search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்
    X

    ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தையை படத்தில் காணலாம்.

    ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

    • சோபனாவை காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
    • செல்லும் வழியிலேயே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    காங்கயம் :

    காங்கயம் அருகே அர்த்தநாரிபாளையம் பகுதியில் உள்ள தனியார் தேங்காய் களத்தில் தேங்காய் உடைக்கும் வேலை செய்து வருபவர் தில்லையேஸ்வரன். இவரது மனைவி சோபனா (வயது 24). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி வந்துள்ளது. உடனடியாக 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே ஆம்புலன்சில் சோபனாவை காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது செல்லும் வழியிலேயே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    பின்னர் தாயும் குழந்தையும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    Next Story
    ×