search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி
    X

    கோப்புபடம்.

    பல்லடம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

    • இரும்பு கொக்கியை எடுத்து தேங்காய் பறிக்க முயன்றுள்ளார்.
    • அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கொடுவாய் வெள்ளியம்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 50 ).இவருக்கு சொந்தமான தோட்டம் அந்த பகுதியில் உள்ளது. இந்த தோட்டத்தில் அதே பகுதியைச் சேர்ந்த குமார் (45 ) என்பவர் தங்கி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று தோட்டத்தில் இருந்த தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக இரும்பு கொக்கியை எடுத்து தேங்காய் பறிக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக சென்ற உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் இரும்பு கம்பி பட்டதில் குமார் மீது மின்சாரம் தாக்கியது.

    இதில் அவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவினாசிபாளையம் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×