search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வு : திருப்பூர் மாவட்டத்தில் 3,393 பேர் எழுதினர்
    X

    தேர்வு எழுதுவதற்காக வரிசையில் காத்திருந்ததை படத்தில் காணலாம். 

    சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வு : திருப்பூர் மாவட்டத்தில் 3,393 பேர் எழுதினர்

    திருப்பூர் :

    தமிழகத்தில் 444 நேரடி சப்-இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு இன்று காலை நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் 3ஆயிரத்து 393 பேர் தேர்வு எழுதினர்.

    திருப்பூர் அங்கேரிபாளையம் சாலையில் உள்ள பிஷப் ஸ்கூல், மற்றும் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 மையங்களில் தேர்வு நடைபெற்றது. காலை 10 மணி முதல் 12.30 மணி வரையும், மாலை 3 மணி முதல் 5.10 மணி வரை என இரு பிரிவாக தேர்வுகள் நடைபெற்றது. தேர்வு மையங்களுக்கு இன்று காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தேர்வாளர்கள் குவிந்தனர்.நீண்ட வரிசையில் காத்திருந்த தேர்வாளர்களை போலீசார் தீவிர சோதனை நடத்தி அதன் பின்னர் தேர்வு மையத்துக்குள் அனுமதித்தனர்.

    மேலும் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×