search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் நாளை ஆடித்திருவிழா தேரோட்டம்
    X

    திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் நாளை ஆடித்திருவிழா தேரோட்டம்

    • 11 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் உகப்படிப்பு, பணிவிடை, மதியம் உச்சிப்படிப்பு பணிவிடை, அன்னதர்மம் வழங்குதல் நடைபெற்று வருகிறது.
    • நாளை இரவு 1 மணிக்கு காளை வாகன பவனியும் நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வை குண்டர் அவதாரப்பதியில் ஆடித்திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    11 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் உகப்படிப்பு, பணிவிடை, மதியம் உச்சிப்படிப்பு பணிவிடை, அன்னதர்மம் வழங்குதல் நடைபெற்று வருகிறது.

    சப்பர பவனி

    இதே போல் விழாவில் ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனம், மயில், அன்னம், சர்ப்பம்,கருட வாகனம், குதிரை, ஆஞ்ச நேயர் என பல்வேறு வாகனங்களில் சப்பரபவனி நடைபெற்றது. 10-ம் திருவிழாவான இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இந்திர வாகனத்தில் அய்யா வைகுண்டர் பதியை சுற்றி பவனி வருதல் நடக்கிறது.

    தேரோட்டம்

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை(திங்கட்கிழமை) பகல் 12.05 மணிக்கு நடக்கிறது. தேரோட்டத்தை தமிழக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பரா மரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் களக்காடு சுந்தரபாகவதர் குமார் ஜெயராமன் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைக்கின்றனர். இரவு 1 மணிக்கு காளை வாகன பவனியும் நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடு களை அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர், செயலாளர் பொன்னுத்துரை, துணை தலைவர் அய்யாபழம், துணை செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ராமையா நாடார் இணை தலைவர்கள் விஜயகுமார், பால்சாமி, ராஜதுரை, கோபால், இணை செய லாளர்கள் ராதா கிருஷ்ணன், தங்க கிருஷ்ணன், செல்வின், வரத ராஜபெருமாள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

    Next Story
    ×