search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student impact"

    திருபுவனையில் ஒரு மாதத்துக்கு முன்பு சூறை காற்றினால் சாய்ந்த புளியமரம் இதுவரை அகற்றப்படாததால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

    திருபுவனை:

    திருபுவனை கூட்டுறவு நூற்பாலை அருகே சுதானா நகர் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள இந்த பகுதியில் தனியார் பள்ளி மற்றும் 5-க் கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதற்கிடையே கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வீசிய சூறைகாற்றினால் அங்கிருந்த ராட்சத புளிய மரம் வேறோடு சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்போது மின்துறை ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு மின்துண்டிப்பை சரி செய்தனர். ஆனால் பொதுப்பணித்துறையினர் சாயந்த புளிய மரத்தை வெட்டி அகற்றவில்லை.

    புளியமரம் விழுந்து ஒரு மாதமாகியும் இதனை கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதனால் அவ்வழியே செல்லும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பெரும் பாதிப்புகுள்ளாகி வருகிறார்கள். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளும், கனரக வாகனங்கள் வரும் போது ஒதுங்கி செல்ல முடியாமல் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுப்பணித்துறையினர் போர்க்கால அடிப்படையில் சாய்ந்து விழுந்த புளிய மரத்தை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கும்பகோணத்தில் நேற்று மாலை சூறைகாற்றுடன் மழை பெய்தது. குழாய் பதித்த குழியில் டிப்பர் லாரி சிக்கியதால் மாணவ-மாணவிகள் அவதி அடைந்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் மத்திய அரசின் அம்ருதிட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றது. இதையொட்டி பல இடங்களில் ரோடுகள் தோண்டப்பட்டு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன.

    இந்த நிலையில் தோண்டப்பட்ட குழிகளில் வாகனங்கள் சிக்கி வருகின்றன. கும்பகோணம் ஏ.ஆர்.ஆர். ரோட்டில் நேற்று முன்தினம் ஒரு மணல் லாரி சென்றது. அந்த லாரி குடிநீர் குழாய்க்கு தோண்டிய குழியில் சிக்கியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கும்பகோணத்தில் நேற்று மாலை சூறைகாற்றுடன் மழை பெய்தது. இதனால் கும்பகோணம் பிரம்மன் கோவில் தெருவில் குடிநீர்குழாய் பாதிக்கப்பட்ட இடத்தில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக இருந்தது. அந்த வழியாக இன்று காலை ஜல்லி ஏற்றிக் கொண்டு ஒரு டிப்பர் லாரி சென்றது. அந்த லாரியின் 2 டயர்கள் சேற்றில் சிக்கி புதைந்ததால் லாரி நடு ரோட்டில் நகர முடியாமல் நின்றது. இதனால் அப்பகுதியில் செயல்படும் 2 தனியார் பள்ளிகளில் படிக்குமு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் வாகனங்களில் செல்ல முடியாமல் நடந்து சென்றனர்.

    இதைத்தொடர்ந்து டிப்பர் லாரியை மீட்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×