என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student impact"

    • காய்ச்சல் முகாம் நடத்தியபோது, அங்கு எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் இருந்த 7 மாணவர்களை தனிமைப்படுத்தி சோதனையை செய்தனர்.
    • கல்லூரி மீது தொடர் புகார்கள் வந்து கொண்டிருக்கிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம் அருகே உள்ள மேலத்திடியூரில் பி.எஸ்.என். என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் நெல்லை, தென்காசி மாவட்டங்கள் மட்டும் அல்லாது கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான மாணவ-மாணவிகள் படிக்கின்றனர்.

    இதனால் கல்லூரி வளாகத்திலேயே அவர்களுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது. இதுதவிர விடுமுறை காலங்களில் அரசு போட்டித்தேர்வுகள் பெரும்பாலானவை இந்த கல்லூரியில் தான் நடந்து வருகிறது.

    இந்நிலையில் இங்கு என்ஜினீயரிங் படித்துவரும் உவரியை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு சமீபத்தில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மாணவன் நாகர்கோவிலில் ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்றபோது எடுத்த பரிசோதனையில், அந்த மாணவனுக்கு விலங்குகளின் சிறுநீர் மூலம் பரவக்கூடிய 'லெப்டோஸ்பை ரோசிஸ்' எனும் எலிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த தகவல் நெல்லை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஜயசந்திரன் தலைமையில் மருத்துவக்குழுவினர் கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்தனர்.

    மேலும் அங்கு காய்ச்சல் முகாம் நடத்தியபோது, அங்கு எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் இருந்த 7 மாணவர்களை தனிமைப்படுத்தி சோதனையை செய்தனர். அதில் அவர்களுக்கும் எலிக்காய்ச்சல் உறுதியானது. இதையடுத்து உடனடியாக கல்லூரிக்கு விடுமுறை அளிக்க கல்லூரி நிர்வாகத்திற்கு சுகாதார அலுவலர் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து கல்லூரியில் அதிரடி ஆய்வு நடத்தியதில், சுத்திகரிக்கப்படாத குடிநீர், சுகாதாரமற்ற வளாகம், சுத்தமில்லாத கழிப்பறைகள், உணவு பாதுகாப்பு கூடத்தில் பாதுகாப்பு இல்லாத முறையில் உணவு தயாரிப்பு உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அனைத்து சுகாதார பணிகளையும் மேற்கொள்ளுமாறு கல்லூரி நிர்வாகத்திற்கு சுகாதாரத் துறையினர் உத்தரவிட்டனர்.

    இதனிடையே நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட அலுவலர் புஷ்பராஜ் தலைமையிலான குழுவினர் கல்லூரி உணவு கூடத்தில் ஆய்வு செய்தனர். அப்போது சமையல் செய்யும் உபகரணங்களான மாவு அரைக்கும் எந்திரம் உள்ளிட்டவைகள் சுத்தமாக இல்லாததும் அதில் புஞ்சைகள் இருந்ததும், கல்லூரி சமையலறையில் இருந்து அழுகிய காய்கறிகள் இருந்ததும், கல்லூரி வளாகத்தில் முறையான வடிகால் அமைப்பு பின்பற்றப்படவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து உணவுக்கூடத்துக்கான சான்றிதழை தற்காலிகமாக ரத்து செய்து புஷ்பராஜ் உத்தரவிட்டார்.

    இதுதொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஜயசந்திரன் கூறியதாவது:-

    கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியமான செயல்பாட்டினால் 8 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கல்லூரி மீது தொடர் புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. தற்போது கல்லூரியில் சுகாதார பணிகள் மேற்கொண்டு முழுமையாக முடிந்த பின்னரே கல்லூரியை திறக்க அறிவுறுத்தி உள்ளேன்.

    அதேநேரம் கல்லூரியில் பணியாற்றும் ஊழியர்கள், பேராசிரியர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இன்றும், நாளையும் மருத்துவ முகாம் நடத்தி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. இதற்காக சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் மருத்துவக்குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர். வருகிற புதன்கிழமை கல்லூரி திறக்கப்படும் என மாணவர்களுக்கு நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. முழுமையான சுகாதார பணிகள் முடிந்த பின்னரே திறக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

    கல்லூரியின் பின்புறம் உள்ள வெள்ளநீர் ஓடையில் இருந்து நீரை எடுத்து குடிக்க, உணவு சமைக்க பயன்படுத்தி வந்துள்ளனர். எவ்வித குளோரினேசனும் செய்யவில்லை. எனவே உடனடியாக வெளியில் இருந்து குடிநீர் விலைக்கு வாங்க வேண்டும். இல்லையெனில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுத்து குளோரினேசன் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். கல்லூரிக்கு செல்லும் குடிநீர் பைப் இணைப்புகள் தாசில்தார் மேற்பார்வையில் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருபுவனையில் ஒரு மாதத்துக்கு முன்பு சூறை காற்றினால் சாய்ந்த புளியமரம் இதுவரை அகற்றப்படாததால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

    திருபுவனை:

    திருபுவனை கூட்டுறவு நூற்பாலை அருகே சுதானா நகர் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள இந்த பகுதியில் தனியார் பள்ளி மற்றும் 5-க் கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதற்கிடையே கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வீசிய சூறைகாற்றினால் அங்கிருந்த ராட்சத புளிய மரம் வேறோடு சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்போது மின்துறை ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு மின்துண்டிப்பை சரி செய்தனர். ஆனால் பொதுப்பணித்துறையினர் சாயந்த புளிய மரத்தை வெட்டி அகற்றவில்லை.

    புளியமரம் விழுந்து ஒரு மாதமாகியும் இதனை கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதனால் அவ்வழியே செல்லும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பெரும் பாதிப்புகுள்ளாகி வருகிறார்கள். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளும், கனரக வாகனங்கள் வரும் போது ஒதுங்கி செல்ல முடியாமல் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுப்பணித்துறையினர் போர்க்கால அடிப்படையில் சாய்ந்து விழுந்த புளிய மரத்தை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கும்பகோணத்தில் நேற்று மாலை சூறைகாற்றுடன் மழை பெய்தது. குழாய் பதித்த குழியில் டிப்பர் லாரி சிக்கியதால் மாணவ-மாணவிகள் அவதி அடைந்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் மத்திய அரசின் அம்ருதிட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றது. இதையொட்டி பல இடங்களில் ரோடுகள் தோண்டப்பட்டு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன.

    இந்த நிலையில் தோண்டப்பட்ட குழிகளில் வாகனங்கள் சிக்கி வருகின்றன. கும்பகோணம் ஏ.ஆர்.ஆர். ரோட்டில் நேற்று முன்தினம் ஒரு மணல் லாரி சென்றது. அந்த லாரி குடிநீர் குழாய்க்கு தோண்டிய குழியில் சிக்கியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கும்பகோணத்தில் நேற்று மாலை சூறைகாற்றுடன் மழை பெய்தது. இதனால் கும்பகோணம் பிரம்மன் கோவில் தெருவில் குடிநீர்குழாய் பாதிக்கப்பட்ட இடத்தில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக இருந்தது. அந்த வழியாக இன்று காலை ஜல்லி ஏற்றிக் கொண்டு ஒரு டிப்பர் லாரி சென்றது. அந்த லாரியின் 2 டயர்கள் சேற்றில் சிக்கி புதைந்ததால் லாரி நடு ரோட்டில் நகர முடியாமல் நின்றது. இதனால் அப்பகுதியில் செயல்படும் 2 தனியார் பள்ளிகளில் படிக்குமு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் வாகனங்களில் செல்ல முடியாமல் நடந்து சென்றனர்.

    இதைத்தொடர்ந்து டிப்பர் லாரியை மீட்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×