என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி பற்றி எரிய தொடங்கியது.
    • தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

    பொன்னேரி:

    திருவொற்றியூரை சேர்ந்தவர் ஹரீஸ். இவர் மீஞ்சூர் பஜாரில் மரக்கடை வைத்து உள்ளார். நேற்று மாலை ஊழியர்கள் மரக்கடையில் வேலைபார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென மரக்கடையில் தீவிபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி பற்றி எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கடையில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே வந்தனர்.

    தகவல் அறிந்ததும் செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் அங்கிருந்த மரப்பொருட்கள் எரிந்து நாசமானது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

    • மனவேதனை அடைந்த ராஜேஸ்வரி, ராமகிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • வடிவேலுவை தாக்கியதாக ராஜேஸ்வரியின் சகோதரரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவொற்றியூர்:

    ஆர்.கே.நகர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் வடிவேல். இவரும் திருவொற்றியூரை சேர்ந்த ராஜேஸ்வரியும் (வயது19) கடந்த 6 மாதத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இந்தநிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் ராஜேஸ்வரி பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். இது தொடர்பாக அவரை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த ராஜேஸ்வரி, ராமகிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதற்கிடையே வடிவேலுவை தாக்கியதாக ராஜேஸ்வரியின் சகோதரரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர்.
    • தற்கொலை குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரை சேர்ந்தவர் ஆசீர்வாதம் (வயது40). தொழிலாளி. இவரது மனைவி நிஷா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இரவு கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆசீர்வாதம் தான் விரும்பிய வேறு ஒரு நிகழ்ச்சியை பார்க்க டி.வி. சேனலை மாற்றுமாறு கூறினார். மேலும் மனைவியிடம் இருந்த ரிமோட்டையும் கேட்டார். ஆனால் அவரது மனைவி நிஷா டி.வி. ரிமோட்டை கொடுக்க மறுத்து அவர் பார்த்து கொண்டு இருந்த டி.வி. நிகழ்ச்சியையும் மாற்ற மறுத்தார்.

    இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆசீர்வாதம் அறையில் இருந்து வெளியே வந்து மகனை தாக்கியதாக தெரிகிறது. இதனால் மனைவியுடன் மீண்டும் மோதல் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து கோபித்துக் கொண்ட ஆசீர்வாதம் பெரும்பாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இதேபோல் அவரது மனைவி நிஷாவும் கொண்டஞ்சேரியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். இந்தநிலையில் வீட்டுக்கு திரும்பி வந்த ஆசீர்வாதம் திடீரென அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் இந்த விபரீத முடிவை எடுத்து இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 8 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள், பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    பொன்னேரி அருகே உள்ள சின்ன வேண்பாக்கம் செல்லியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் லோகம்மாள். இவர் கடந்த 14-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருப்பதி சென்றார்.

    பின்னர் நேற்று காலை அவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள், பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    லோகம்மாள் குடும்பத்துடன் வெளியூர் சென்று இருப்பதை நோட்டமிட்டு மர்ம கும்பல் கைவரிசை காட்டி இருப்பது தெரிந்தது. இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த நபர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குடிமகன்களின் ஆடைகள் விலகி இருப்பதால் பொதுமக்கள், பள்ளி- கல்லூரி மாணவர்கள் முகம் சுளித்தபடி செல்கின்றனர்.
    • பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் அரசு அனுமதி பெற்ற பார் திறக்க வேண்டும்.

    பொன்னேரி:

    பொன்னேரி, மீஞ்சூர், திருப்பாலைவனம், காட்டூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 20-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த மதுக்கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகின்றன. தற்போது இப்பகுதியில் அரசு அனுமதி பெற்ற பார் இல்லாததால் குடிமகன்கள் மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு அருகில் உள்ள கடைகள், பஸ் நிலையம், வணிக வளாகம், சாலை ஓரங்கள், மரத்தடி பகுதிகள், வயல்வெளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் நடமாடும் பகுதியில் மதுகுடிக்கிறார்கள்.

    பின்னர் மதுபாட்டில்களை அங்கேயே உடைத்தும் போடுகின்றனர். இதனால் போக்குவரத்திற்கு இடையூறாக சாலை ஓரங்களில் பாட்டில்கள் குவியலாக கிடக்கின்றன. மேலும் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு சாலை ஓரங்களில் போதையில் படுத்து கிடக்கிறார்கள். அவ்வாறு கிடக்கும் குடிமகன்களின் ஆடைகள் விலகி இருப்பதால் பொதுமக்கள், பள்ளி- கல்லூரி மாணவர்கள் முகம் சுளித்தபடி செல்கின்றனர்.

    இது குறித்து குடிமகன்கள் கூறுகையில், 'டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு குடிப்பதற்கு இடம் கிடைக்காததால் வேறு வழி இல்லாமல் சாலையின் அருகே மது குடிக்கிறோம். பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் அரசு அனுமதி பெற்ற பார் திறக்க வேண்டும்' என்றனர்.

    • கோவில் குளம் மற்றும் காக்களூர் ஏரியில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
    • ஆதி அத்திவரதர் சயன குளத்தில் காட்சியளிக்கும் அத்திவரதர் குளத்தில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் வைத்திய வீரராகவர் பெருமாள் கோவிலில் மகாளய அமாவாசையையொட்டி இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். இக்கோயிலில் தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    இந்த ஆண்டு புரட்டாசி கடைசி சனிக்கிழமையான இன்று மகாளய அமாவாசை வந்துள்ளது. இதனால் திருவள்ளூர் வைத்திய வீரராகவர் பெருமாள் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கோவில் குளம் மற்றும் காக்களூர் ஏரியில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் கோவிலுக்கு சென்று மூலவர் வீரராகவர் பெருமாளை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். சுமார் 3 மணி நேரம் காத்திருந்து வழிபட்டனர்.

    மகாளய அமாவாசையையொட்டி நேற்று இரவே வீரராகவர் கோவிலுக்கு, சென்னை, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து இருந்தனர்.

    இன்று காலையிலேயே அவர்கள் கோவிலுக்கு வந்ததால் கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காட்சி அளித்தது. இதையொட்டி திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் திருவள்ளூர் நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தது.

    காஞ்சிபுரத்தில் மகாளய அமாவாசையையொட்டி கோவில் குளக்கரை மற்றும் பல்வேறு பகுதிகளில் பொது மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு அதிகாலை முதலே தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

    காஞ்சிபுரம் அடுத்த சாந்தால் ஈஸ்வரர் திருக்கோவிலில் நீண்ட வரிசையில் நின்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதேபோன்று ஆதி அத்திவரதர் சயன குளத்தில் காட்சியளிக்கும் அத்திவரதர் குளத்தில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    மகாளய அமாவாசையையொட்டி பொன்னேரி பகுதியில் உள்ள சிவன் கோவில் தெப்ப குளக்கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இன்று அதிகாலை முதலே பொன்னேரி கிருஷ்ணாபுரம், மெதூர், பழவேற்காடு, பெரியமனேபுரம், ஆலாடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர்.

    • கூட்டத்தில் சங்க பொது செயலாளர் மணலி என். மாரிமுத்து தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • கூட்டத்தில் மணலி தலைவர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மணலி வணிகர் சங்க ஆலோசனை கூட்டம் சங்க அலுவலகத்தில் சங்க நிதி குழு தலைவர் சந்தனா என். சேகர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு வடசென்னை வடக்கு மாவட்ட பொருளாளர் ராஜா சங்கர், நிதிக்குழு செயலாளர் சமுத்திர பாண்டியன், பொருளாளர் எஸ். எஸ். காட்வின், செயலாளர்கள் கருணாமூர்த்தி, ராஜேஷ், வேதா, துணை தலைவர் ராதாகிருஷ்ணன், முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சங்க பொது செயலாளர் மணலி என். மாரிமுத்து தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் ஏ. எம். விக்ரம ராஜாவின் கோரிக்கையை ஏற்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூபாய் 50 ஆயிரத்துக்குட்பட்ட நிலுவை வரிகளை அடியோடு ரத்து செய்தும் அதற்கு மேல் உள்ள நிலுவை வரியினை எந்தவித அபராதமும் இன்றி, 50 சதவீதம் கட்டினால் போதும் என்று ஆணை பிறப்பித்துள்ளதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வணிகர் சங்க இளைஞரணி மாவட்ட செயலாளர் சோலை கணேஷ், கனிராஜன், வேல்முருகன், சூர்யா, சரவணன், தேவேந்திரன் மற்றும் மகளிர் அணி தலைவி சுபத்ரா, மணலி தலைவர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சாந்தம்மாளின் மகன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
    • பூட்டி இருந்த சாந்தம்மாளின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த வெண்மனம்புதுார் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தம்மாள்(வயது80). இவர் மகனுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சாந்தம்மாளின் மகன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இதனால் வீட்டில் சாந்தம்மாள் மட்டும் தனியாக இருந்தார்.

    இந்த நிலையில் பூட்டி இருந்த சாந்தம்மாளின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் கடம்பத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் சாந்தம்மாள் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மக்கள் பலமுறை வட்டாட்சியர், மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்து இருந்தனர்.
    • சுடுகாட்டு பிரச்சினை தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த காவல்பட்டியில் கிராமத்திற்கு செல்லும் சாலை அருகே சுடுகாடு உள்ளது. இங்கு இறந்தவர்கள் உடலை எரிப்பதற்கும், புதைப்பதற்கும் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் பலமுறை வட்டாட்சியர், மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்து இருந்தனர். ஆனால் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்ப டவில்லை என்று தெரிகிறது.

    இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த மணி என்பவர் இறந்து போனார். அவரது உடலை சர்ச்சைக்குரிய சுடுகாட்டில் புதைத்து சென்றனர்.

    இதுபற்றி அறிந்ததும் எதிர்ப்பு தெரிவித்து வந்த தரப்பை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்தனர்.

    அவர்கள் சுடுகாட்டில் உடல்களை புதைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்னேரி -பழவேற்காடு சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். காவல்பட்டியில் இருந்து உப்பளம் வரை ஏராளமான வாகனங்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் அணி வகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் மெதூர் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், திருப்பாலைவனம் வருவாய் ஆய்வாளர் பகுருதீன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். சுடுகாட்டு பிரச்சினை தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கூறும்போது, கிராமத்திற்குள் வரும் சாலை அருகே சுடுகாடு உள்ளதால் அவ்வழியாக செல்லும் பள்ளிகுழந்தைகள், பெண்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே மாற்று சுடுகாட்டில் உடல்களை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யவேண்டும் என்றனர்.

    • படுகாயம் அடைந்த சிறுமியை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • கைதான கோபால் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    பழவேற்காடு அடுத்த அரங்கம் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (38). இவர்அதே பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவரின் 3 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்தார்.

    இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி வலியால் அலறி துடித்தார். சத்தம் கேட்டு திரண்ட அப்பகுதி மக்கள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோபாலை சுற்றிவளைத்து பிடித்து கயிற்றால் கட்டினர். பின்னர் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கோபாலை மீட்டு கைது செய்தனர்.

    மேலும் படுகாயம் அடைந்த சிறுமியை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கைதான கோபால் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வழக்கு விசாரணை பொன்னேரி 4-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
    • வழக்கு விசாரணையின்போதே முருகன், சண்முகம் ஆகியோர் இறந்து போனார்கள்.

    பொன்னேரி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்ன சோழியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது28). பெண் தகராறு காரணமாக கடந்த 2012-ம் ஆண்டு யுவராஜ் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த முருகன், தங்கராஜ், ராமச்சந்திரன், ராம மூர்த்தி, ஸ்ரீராமலு, சண்முகம், மணி ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கு விசாரணை பொன்னேரி 4-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போதே முருகன், சண்முகம் ஆகியோர் இறந்து போனார்கள். இதைத்தொடர்ந்து மற்ற 5 பேர் மீது வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி கிருஷ்ணசாமி தீர்ப்பு வழங்கினார். அதில் கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இறந்து போன முருகன், சண்முகம் ஆகியோரை தவிர்த்து தங்கராஜ், ராமச்சந்திரன், ராமமூர்த்தி, ஸ்ரீராமலு, மணி ஆகிய 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கில் அரசு சார்பாக அரசு குற்றவியல் வழக்கறிஞர் கே.ஆர் லாசர் ஆஜரானார்.

    • சுதாகர் பெரியபாளையத்தில் உள்ள லாட்ஜில் வேலை பார்த்து வந்தார்.
    • விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள வடமதுரை ஊராட்சி தல்லேரி தெருவில் வசித்து வந்தவர் சுதாகர் (வயது38). இவர் பெரியபாளையத்தில் உள்ள லாட்ஜில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று மாலை வேலை முடிந்து அவர் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். பெரியபாளையத்தில் உள்ள வங்கி அருகே சென்றபோது எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிய சுதாகர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×