search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளத்தில் இன்று மதியம் பயங்கரம்: ஓட, ஓட விரட்டி வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை

    • மணிகண்டன் இன்று மதியம் மோட்டார் சைக்கிளில் கிடாரகுளம் தெற்கு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
    • விடாமல் துரத்திய கும்பல் மணிகண்டனை வெட்டிக் கொன்றது.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கிடார குளம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 23). பொக்லைன் ஆபரேட்டர்.

    வெட்டிக் கொலை

    இவர் இன்று மதியம் மோட்டார் சைக்கிளில் கிடார குளம் தெற்கு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து தாக்கியது.

    உடனே மணிகண்டன் மோட்டார் சைக்கிளை கீழே போட்டு விட்டு தப்பி ஊருக்குள் ஓடினார். எனினும் அந்த கும்பல் அவரை விடாமல் துரத்தி சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    போலீசார் விசாரணை

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், டி.எஸ்.பி. சகாய ஜோஸ், ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் சின்னத்துரை மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    கடந்த 2020-ம் ஆண்டு ஒரு வழக்கில் ஆடு திருட்டு கும்பல் தொடர்பாக மணிகண்டன் போலீசாருக்கு சில தகவல்களை தெரிவித்த தாக கூறப் படுகிறது.

    முன்விரோதம் காரணமா?

    இதுதொடர்பாக அவருக்கும், அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. மேலும், இப்பிரச்சினையால் மணிகண்டன் உயிருக்கு ஆபத்து உள்ளதாக அவரது பெற்றோர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவ லகத்தில் புகார் மனு அளித்த தாகவும் கூறப்படுகிறது.

    இந்தநிலையில் மணிகண்டன் இன்று ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே முன்விரோதம் காரணமாக ஆடு திருட்டு கும்பலால் மணி கண்டன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிப்பதற்காக தனிப் படைகள் அமைக்கப் பட்டுள்ளது.

    Next Story
    ×