என் மலர்
உள்ளூர் செய்திகள்

கண்டமங்கலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
- வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்டமங்கலம்:
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே பள்ளிப்புதுப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட அரங்கநாதபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமம் புதுவை மாநிலம் ஏரிப்பாக்கத்தை ஒட்டி அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கதிர்வேல் (வயது 55) தனது தாய் ஆனந்தாயுடன் வசித்து வருகிறார்.
ஏரிப்பாக்கத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கு வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்கள்.
அந்த நேரம் பார்த்து மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து மரபீரோவில் இருந்த செயின், அரசு உதவித்தொகை பெற்றதில் மீதி சேமித்து வைத்த ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டார்கள்.
கும்பாபிஷேகத்திற்கு சென்று வீட்டுக்கு வந்து பார்த்த போது நகை-பணம் கொள்ளை போனதை கண்டு ஆனந்தாய், கதிர்வேல் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கண்டமங்கலம் போலீசில் ஆனந்தாய் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பாபிஷேகத்திற்கு சென்ற போது வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






