என் மலர்
திருப்பூர்
- பாரதியின் உயிருக்கு ஆபத்து என்பதால் பெண் போலீஸ் கோகிலா தைரியமாக ஆட்டோவில் வைத்தே அவருக்கு பிரசவம் பார்த்தார்.
- கோகிலாவை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள், போலீசார், பொதுமக்கள் பாராட்டினர்.
திருப்பூர்:
சுதந்திர தினத்தையொட்டி நேற்றிரவு திருப்பூர் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்திற்குட்பட்ட திருமுருகன்பூண்டி ரிங் ரோடு ஏ.வி.பி., பள்ளி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவு 12 மணி அளவில் அந்த வழியாக ஆட்டோ ஒன்று வந்தது. அதில் வந்த பெண் கதறி அழுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் போலீஸ் கோகிலா மற்றும் போலீசார் உடனே ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பாரதி என்பவரை பிரசவத்திற்காக இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அவரது கணவர் அழைத்து செல்வது தெரியவந்தது.
மேலும் பாரதிக்கு பாதி குழந்தை வெளியே வந்த நிலையில் அவர் கதறி துடித்தார். ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்கு முன் குழந்தை பிறந்து விடும் என்பதாலும், பாரதியின் உயிருக்கு ஆபத்து என்பதாலும் நர்சிங் படித்திருந்த பெண் போலீஸ் கோகிலா தைரியமாக ஆட்டோவில் வைத்தே பாரதிக்கு பிரசவம் பார்த்தார். இதில் அழகான பெண் குழந்தை பிறந்தது.
இதனைத்தொடர்ந்து உடனடியாக பாரதி மற்றும் குழந்தையை திருப்பூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்த நிலையில் தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர்.
பாரதிக்கு பிரசவம் பார்த்து அவரது உயிரை காப்பாற்றிய கோகிலாவை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள், போலீசார், பொதுமக்கள் பாராட்டினர்.
இதுதொடர்பாக கோகிலா கூறுகையில், நர்சிங் படித்துள்ள நான் மருத்துவமனைகளில் பணியாற்றி உள்ளேன். பிரசவங்களும் பார்த்துள்ளேன். சில மாதங்களுக்கு முன்புதான் தமிழக காவல்துறை பணியில் சேர்ந்தேன். பிரசவம் பார்த்த அனுபவம் இருந்ததால் எந்தவித பதற்றமின்றி நேற்றிரவு பாரதிக்கு பிரசவம் பார்த்தேன். தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர் என்றார்.
- உங்களுடன் ஸ்டாலின் திட்டம் சூப்பர் ஹிட் ஆனதை பொறுக்க முடியாமல் நீதிமன்றம் சென்றார் எடப்பாடி பழனிசாமி.
- ஊர் ஊராக சுந்தரா டிராவல்ஸ் பேருந்தில் சென்று பொய்களை உரக்க பேசினால் மக்கள் நம்பிவிடுவர் என நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
உடுமலை:
உடுமலையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* அ.தி.மு.க. ஆட்சியில் திருப்பூர் புறக்கணிப்பட்டது.
* அ.தி.மு.க. ஆட்சியில் திருப்பூர் மாவட்டத்திற்கு ஏதாவது செய்திருக்கிறார்களா?
* திருப்பூரில் கலைஞர் அறிவித்த 5 பாலங்கள் அமைக்க உத்தரவிட்ட நிலையில், பணியை முடக்கியது அ.தி.மு.க. ஆட்சி.
* அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட 3 ரெயில்வே பாலம் உள்பட 5 பாலங்கள் தி.மு.க. ஆட்சியில் மீண்டும் நடைபெறுகிறது.
* அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை தி.மு.க. ஆட்சியில் பணி முடித்து செயல்படுத்தி வருகிறோம்.
* உங்களுடன் ஸ்டாலின் திட்டம் சூப்பர் ஹிட் ஆனதை பொறுக்க முடியாமல் நீதிமன்றம் சென்றார் எடப்பாடி பழனிசாமி.
* ஊர் ஊராக சுந்தரா டிராவல்ஸ் பேருந்தில் சென்று பொய்களை உரக்க பேசினால் மக்கள் நம்பிவிடுவர் என நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
* அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு நீதிமன்றத்தை நாடாதீர் என கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் அபராதமும் விதித்தது.
* எடப்பாடி பழனிசாமி எந்த தைரியத்தில் மேற்கு மண்டலத்தில் இருந்து பிரசார பயணத்தை தொடங்கினார்?
* எந்த தைரியத்தில் திருப்பூரில் இருந்து தேர்தல் பிரசாரத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கினார் என தெரியவில்லை.
* அ.தி.மு.க.வின் தோல்விப்பயணம் இதே மேற்கு மண்டலத்தில் இருந்து தொடங்கிவிட்டது என்றார்.
- தி.மு.க. ஆட்சியில் திருப்பூர் மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
- காங்கேயம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட உள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அரசு விழாவில் பங்கேற்ற பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* அண்ணா, கலைஞர் படங்களில் பாடல் இயற்றிய நாராயண கவியின் சொந்த ஊர் உடுமலை. இயற்கை எழில் சூழ்ந்து, சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு இனிப்பான சர்க்கரை அள்ளித்தரும் ஊர் உடுமலை.
* இயற்கை, கலை, இலக்கியம் என அனைத்து துறைகளின் கோட்டை தான் உடுமலைப்பேட்டை.
* ஆறுகள், மலைகள் என இயற்கை எழில் சூழ்ந்த உடுமலைக்கு வந்ததில் மகிழ்ச்சி.
* பெரியாரும், அண்ணாவும் சந்தித்த திருப்பூர் மாவட்டங்களில் இன்று விழா நடைபெறுகிறது.
* தி.மு.க. ஆட்சியில் திருப்பூர் மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
* காங்கேயம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட உள்ளது.
* தாராபுரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தப்பட உள்ளது.
* ரூ.172 கோடியில் நொய்யல் ஆறு மேம்பாடு செய்யப்பட உள்ளது. கீழக்கோவிலில் பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.
* திருப்பூர் நியோ டைடல் பூங்கா, 7 ஊராட்சிகளுக்கு கூட்டுக்குடிநீர் செயல்படுத்தப்பட உள்ளது.
* நீராறு, நல்லாறு, ஆனைமலையாறு திட்டப்பணிகளை விரைவில் செயல்படுத்த உள்ளோம்.
* பரம்பிக்குளம் ஆழியாறு பாசனப்பகுதியை தூர்வாற ரூ.10 கோடி ஒதுக்கப்படும்.
* நவீன வசதிகளுடன் ரூ.9 கோடியில் மாவட்ட மைய நூலகம் அமைக்கப்படும். ரூ.5 கோடியில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம், உப்பாற்றின் குறுக்கே ரூ.7 கோடியில் புதிய தடுப்பனை கட்டப்படும்.
* ரூ.6.5 கோடியில் புதிய வெண்ணெய் தொழிற்சாலை அமைக்கப்படும்.
* அரசு பள்ளிக்கு நிலம் அளித்த சாதிக் பாட்ஷா பெயரில் சாலை அமைக்கப்படும் என்றார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
- முதலமைச்சர் கார் மூலம் திருப்பூர் மாவட்டம் உடுமலை சென்றார் .
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் கள ஆய்வுப்பணி மேற்கொள்கிறார்.
இதற்காக நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ சென்றார். வழிநெடுக பொதுமக்கள் கூடிநின்று அவரை வரவேற்றனர்.
இதனையடுத்து முதலமைச்சர் கார் மூலம் திருப்பூர் மாவட்டம் உடுமலை சென்றடைந்தார். .
இந்நிலையில், உடுமலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் திடலுக்கு வரும் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறமும் நின்று பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- அருவியின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
- பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள பஞ்சலிங்க அருவியில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரு மூர்த்தி மலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்தநிலையில் அருவியின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும் பின்பு இயல்புநிலை திரும்புவதுமாக உள்ளது.
இந்தநிலையில் அருவியின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக இன்று பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. விடுமுறை நாளான இன்று அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
- ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்க்கை, உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகள் குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார்.
- உடுமலை நகர தி.மு.க. அலுவலக புதிய கட்டிடத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
உடுமலை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் கள ஆய்வுப்பணி மேற்கொள்கிறார்.
இதற்காக இன்று மாலை 5.25 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வரும் அவர், அங்கிருந்து கார் மூலம் திருப்பூர் மாவட்டம் உடுமலை செல்கிறார்.
2026 சட்டமன்ற தேர்தல் வியூகம் தொடர்பாக திருப்பூர் மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்க்கை, உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகள் குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார். இரவு உடுமலை அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு உடுமலை நகராட்சி சார்பில் வாரச்சந்தை வளாகத்தில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் முழு உருவ வெண்கல சிலைகளை திறந்து வைக்கிறார். பின்னர் உடுமலை நேதாஜி மைதானத்தில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.949 கோடியே 53 லட்சம் மதிப்பில், 61 முடிவுற்ற பணிகளை திறந்து வைப்பதுடன், ரூ.182 கோடியே 6 லட்சம் மதிப்பில் 35 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
நகராட்சித்துறையின் சார்பில் ரூ.34 கோடியே 80 லட்சம் மதிப்பில் திருப்பூர் மாநகராட்சி கோவில் வழி யில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலையம், திருப்பூர் வேலம்பாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.41 கோடி மதிப்பில் 100 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம், திருமுருகன்பூண்டியில் ரூ.39.44 கோடி மதிப்பில் கட்டப் பட்டுள்ள டைடல் பூங்கா ஆகியவற்றை காணொலி மூலம் திறந்து வைக்கிறார்.
மேலும் ரூ.295 கோடியே 29 லட்சம் மதிப்பில் 19,785 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.
பின்னர் 11.30 மணிக்கு உடுமலை நகர தி.மு.க. அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார். பகல் 12 மணிக்கு கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு புறப்பட்டு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொள்ளாச்சி யில் உள்ள பரம்பிக்குளம் ஆழியார் திட்ட வளாகத்தில் பி.ஏ.பி., பாசன திட்டம் அமைய காரணமானவர்களான காமராஜர், சி.சுப்பிர மணியம், வி.கே.பழனிச்சாமி கவுண்டர், பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோரின் முழு உருவ சிலைகளை திறந்து வைக்கிறார்.
அதன்பிறகு பரம்பிக்குளம் ஆழியாறு அணை கட்டுமான பணியின் போது உயிரிழந்த தொழிலாளர்களின் நினை வரங்கத்தை திறந்து வைக்கிறார். மதியம் 2 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
உடுமலையில் 2 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். கோவை, மடத்துக்குளம், உடுமலை உள்ளிட்ட இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
- அரசு மரியாதையுடன் எஸ்எஸ்ஐ சண்முகவேல் உடல் தகனம் செய்யப்பட்டது.
- மூர்த்தியின் மற்றொரு மகன் மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார் /
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க. மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் அப்பா, மகன் உள்ளிட்ட 4 பேரும் மோதலில் ஈடுபட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து அங்கு எஸ்.ஐ. சண்முகவேல் மற்றும் காவலர் சென்றுள்ளனர். மோதலை தடுத்து எஸ்.ஐ. சண்முகவேல் சமாதானப்படுத்த முயன்றபோது அவர்கள் சண்முகவேல் வெட்டி கொன்றுள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ சண்முகவேல் உடலுக்கு காவல் துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதனையடுத்து அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், எஸ்எஸ்ஐ சண்முகவேல் கொலை வழக்கில் மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கப்பாண்டியன் ஆகிய 2 பேர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரண் அடைந்தனர்.
இந்நிலையில், தங்கப்பாண்டி, நீதிமன்றத்தில் இருந்து தற்போது வெளியே கூட்டி வரப்பட்டபோது "எங்கள் உயிருக்கு காவல்துறையால் ஆபத்து உள்ளது. எங்க அண்ணனை கொலை செஞ்சிட்டாங்க... கண்ண கட்டி கூட்டிட்டு போய் சுடறதுக்கு நாங்கதான் கிடச்சோமா?..." என கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முன்னதாக தங்கபாண்டியின் சகோதரரும், கொலையில் சம்பந்தம் உள்ளவர் என சொல்லப்படுபவருமான மணிகண்டன் இன்று காவல்துறையினரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அரசு மரியாதையுடன் எஸ்எஸ்ஐ சண்முகவேல் உடல் தகனம் செய்யப்பட்டது.
- மூர்த்தியின் மற்றொரு மகன் மணிகண்டன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க. மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் அப்பா, மகன் உள்ளிட்ட 4 பேரும் மோதலில் ஈடுபட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து அங்கு எஸ்.ஐ. சண்முகவேல் மற்றும் காவலர் சென்றுள்ளனர்.
மோதலை தடுத்து எஸ்.ஐ. சண்முகவேல் சமாதானப்படுத்த முயன்றபோது அவர்கள் சண்முகவேல் வெட்டி கொன்றுள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ சண்முகவேல் உடலுக்கு காவல் துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதனையடுத்து அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், எஸ்எஸ்ஐ சண்முகவேல் கொலை வழக்கில் மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கப்பாண்டியன் ஆகிய 2 பேர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரண் அடைந்தனர்.
இதனிடையே மூர்த்தியின் மற்றொரு மகன் மணிகண்டன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கில் கைதான தந்தை மூர்த்தி, மகன் தங்கபாண்டிக்கு 15 நாட்கள் (ஆகஸ்ட் 21 வரை) நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- திருமணத்தின்போது பிரீத்திக்கு 120 பவுன் நகை, சொகுசு கார், ரூ.25 லட்சம் வரதட்சணையாக பெற்றோர் கொடுத்ததாக கூறப்படுகிறது.
- கடந்த மாதம் 11-ந்தேதி ஈரோட்டில் இருந்து புறப்பட்டு திருப்பூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.
திருப்பூர்:
திருப்பூர் கே.செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. தொழில் அதிபர். இவரது மனைவி சுகந்தி. இந்த தம்பதியின் மகள் பிரீத்தி (வயது 26). இவருக்கும், ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தை சேர்ந்த என்ஜினீயரான சதீஸ்வர் (30) என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது பிரீத்திக்கு 120 பவுன் நகை, சொகுசு கார், ரூ.25 லட்சம் வரதட்சணையாக பெற்றோர் கொடுத்ததாக கூறப்படுகிறது.
கணவர் மற்றும் மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் பிரீத்தி கோபித்துக்கொண்டு, கடந்த மாதம் 11-ந்தேதி ஈரோட்டில் இருந்து புறப்பட்டு திருப்பூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.
பிரீத்தியின் பெற்றோர், சின்னக்கரையில் உள்ள சொத்தை சமீபத்தில் விற்பனை செய்துள்ளனர். இதில் பிரீத்தியின் பங்காக ரூ.50 லட்சம் வந்துள்ளது. அந்த பணத்தை சதீஸ்வர், தனக்கு கொடுக்குமாறு மனைவியிடம் தொடர்ந்து கேட்டதாக தெரிகிறது. இதனால் பிரீத்தி மனம் உடைந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெற்றோர் வீட்டில் சோகமாக இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரீத்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் பற்றி அறிந்ததும் நல்லூர் போலீசார் விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வரதட்சணை கொடுமையால் பிரீத்தி தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர், உறவினர்கள் குற்றம்சாட்டினர். மேலும் பிரீத்தியின் கணவர் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்பிறகே உடலை பெறுவோம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வரதட்சணை புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருப்பூர் ஆர்.டி.ஓ. மோகனசுந்தரம், பிரீத்தியின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.
இந்தநிலையில் நல்லூர் போலீசார் பிரீத்தியின் கணவர் சதீஸ்வர், மாமனார் விஜயகுமார், மாமியார் உமா ஆகியோரிடம் விசாரணை நடத்திய நிலையில், இன்று காலை 3பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ., மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவினாசியில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் ரிதன்யா தற்கொலை செய்த நிலையில், திருப்பூரில் மீண்டும் மற்றொரு இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- இந்த வரி உயர்வால் அமெரிக்க நுகர்வோர் தான் பாதிக்கப்படுவார்கள்.
- அமெரிக்க வரி விதிப்பால் திருப்பூரில் பின்னலாடை தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு பாதிக்கப்படாது.
திருப்பூர்:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்திய பொருட்கள் இறக்குமதிக்கு 25 சதவீத வரியை உயர்த்திய நிலையில் கூடுதலாக 25 சதவீத வரியை உயர்த்தி அறிவித்துள்ளார். இதனால் இந்திய பொருட்கள் விலை அமெரிக்காவில் உயர்வதன் காரணமாக வர்த்தகம் பெருமளவில் பாதிக்கும்.
குறிப்பாக அமெரிக்காவுக்கான பின்னலாடைகள் ஏற்றுமதி ரூ.12,000 கோடி அளவில் பாதிக்கும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், இந்த வரி விதிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது. மத்திய அரசு இது தொடர்பாக உடனடியாக பேசி தீர்வு காண வேண்டும். இந்த வரி உயர்வால் அமெரிக்க நுகர்வோர் தான் பாதிக்கப்படுவார்கள். 100 ரூபாய் ஆடைகள் இனி ரூ.150ஆக உயரும். அவற்றை வாங்க முடியாமல் அமெரிக்க நுகர்வோர்கள் தான் பாதிக்கப்படுவார்கள்.
இந்தியாவுக்கான வரி உயர்வை போட்டி நாடுகளான பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகள் பயன்படுத்தும் பட்சத்தில் நமக்கு கிடைக்கக்கூடிய அமெரிக்க ஆர்டர்கள் பாதிக்கும்.
அமெரிக்க வரி விதிப்பால் திருப்பூரில் பின்னலாடை தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு பாதிக்கப்படாது. இங்கிலாந்துடன் வரியில்லா ஒப்பந்தம் செய்து கொண்டதால் ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிக அளவு ஆர்டர்கள் திருப்பூருக்கு கிடைக்கும். இதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளதே தவிர குறைவதற்கு வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- உப்பாரு அணை ஓடை அருகே ஆயுதத்தை மறைத்து வைத்ததாக மணிகண்டன் கூறினான்.
- அரிவாளுடன் துரத்தி வந்து என்னை கையில் மணிகண்டன் வெட்டினான்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் நேற்று சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் கொலை வழக்கில் மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கப்பாண்டியன் ஆகிய 2 பேர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று சரண் அடைந்தனர். மேலும் தலைமறைவாக இருந்த மணிகண்டன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்த போலீசார் அவனை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றபோது போலீசாரை அரிவாளால் தாக்க முயன்றுள்ளார்.
மணிகண்டன் வெட்டியதில் காவல் உதவி ஆய்வாளர் சரவணனுக்கு கையில் காயம் ஏற்பட்ட நிலையில், அவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.
இந்நிலையில் என்கவுண்டர் நடந்தபோது என்ன நிகழ்ந்தது என்பது குறித்து காயமடைந்த உதவி ஆய்வாளர் சரவணன் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
உப்பாரு அணை ஓடை அருகே ஆயுதத்தை மறைத்து வைத்ததாக மணிகண்டன் கூறினான். ஆயுதத்தை எடுப்பதற்காக மணிகண்டனை அங்கு அழைத்து சென்றோம்.
அரிவாளை எடுத்து எங்களை மணிகண்டன் துரத்த ஆரம்பித்தான். ஆயுதத்தை கீழே போடுமாறு இன்ஸ்பெக்டர் எச்சரித்தும் மணிகண்டன் கேட்கவில்லை.
அரிவாளுடன் துரத்தி வந்து என்னை கையில் மணிகண்டன் வெட்டினான். என் மீது தாக்குதல் நடத்திய பின்னர் தற்காப்பிற்காக இன்ஸ்பெக்டர்தான் சுட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சண்முகவேல் கொலை வழக்கில் 2 பேர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரண் அடைந்தனர்.
- தலைமறைவாக இருந்த மணிகண்டன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் சிக்கனூத்தில் மடத்துக்குளம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.
இங்கு தங்கியிருந்து வேலை செய்து வந்த தொழிலாளர்களான திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நாயக்கனூரை சேர்ந்த மூர்த்தி (60), அவரது மகன்கள் மணிகண்டன்(30), தங்கபாண்டி(25), ஆகியோருக்கு இடையே நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் தகராறு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் குடிமங்கலம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல்(57) மற்றும் போலீஸ்காரர் அழகுராஜா ஆகியோர் தோட்டத்திற்கு விரைந்து சென்று, தந்தை-மகன்கள் இடையே ஏற்பட்ட தகராறை தீர்த்து வைக்க முயன்றனர்.
அப்போது ஆத்திரமடைந்த தந்தை-மகன்கள் 3 பேரும், எங்களிடையே ஏற்பட்ட தகராறை தீர்த்து வைக்க நீங்கள் யார்? என்று கேட்டு சப்-இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அரிவாளால் வெட்ட முயற்சிக்கவே, போலீஸ்காரர் அழகுராஜா அங்கிருந்து தப்பியோடி விட்டார். சண்முகவேல் தப்பியோட முயன்றபோது அவரை சரமாரி அரிவாளால் வெட்டினர். கழுத்தில் வெட்டியதில் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே சப்-இன்ஸ்பெக்டர் சண்முக வேல் உயிரிழந்தார்.
இதையடுத்து தந்தை-மகன்கள் 3 பேரும் தலைமறைவாகிவிட்டனர். நடந்த சம்பவம் குறித்து அழகுராஜா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே அவர்கள் தோட்டத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கொலை செய்யப்பட்ட கிடந்த சண்முகவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தப்பியோடிய மூர்த்தி, மணிகண்டன், தங்கபாண்டி ஆகியோரை பிடிக்க திருப்பூர் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் சிக்கவில்லை.
இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. கொலையாளிகளின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் என்பதால் அங்கு சென்றிருக்கலாம் என்று எண்ணி தனிப்படையினர் வேடசந்தூர் பகுதியில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் உடுமலை, குடிமங்கலம் பகுதியிலும் வலைவீசி தேடினர்.
இந்தநிலையில் மூர்த்தி, தங்கபாண்டி ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய குற்றவாளியான மணிகண்டன் எங்கு பதுங்கி உள்ளான் என்று விசாரணை நடத்தினர். அப்போது உடுமலை பகுதியில் அவர் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து நேற்றிரவு அங்கு சென்ற தனிப்படையினர் மணிகண்டனை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை குடிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று இரவு முதல் இன்று அதிகாலை வரை விசாரணை நடத்தினர். அவரிடம் கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று விசாரணை நடத்தியபோது குடிமங்கலம் சிக்கனூத்து உப்பாறு ஓடை பகுதியில் பதுக்கி வைத்துள்ளதாக தெரிவித்தான்.
இதைத்தொடர்ந்து ஆயுதத்தை பறிமுதல் செய்வதற்காக மணிகண்டனை, குடிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருஞான சம்பந்தம், சப்-இன்ஸ்பெக்டர் சரவண குமார் மற்றும் போலீசார் வேனில் உப்பாறு ஓடை பகுதிக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.
அங்கு சென்றதும் போலீசார் மணிகண்டனை வேனில் இருந்து இறக்கி, அரிவாளை பதுக்கி வைத்திருந்த இடத்திற்கு அழைத்து சென்று அதனை மீட்க முயன்றனர். அப்போது அரிவாளை எடுத்த மணிகண்டன், போலீசாரிடம் இருந்து தப்பிக்க சப்-இன்ஸ்பெக்டர் சரவண குமாரின் வலது கையில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோட முயன்றான்.
அவரை பிடிக்க முயன்ற போலீசாரையும் வெட்ட முயன்றான். இதையடுத்து பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்த இன்ஸ்பெக்டர் திருஞான சம்பந்தம் தற்காப்புக்காக மணிகண்டனை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் அவரது உடலில் குண்டு பாய்ந்தது.
இதையடுத்து காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு மணிகண்டனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் ஆஸ்ப த்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருப்பூர் மாவட்ட எஸ்.பி.,கிரிஷ் யாதவ் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் துப்பாக்கிசூடு நடந்த உப்பாறு ஓடை பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.






