என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி பா.ஜ.க. செயற்குழு கூட்டம்
- தூத்துக்குடி தெற்கு மாவட்டம் வடக்கு மண்டல பா.ஜ.க. செயற்குழு கூட்டம் திரேஸ்புரத்தில் நடைபெற்றது.
- மாவட்ட பார்வையாளராக கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சின்னதங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் வடக்கு மண்டல பா.ஜ.க. செயற்குழு கூட்டம் திரேஸ்புரத்தில் நடைபெற்றது. மண்டல் தலைவர் சிவராமன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பார்வையாளராக கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சின்னதங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் மண்டல் பிரபாரி வக்கீல் சின்னதம்பி, மாவட்ட துணைதலைவர் வக்கீல் வாரியார், மாநில பொதுக்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, மண்டல துணைதலைவர் மகாராஜன், மண்டல பொது செயலாளர்கள் சங்கர்கணேஷ், பால் மனோகர், கல்வியாளர் பிரிவு மாவட்ட செயலாளர் டாக்டர் ராமசாமி, மீனவர் அணி மாவட்ட துணைத்தலைவர் குப்பபிச்சை, மாவட்ட துணைதலைவர் செல்வசுந்தரி, மூத்த உறுப்பினர் பாலாசிங் யாதவ் மற்றும் 65 செயற்குழு உறுப்பினர்கள் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் சுதந்திர இந்தியாவின் 75-வது ஆண்டில் தேசத்தின் வரலாறுகளை நினைவு கூறும் வகையில் புதிய பாராளுமன்றத்தை பிரமாண்டமாக உருவாக்கி அதை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்