கிளியனூர் அருகே:வீட்டின் மீது விழுந்த புளியமரம்

கிளியனூர் அருகே:வீட்டின் மீது விழுந்த புளியமரம்
Published on

விழுப்புரம்:

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் இன்று அதிகாலை வரை மழை பெய்தது. இதில் கிளியனூர் அருகேயுள்ள கூத்தப்பாக்கம் பள்ளி தெருவில் இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்து அருகில் இருந்த வீடுகள் மீது இன்று காலையில் விழுந்தது.

கான்கீரிட் வீடு என்ப தால் வீட்டிற்குள் வசித்த செல்வி (வயது 38) மற்றும் குடும்பத்தார் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பி னர். அதேசமயம் வீட்டின் மேல்பகுதி சேதமடைந்தது. மேலும், மரங்களின் கிளை கள் முறிந்து விழுந்ததில் பக்கத்தில் இருந்த 2 வீடுகளின் கழிப்பறைகள் சேத மடைந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com