என் மலர்
திருநெல்வேலி
- அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை.
- அ.தி.மு.க. ஒருங்கிணைப்புக்கு தேவைப்பட்டால் நாங்கள் பேசவும் தயாராக உள்ளோம்.
நெல்லை:
தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* அ.தி.மு.க.வில் பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க செங்கோட்டையன் முயல்வது நல்லதுதான். செங்கோட்டையன் மேற்கொண்டுள்ள முயற்சி நல்ல விஷயம்.
* அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை.
* அ.தி.மு.க. ஒருங்கிணைப்புக்கு தேவைப்பட்டால் நாங்கள் பேசவும் தயாராக உள்ளோம்.
* அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தி.மு.க. ஆட்சியை வீழ்த்திட முடியும்.
* அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை. கடைசி நேரத்தில் கூட மாற்றங்கள் வரும் என்றார்.
- பணகுடி, கோட்டைகருங்குளம், களக்காடு துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- திருவெம்பலாபுரம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை மின்விநியோகம் இருக்காது.
வள்ளியூர்:
பணகுடி, கோட்டைகருங்குளம் மற்றும் களக்காடு துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பணகுடி, லெப்பைகுடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல் கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன் குளம்.
களக்காடு நகரம், பெருமாள் குளம், சாலை புதூர், எஸ்.என்.பள்ளிவாசல், மாவடி, டோனாவூர், புலியூர் குறிச்சி, கோதைசேரி, வடமலைசமுத்திரம், கருவேலன் குளம், கோவிலம்மாள் புரம், வடுகச்சி மதில், கோட்டைகருங்குளம், குமாரபுரம், வாழை தோட்டம், சீலாத்தி குளம், முடவன் குளம், தெற்கு கள்ளிகுளம், சமூக ரெங்கபுரம், திருவெம்பலாபுரம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை வள்ளியூர் செயற்பொறியாளர் வளன் அரசு தெரிவித்துள்ளார்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்சாரம் கணக்கீடு செய்ய ஊழியர் ஒருவர் வந்துள்ளார்.
- மின்கட்டண கோளாறு தொகையை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி மின்வாரிய உபகோட்டத்திற்கு உட்பட்ட மருதகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். தொழிலாளி.
இவரது வீட்டிற்கு வழக்கம்போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்சாரம் கணக்கீடு செய்ய ஊழியர் ஒருவர் வந்துள்ளார். அவர் கணக்கீடு செய்து முடித்துவிட்டு சென்ற நிலையில் மாதாந்திர மின் கட்டண விபரம் மாரியப்பனின் செல்போனுக்கு வந்துள்ளது.
தொடர்ந்து அவர் தனது செல்போனில் மின் கட்டணத்தை செலுத்த முயன்றபோது, அதில் காட்டப்பட்ட தொகையை கண்டு மாரியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். அதில் மின் கட்டணமாக ரூ.1 கோடியே 61 லட்சத்து 31 ஆயிரத்து 281 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒரு சாதாரண நடுத்தர குடும்பம் பயன்படுத்திய மின்சாரத்திற்கு இவ்வளவு பெரிய தொகையா? என அதிர்ச்சியடைந்த மாரியப்பன், உடனடியாக இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், அதிகப்படியான மின் கட்டணம் வந்துள்ளது உண்மைதான். தொழில்நுட்பக் கோளாறு மற்றும் மனித தவறு காரணமாக இது நிகழ்ந்துள்ளது. இன்று மதியம் 12 மணிக்குள் இந்த தவறு சரிசெய்யப்பட்டு, சரியான கட்டணம் பதிவேற்றம் செய்யப்படும்.
மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறையால், அவுட்சோர்சிங் ஊழியர்கள் மூலம் மின் கணக்கீடு செய்யும் பணி நடைபெறுகிறது. அப்போது ஏற்பட்ட தவறின் காரணமாக இந்த குளறுபடி நிகழ்ந்திருக்கலாம் என தெரிவித்தனர்.
தொடர்ந்து சம்பந்தப்பட்ட மின்மீட்டரில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான அளவு கணக்கீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மின்கட்டண கோளாறு தொகையை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- வைராவி குளம் பகுதியில் தாமரை பூக்கள் தற்போது அதிக அளவில் பயிரிடப்பட்டு உள்ளது.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.15-க்கு விற்பனையான தாமரை பூக்கள் தற்போது அவை ரூ.1.50-க்கே விற்பனை செய்யப்படுகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்று வட்டாரங்களில் தாமிரபரணி ஆற்றின் தண்ணீரை கொண்டு விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அம்பாசமுத்திரம் அருகே வைராவி குளம் பகுதியில் தாமரை பூக்கள் தற்போது அதிக அளவில் பயிரிடப்பட்டு உள்ளது.
ஆவணி மாதத்தை முன்னிட்டு சுபமுகூர்த்த நாட்களில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்த நிலையில் தற்போது தாமரை பூக்கள் விலை குறைந்துள்ளது.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.15-க்கு விற்பனையான தாமரை பூக்கள் தற்போது அவை ரூ.1.50-க்கே விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், உரிய விலை இல்லாததால் வைராவிகுளம் பகுதியில் விவசாயிகள் 500-க்கும் மேற்பட்ட தாமரை பூக்களை சாலையில் வீசி சென்றனர்.
- 2024 மக்களவை தேர்தலில் மோடி பிரதமராக வேண்டும் என அமமுக நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்தது.
- தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மக்கள் யாரை விரும்புகிறார்கள் என்பது தெரியவரும்.
நெல்லையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு டிடிவி தினகரன் பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நடந்து முடிந்த மக்களவை தேர்தல் வேறு, 2026 சட்டமன்ற தேர்தல் வேறு. 2024 மக்களவை தேர்தலில் மோடி பிரதமராக வேண்டும் என அமமுக நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்தது.
2026 சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் நிபந்தனையற்ற ஆதரவு கிடையாது அமமுக தொண்டர்கள் விரும்பும் வகையில் எங்களின் கூட்டணி அமையும்.
2026 சட்டமன்றத் தேர்தலில் அமமுக யார் என்பதை உறுதியாக நிரூபிப்போம். கருத்துக்கணிப்புகள் ஒருபக்கம் இருக்கட்டும். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மக்கள் யாரை விரும்புகிறார்கள் என்பது தெரியவரும்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எத்தனை அணிகள், எந்தெந்தக் கட்சிகள் எந்தக் கூட்டணியில் இடம் பெறுகிறது என்பதும் வரும் டிசம்பர் மாதம் தெரியவரும். அந்த சமயத்தில், அமமுக எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடப்போகிறது என்பதும் தெரியவரும்.
தேர்தல் கூட்டணி குறித்து டிசம்பரில் முடிவு.
இவ்வாறு கூறினார்.
- ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ஒரு அரசியல் கட்சியை போல் நடந்து கொண்டுள்ளது.
- தி.மு.க.வை பொறுத்தவரை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் கணிசமானவற்றை நிறைவேற்றியுள்ளனர்.
மதிமுக தென் மண்டல மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் நடந்தது.
இக்கூட்டத்திற்கு துணை பொது செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில், முதன்மைச் செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தூத்துக்குடி ஆர்.எஸ்.ரமேஷ் குமரி வெற்றிவேல், நெல்லை மத்திய மாவட்டம் கே.எம்.ஏ. நிஜாம், நெல்லை புறநகர் உவரி எம்.ரைமண்ட், தென்காசி தெற்கு ராம உதயசூரியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பின்னர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் என கூறி சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு பல காரணங்களை தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
இது பலத்த சந்தேகத்தை எழுப்பி உள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். தேர்தல் ஆணையத்தை பொருத்தவரை ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ஒரு அரசியல் கட்சியை போல் நடந்து கொண்டுள்ளது.
பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசிடம் கேட்டோம். அந்த விவாதத்துக்கு அவர்கள் மறுத்துவிட்டனர். தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தான் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அங்கு பேரணி நடந்து வருகிறது.
தி.மு.க.வை பொறுத்தவரை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் கணிசமானவற்றை நிறைவேற்றியுள்ளனர். சில வாக்குறுதிகளுக்கு முதல்-அமைச்சரும் துறை சார்ந்த அமைச்சரும் பதில் அளித்துள்ளனர். பல வாக்குறுதிகள் நிறைவேறாமல் இருப்பதற்கு நிதி நெருக்கடியும் ஒரு காரணம். இதுபோன்ற நிலை பா.ஜ.க. அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எல்லாம் நிலவுகிறது.
இந்திய ஏற்றுமதி பொருள்களுக்கு அமெரிக்க நாடு 50 சதவீதம் வரிவிதிப்பால் மிகப்பெரிய அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு பொறுத்த வரை ஜவுளித்துறை முக்கிய தொழிலாக உள்ளது.
அமெரிக்காவின் வரி விதிப்பால் ஆயிரக் கணக்கான தொழிற்சாலைகள் மூடப்படும் அபாய நிலை உருவாகியுள்ளது.
இதனால் லட்சக் கணக்கான தொழிலாளர்கள் தங்களது வேலை இழக்கும் நிலை வரும். மத்திய அரசு இதற்குரிய மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
ஏற்கனவே மத்திய அரசு மாற்று ஏற்பாடுகளை செய்து வருவதாக தெரிகிறது. 200 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் உள்ளது. இதில் 40 நாடுகளை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.
அந்த நாடுகளுடன் பேசி அமெரிக்க மூலமாக ஏற்படும் வர்த்தக இழப்பை ஈடு செய்யும் அளவுக்கு ஏற்றுமதியை கொண்டு சென்றால் இப்பிரச்சினையை சரி செய்யலாம் என்ற முயற்சி இருக்கிறது. இதனை விரைந்து செய்ய வேண்டும்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து த.வெ.க. தலைவர் விஜய் பேசியதை தவிர்க்க வேண்டும். பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் மதிமுக சார்பில் மாநாடு நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மணப்பெண்ணை ஒரு இளம்பெண் செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
- மணமேடையில் மணமகன் அமர்ந்திருந்தபோது, மணப்பெண் ஒருவித குழப்பத்துடனேயே அருகில் வந்து அமர்ந்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கும் ராதாபுரம் பகுதியை சேர்ந்த 27 வயது கார் டிரைவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
நேற்று இவர்களது திருமணம் மணமகள் வீட்டில் வைத்து நடைபெற இருந்தது. இருதரப்பினரும் தடல்புடலாக திருமண ஏற்பாடுகளை நடத்தி வந்தனர்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மணப்பெண்ணை ஒரு இளம்பெண் செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது மணமகனுக்கும், தனக்கும் நீண்டகாலம் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண் உடனே மணமகனை செல்போனில் தொடர்புகொண்டு நடந்த விவரத்தை கூறியுள்ளார். ஆனால், அந்த பெண் தனக்கு தங்கை மாதிரி. அவளுடன் அப்படித்தான் பழகினேன் என்றார்.
இதை ஏற்க மறுத்த மணமகள், அந்த பெண்ணுடனான தொடர்பை துண்டிக்குமாறு கூறினார். ஆனால் மணமகன், அந்த பெண்தான் தனக்கு மிகவும் முக்கியம், அவளுடன் தொடர்பை கைவிடமுடியாது என்றார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மணமகள் செய்வதறியாமல் திகைத்தார். இந்த திருமணத்தில் விருப்பமில்லை என மணமகள் தனது பெற்றோரிடம் கூறினார். அவர்களும் இதைக்கேட்டு செய்வதறியாமல் புலம்பினர்.
இந்த குழப்பத்திலேயே திருமணம் நடைபெற இருந்த நாளும் வந்தது. நேற்று காலையிலேயே மணமகன் வீட்டில் இருந்து அனைவரும் வந்தனர். மணமேடையில் மணமகன் அமர்ந்திருந்தபோது, மணப்பெண் ஒருவித குழப்பத்துடனேயே அருகில் வந்து அமர்ந்தார்.
அப்போது மணமகன் தாலியை கையில் எடுத்த நேரத்தில், திடீரென இளம்பெண் தனக்கு இந்த மணமகனை பிடிக்கவில்லை. திருமணத்தை நிறுத்துங்கள் என்றார்.
இதைக்கேட்டு மணமகன் உள்பட அனைவரும் ஒரு நிமிடம் நிலைகுலைந்தனர். என்ன நடந்தது? ஏன் திருமணத்தை நிறுத்துகிறாய்? என மணமகளிடம் கேட்டனர்.
அப்போது, அவர் மணமகனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு உள்ளது. எனவே, நான் இவரை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என மணமகள் கூறினார்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே அங்கிருந்தவர்கள் திசையன்விளை போலீசாருக்கு தகவலளித்தனர். போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மணமகனை திருமணம் செய்ய மாட்டேன் என்பதில் மணமகள் உறுதியாக இருந்ததால் வேறு வழியின்றி திருமணம் நிறுத்தப்பட்டது.
இதனால் மணமகன் வீட்டார் கடும் ஆவேசத்துடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
- வாக்குவாதம் முற்றிடவே லட்சுமி நாராயணன், அருள் முத்து செல்வன் இடையே மோதல் ஏற்பட்டது.
- கோஷ்டி மோதலில் ஈடுபட்டதாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை-தென்காசி நான்கு வழிச்சலையில் பேட்டையை அடுத்த அபிஷேகப்பட்டியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகம் உள்ளது.
இங்கு மோட்டார் சைக்கிள்களில் வரும் மாணவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்காக பல்கலைக்கழகம் நுழைவாயில் அருகில் அனைத்து வாகனங்களுக்கும் பார்க்கிங் வசதி உள்ளது.
இந்நிலையில் வரலாற்று துறையில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவரான தச்சநல்லூர் அடுத்த மணி மூர்த்தீஸ்வரம் வாழவந்த அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் லட்சுமி நாராயணன் (வயது 18) நேற்று தனது மோட்டார் சைக்கிளை வாகன நிறுத்தத்தில் நிறுத்தாமல் கேண்டீன் அருகில் ஓட்டி சென்றுள்ளார்.
வரலாற்றுத்துறை இரண்டாம் ஆண்டு மாணவர் அருள் முத்துசெல்வன், நீ எப்படி மோட்டார் சைக்கிளை இங்கு கொண்டு வந்தாய் என கேட்டுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்படவே, லட்சுமி நாராயணனுக்கு ஆதரவாக வரலாற்று துறையில் படிக்கும் ஆகாஷ் வந்துள்ளார்.
வாக்குவாதம் முற்றிடவே லட்சுமி நாராயணன், அருள் முத்து செல்வன் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் லட்சுமி நாராயணன், அருள் முத்துசெல்வன் ஆகியோர் காயம் அடைந்த நிலையில் இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோஷ்டி மோதலில் ஈடுபட்டதாக 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக மறு உத்தரவு வரும் வரை பல்கலைக்கழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளித்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பல்கலைக்கழகம் மூடப்பட்டது.
- பள்ளிகள் மூடப்பட்டதாக தகவல்கள் வருகிறதே தவிர புதிய மாணவர் சேர்க்கை குறித்த தகவல்கள் வரப்படவில்லை.
- ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நெல்லை மாவட்ட அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் அடைவு தேர்வு தொடர்பாக நடத்திய ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளி கல்வித்துறை சார்ந்த ஆய்வு கூட்டம் 23-வது மாவட்டமாக இங்கு தலைமை ஆசிரியர்களை சந்தித்து நடத்தப்பட உள்ளது. மாணவர்களுக்கு என்னென்ன தேவை என்பது குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் இந்த ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக செயல்படும் இடங்களை கண்டறிந்து அவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு மற்ற இடங்களில் செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. எந்த அரசாக இருந்தாலும் பள்ளிகளை மூடாது. மூடியதாக வரலாறும் கிடையாது.
கடந்த கல்வி ஆண்டில் இருந்து இந்த கல்வி ஆண்டு வரை உள்ள கணக்கீட்டில் புதியதாக 4 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் மூடப்பட்டதாக தகவல்கள் வருகிறதே தவிர புதிய மாணவர் சேர்க்கை குறித்த தகவல்கள் வரப்படவில்லை.
மூடப்பட்ட 207 பள்ளிகளின் காரணங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 5 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்களை ஆசிரியர்கள் கண்டறிந்து ஈ-ரெஜிஸ்டர் பதிவேட்டில் இணைக்கப்பட்டு பள்ளிகளில் சேர்த்து வருகிறோம்.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி 2015-16-ல் இருந்து உலகம் முழுவதும் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்திற்காக இடம் விட்டு இடம்பெயர்ந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கணக்கி டப்பட்டுள்ளது.
மூடப்பட்ட பள்ளிகள் இருக்கும் ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளியில் படிக்கும் வயதில் உள்ள மாணவர்களை பள்ளியில் படிக்க சேர்ப்பதற்கான அனைத்து பணிகளையும் அதிகாரிகளும், ஆசிரியர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.
பி.எம்.ஸ்ரீ பள்ளிகளில் இருக்கும் மாணவர்களிடம் மத்திய அமைச்சர் அவரது நம்பிக்கை சார்ந்து பேசி உள்ளார். அவரது நம்பிக்கை சார்ந்து பேசியது அவரது இஷ்டம். அது குறித்து கருத்து சொல்ல முன்வரவில்லை.
அறிவியல் சார்ந்து முற்போக்கு சிந்தனையோடு தந்தை பெரியார் வழியில் பள்ளிக்கல்வித்துறை தமிழக முதலமைச்சர் வழி காட்டுதலோடு செயல்பட்டு வருகிறது. அறிவை சார்ந்து இருக்கும் பாதையில் நாங்கள் செல்லும்போது எங்களோடு சேர்ந்து பயணிக்க ஆசைப்படுபவர்கள் எங்களோடு வரலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. ஆட்சியை வேரோடு பிடுங்கி எறிவோம் என்று பேசியிருக்கிறார்கள்.
- அமித்ஷாவின் அருகிலேயே அமர்ந்திருந்த எடப்பாடி பழனிசாமியும் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
அமைச்சர் கே.என். நேரு இன்று நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜ.க.வினர், நயினார் நாகேந்திரனை தலைவராக போட்டு ஒரு கூட்டத்தை கூட்டியுள்ளனர். அந்த கூட்டத்தில், தி.மு.க. ஆட்சியை வேரோடு பிடுங்கி எறிவோம் என்று பேசியிருக்கிறார்கள். அது அவர்களுடைய ஆசை. அந்த ஆசையை அவர்கள் சொல்லி வருகிறார்கள்.
விவசாயத்தில், வேரோடு பிடுங்கி நடவு செய்தால் அந்த பயிர் இன்னும் பெரியதாக, செழிப்பாக வளரும். அதுபோல அவர்கள் பிடுங்க நினைத்தால் எங்கள் ஆட்சி இன்னும் சிறப்பாகத்தான் இருக்கும்.
கடந்த 15 வருடங்களாக இந்த வேரோடு பிடுங்கும் வேலையைத்தான் பா.ஜ.க. பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர்களால் தமிழகத்தில் எதையும் செய்ய முடியவில்லை. தி.மு.க. கூட்டணிதான் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. வருங்காலத்திலும் தி.மு.க.தான் மாபெரும் வெற்றி பெறும்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. தமிழகத்திற்கு கடந்த காலங்களில் 3 முறை வந்த அமித்ஷா, ஒவ்வொரு முறையும் 'கூட்டணி ஆட்சி' என்றே பேசி வருகிறார். ஆனால், அதுகுறித்து அவரும் விளக்கம் சொல்லவில்லை. அமித்ஷாவின் அருகிலேயே அமர்ந்திருந்த எடப்பாடி பழனிசாமியும் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது இருண்ட ஆட்சி அவர்களது கண்ணுக்கு தெரியவில்லை. அமித்ஷா பேசிய இதே ஊரில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். அவர்கள் நினைப்பது நடக்காது. உண்மையில், அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்கள் பானக கூட்டணியை ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோல், பா.ஜக வினரும் அ.தி.மு.க. கூட்டணியை விரும்பவில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையை வைத்துக்கொண்டு, நாங்கள் ஜெயித்துவிடுவோம், ஆட்சியை பிடித்துவிடுவோம் என்று அவர்கள் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. அவர்கள் நினைப்பது ஒருபோதும் நடக்காது.
முதலமைச்சரை யார் எந்த பெயரை வைத்து அழைத்தாலும், மீண்டும் அவர்தான் தமிழகத்தின் முதலமைச்சராக வருவார். பொதுமக்கள், குறிப்பாக மகளிர் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மிகப்பெரிய ஆதரவு அலை வீசி வருகிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு இருந்த மகளிர் ஆதரவை எல்லாம் தாண்டி, இப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
நடைபெறவிருக்கும் தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெற்று, மீண்டும் தி.மு.க. ஆட்சி அமையும். எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் மீண்டும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்பார்.
தோற்றுப் போய் விடுவோம் என்ற பயத்தில் தான், பீகார், ஆந்திரா போன்ற மாநிலங்களில் பா.ஜ.க.வினர் பல்வேறு பிரச்சினைகளை செய்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை, தி.மு.க.விற்கு போட்டியே கிடையாது. எதிரணியில் யார் நின்றாலும், நாங்கள் தான் மகத்தான வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நயினார் நாகேந்திரன் வீட்டிற்கு வந்த அமித் ஷாவுக்கு மங்கள இசையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
- மாநாட்டில் பங்கேற்ற வயது முதிர்ந்த பெண்கள் உண்மையிலேயே பூத் கமிட்டியினர் தானா என்று அமித் ஷா கேள்வி எழுப்பி உள்ளார்.
நெல்லை தச்சநல்லூரில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க. பூத் கமிட்டி தென்மண்டல பொறுப்பாளர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார்.
இதற்கிடையே, அமித்ஷாவுக்கு, பாளையங்கோட்டை பெருமாள்புரம் புனித தாமஸ் தெருவில் உள்ள பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
பிரபல தனியார் ஓட்டலில் இருந்து தேநீர் விருந்துக்கான உணவு பொருட்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. அமித்ஷாவுக்காக திருநெல்வேலி அல்வா, குழிப்பணியாரம், லட்டு, ரோஸ் பிஸ்கட் போன்ற இனிப்பு வகைகளும், தட்டாம் பயிறு, சுண்டல், வேர்கடலை போன்ற பயிர் வகைகள், பில்டர் காபி, டீ, லெமன் டீ, கிரீன் டீ ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஒட்டுமொத்தமாக 35 உணவு வகைகள் தயார் செய்யப்பட்டு இருந்தன.
மாலை 5.35 மணிக்கு நயினார் நாகேந்திரன் வீட்டிற்கு வந்த அமித்ஷாவுக்கு மங்கள இசையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அண்ணாமலையை அமித்ஷா கையை பிடித்து உள்ளே அழைத்துச் சென்றார். தொடர்ந்து அமித்ஷாவுக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. இதில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா, இளைஞர் அணி துணை தலைவர் நயினார் பாலாஜி, நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் முத்துபலவேசம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தேநீர் விருந்திற்கு மூத்த நிர்வாகிகள் அழைக்கப்படாததால் அதிருப்தியடைந்த அமித்ஷா நயினார் நாகேந்திரனை கடிந்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமித்ஷாவின் அதிருப்திக்கான காரணம்:
* தேநீர் விருந்திற்கு பா.ஜ.க. மூத்த தலைவர்களை ஏன் அழைக்கவில்லை. மூத்த நிர்வாகிகளை அழைத்து ஒன்றாக அமர்ந்து பேசும்போதுதான் கட்சி, கள நிலவரம் தெரிய வரும்.
* நெல்லை பூத் கமிட்டி மாநாட்டில் தான் பேசிக்கொண்டிருந்தபோது வெளியில் எழுந்து சென்றவர்கள் யார்?
* மாநாட்டில் பங்கேற்ற வயது முதிர்ந்த பெண்கள் உண்மையிலேயே பூத் கமிட்டியினர் தானா?
* நான் பங்கேற்கும் நிலையில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி வருக வருக என பேனர்கள் வைத்தது ஏன்? என்று அமித்ஷா கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
- அ.தி.மு.க. கூட்டணி தமிழக மக்களை மேம்படுத்தும்.
- தி.மு.க.வை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். தி.மு.க. அரசின் ஊழல் பட்டியல் நீளமாக உள்ளது.
நெல்லையில் நடைபெற்ற பா.ஜ.க. பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற உரையாற்றினார். அப்போது அமித் ஷா பேசியதாவது:-
"தமிழ் மண்ணை வணங்கி என்னுடைய உரையை தொடங்குகிறேன். புண்ணிய பூமியான தமிழகத்தில் தமிழில் பேச முடியவில்லையே என வருந்துகிறேன்.
மறைந்த நாகலாந்து கவர்னர் இல.கணேசன் பா.ஜ.க.விற்காக வாழ்க்கையை தியாகம் செய்தவர். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். தமிழ் மண்ணைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். சி.பி.ராதாகிருஷ்ணன் அடுத்த மாநிலங்களவை கூட்டத்தில் சபாநாயகராக இருப்பார்.
பிரதமர் மோடி தமிழ் மண்ணையும், மக்களையும் எப்போதும் உணர்ந்தவர். தமிழ் மண், மக்கள், மொழி மீது பற்று கொண்டவர். சோழர்களுக்கு பிரதமர் மோடி பெருமை சேர்த்துள்ளார். கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழ மன்னன் ராஜேந்திரனுக்கு விழா எடுத்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி அப்துல் கலாமை ஜனாதிபதி என்ற உயரிய பதவியில் அமர்த்தி பா.ஜ.க. அழகு பார்த்தது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதத்தின் முதுகெலும்பை முறித்தவர் பிரதமர் மோடி. ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை பிரதமர் மோடி உருவாக்கினார். சாமானிய மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி மிகப்பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது.
பிரதமர், முதல்-அமைச்சர், மந்திரிகள் குற்ற வழக்கில் கைதானால் பதவியில் நீடிக்க கூடாது. 30 நாட்கள் சிறையில் இருக்கும் முதல்-அமைச்சர், மந்திரிகளை பதவிநீக்கம் செய்யும் சட்டத்தை மு.க. ஸ்டாலின் எதிர்க்கிறார். நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.
இருட்டு நடவடிக்கையில் ஈடுபடும் ஸ்டாலின் கருப்புச் சட்டம் என பேசுகிறார். செந்தில் பாலாஜி சிறை சென்றாலும் பதவியில் நீடித்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 18 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெற்றது. பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க. 21 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது.
தமிழகத்தில் 2026-ல் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி ஆட்சிதான் அமையப்போகிறது. பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி தமிழக மக்களை மேம்படுத்தும். தி.மு.க.வை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். தி.மு.க. அரசின் ஊழல் பட்டியல் நீளமாக உள்ளது.
டாஸ்மாக், போக்குவரத்து, கனிம வளம் என பல துறைகளில் தி.மு.க. அரசு ஊழல் செய்து வருகிறது. உதயநிதியை முதல்-அமைச்சராக்குவது தான் தி.மு.க. கூட்டணியின் ஒரே லட்சியம். சோனியா காந்திக்கு அவர் மகன் ராகுல் காந்தியை பிரதமராக்குவதுதான் ஒரே லட்சியம். நான் சொல்கிறேன், ஒருநாளும் உதயநிதி ஸ்டாலின் முதல்-அமைச்சராக முடியாது.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.






