2023-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணபித்தவர்களுக்கு 2024 தேர்வு நடத்தப்பட்டு மே மாதம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு தேர்வானவர்கள் பட்டியல் ஜூலை மாதம் வெளியிடப்பட்டு இன்று வரை பணிநியமன ஆணை வழங்கவில்லை. இடைநிலை ஆசிரியர்களுக்கும் போட்டி தேர்வு நடத்தப்பட்டு 6 மாதம் கடந்தும் திருத்தம் செய்யவும் அரசு முயற்சிக்கவில்லை. அரசுப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையால் 50 ஆயிரம் ஆசிரியர்கள் ஒய்வு பெற்ற நிலையில் ஒரு ஆசிரியர்கூட நியமிக்கவில்லை. பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையையும், இடைநிலை ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு முடிவை வெளியிடவேண்டும்.

    தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பாராட்டி, தேசிய அளவில் இக்கணக்கெடுப்பு நடத்த எதிர்கட்சித்தலைவர் ராகுல்காந்தி வலியிறுத்தியுள்ளார். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் தேசிய தலைமை வலியிறுத்த வேண்டும்.

    ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தடுக்க உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெறவேண்டும். ஆன்லைன் ரம்மிக்கு தமிழக அரசு தடைவிதித்தது செல்லாது என உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பின் 19 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளது. எனவே ஆன்லைன் ரம்மிக்கு தடை பெற அரசு முயற்சிக்க வேண்டும்.

    தமிழகத்தில் அடுத்த இரு ஆண்டுகளில் 963 கிமீ நீளத்திற்கு 4 வழிச்சாலைகள் பயன்பாட்டிற்கு வர உள்ளதால் சுங்கச்சாவடிகள் 90 ஆக அதிகரிக்கும் என மக்களவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் சுங்கக்கட்டணம் செலுத்த முடியாமல் செல்ல இயலாத நிலை ஏற்படும். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக சுங்கச்சாவடிகள் உள்ளது.

    அரசு மருத்துவமனைகளில் 658 சிறப்பு டாக்டர்களை நேர்காணல் மூலம் நியமிக்கும் முடிவை அரசு கைவிட்டு போட்டித்தேர்வின் மூலமே நியமிக்க வேண்டும். இப்படி நியமிக்கப்பட்டால் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை 3 ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த ஆசிரியர்கள் மீது தமிழக அரசும், காவல்துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். அரியலூர் மாவட்டம், காடுவெட்டியில் உள்ள காடுவெட்டி குருவின் சிலைக்கு அமைச்சர் சிவசங்கர் மாலை அணிவிக்க சென்றபோது வன்னியர்களுக்கு தி.மு.க. செய்த துரோகத்தை உரக்க சொல்லிய 3 பேரை போலீசார் கைது செய்ததை கண்டிக்கிறோம்.

    திருப்பரங்குன்றம் தொடர்பாக நிகழ்வில், அம்மலை யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனை 100 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. கடந்த காலங்களில் இந்துக்களும், இஸ்லாமியர்களுக்கும் கடைபிடித்த நடைமுறை தொடர்பான அமைதிக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி உடன் இருந்தார்.

    ×