search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிகளிடம் குறைகளை கேட்டறிந்த கலெக்டர்
    X

     கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கலெக்டர் தீபக்ஜேக்கப் கேட்டறிந்தார்.

    அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிகளிடம் குறைகளை கேட்டறிந்த கலெக்டர்

    • கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கிறதா?
    • சிகிச்சை குறித்து அங்கு பணியில் இருந்த டாக்டரிகளிடம் கேட்டறிந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அரசு ராசாமிராசுதார் ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு தஞ்சாவூர் மட்டுமின்றி திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிகிச்சைக்காக கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் வருவது வழக்கம்.

    மேலும் இங்கு கர்ப்பிணி பெண்கள் மற்றும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான தங்கும் இடவசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கிறதா ? என மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து அங்கு பணியில் இருந்த டாக்டரிகளிடம் கேட்டறிந்தார்.

    Next Story
    ×