search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tamarind tree"

    விழுப்புரம்:

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் இன்று அதிகாலை வரை மழை பெய்தது. இதில் கிளியனூர் அருகேயுள்ள கூத்தப்பாக்கம் பள்ளி தெருவில் இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்து அருகில் இருந்த வீடுகள் மீது இன்று காலையில் விழுந்தது.

    கான்கீரிட் வீடு என்ப தால் வீட்டிற்குள் வசித்த செல்வி (வயது 38) மற்றும் குடும்பத்தார் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பி னர். அதேசமயம் வீட்டின் மேல்பகுதி சேதமடைந்தது. மேலும், மரங்களின் கிளை கள் முறிந்து விழுந்ததில் பக்கத்தில் இருந்த 2 வீடுகளின் கழிப்பறைகள் சேத மடைந்தது.

    • நிலை தடுமாறி கோபால கிருஷ்ணன் ஓட்டி வந்த வேன் ரோட்டோரம் இருந்த புளிய மரத்தில் எதிர்பாராத விதமாக மோதியது.
    • இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரை பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 43). இவர் பொலவகாளி பாளையம் பகுதியில் இருந்து வேனில் துணி லோடு ஏற்றி கொண்டு சென்றார். அவருடன் அண்ணா மலை என்பவர் உடன் சென்றார்.

    இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் அடுத்த வடுகபாளையம் பிரிவு அருகே வேன் வந்து கொண்டு இருந்தது. அந்த வழியாக மற்றொரு வேன் வந்தது.

    அப்போது அந்த வேனை கோபாலகிருஷ்ணன் முந்த முயன்றார். அப்போது நிலை தடுமாறி கோபால கிருஷ்ணன் ஓட்டி வந்த வேன் ரோட்டோரம் இருந்த புளிய மரத்தில் எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் கோபாலகிருஷ்ணன் மற்றும் அண்ணா மலை ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் அவர்களை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழி யிலேயே கோபால கிருஷ்ணன் பரிதாபமாக இற ந்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அண்ணாமலை கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருபுவனையில் ஒரு மாதத்துக்கு முன்பு சூறை காற்றினால் சாய்ந்த புளியமரம் இதுவரை அகற்றப்படாததால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

    திருபுவனை:

    திருபுவனை கூட்டுறவு நூற்பாலை அருகே சுதானா நகர் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள இந்த பகுதியில் தனியார் பள்ளி மற்றும் 5-க் கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதற்கிடையே கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வீசிய சூறைகாற்றினால் அங்கிருந்த ராட்சத புளிய மரம் வேறோடு சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்போது மின்துறை ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு மின்துண்டிப்பை சரி செய்தனர். ஆனால் பொதுப்பணித்துறையினர் சாயந்த புளிய மரத்தை வெட்டி அகற்றவில்லை.

    புளியமரம் விழுந்து ஒரு மாதமாகியும் இதனை கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதனால் அவ்வழியே செல்லும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பெரும் பாதிப்புகுள்ளாகி வருகிறார்கள். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளும், கனரக வாகனங்கள் வரும் போது ஒதுங்கி செல்ல முடியாமல் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுப்பணித்துறையினர் போர்க்கால அடிப்படையில் சாய்ந்து விழுந்த புளிய மரத்தை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×