search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு
    X

    வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு

    • கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.
    • அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் தினந்தோறும் சிக்கி தவிக்கின்றன.

    வீரபாண்டி :

    திருப்பூரிலிருந்து பல்லடம் செல்லும் சாலை எப்பொழுதும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும். வீரபாண்டி பிரிவில் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் சாலை குறுகலாக இருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் கடந்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதனால் வீரபாண்டி பிரிவு நான்கு சாலை சந்திப்பு பகுதியில் 150 மீட்டர் நீளத்துக்கு 1.5 மீட்டர் முதல் 4மீட்டர் அகலத்திற்கு 95லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால் விரிவாக்கம் செய்யப்பட்ட பின்பு சாலை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் சாலை விரிவாக்கம் செய்தும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன.

    போக்குவரத்து நெரிசல் காரணமாக அரசு மருத்துவமனைக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் தினந்தோறும் சிக்கி தவிக்கின்றன. மேலும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பல்வேறு தரப்பினரும் கடும் மனஉளைச்சலுக்கு அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் வீரபாண்டி பிரிவில் பேருந்துகள் நிறுத்தத்திற்கு ஒதுக்கிய இடத்திலும் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதனால் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

    மேலும் இந்த வழியாக தினந்தோறும் கலெக்டர், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், மேயர் உள்ளிட்டோர் பயணம் செய்கிறார்கள்.மேலும் வீரபாண்டி பிரிவில் தான் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் வாகன சோதனை சாவடி மையமும் இருக்கிறது. ஆனால் ஆக்கிரமிப்பு அதிகாரித்து கொண்ட வருகின்றன. இது குறித்து பலமுறை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒன்று இணைந்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×