search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    விழிப்புணர்வு நடைபெற்ற காட்சி.

    போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • போதைப்பொருள் பயன்படுத்துவதால் மாணவர்களின் எதிர்காலம் சீர்குலைந்து வருகிறது.
    • போதைப்பொருள் பயன்படுத்துவதும் விற்பதும் சட்டப்படி குற்றம் .

    வீரபாண்டி :

    திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உத்தரவுபடி வீரபாண்டி இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடுவம்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே போதைப்பொருள் தடுப்பு குறித்த விளக்க உரைகளை வழங்கினர். போதைப்பொருள் பயன்படுத்துவதால் மாணவர்களின் எதிர்காலம் சீர்குலைந்து வருவதாகவும், போதைப்பொருள் பயன்படுத்துவதும் விற்பதும் சட்டப்படி குற்றம் .

    போதைப்பொருள்களை விற்பனை செய்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மாணவர்களிடையே இன்ஸ்பெக்டர் ஆனந்த் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் மற்றும் பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி ஆகியோர் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×