search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சரின் சீரிய ஆட்சியில் தமிழ்நாடு எல்லா வகையிலும் முன்னேறி வருகிறது- ராஜா எம்.எல்.ஏ. பேச்சு
    X

    இளையரசனேந்தலில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜா எம்.எல்.ஏ. பேசிய காட்சி.

    முதல்-அமைச்சரின் சீரிய ஆட்சியில் தமிழ்நாடு எல்லா வகையிலும் முன்னேறி வருகிறது- ராஜா எம்.எல்.ஏ. பேச்சு

    • கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இளையரசனேந்தலில் பொதுக்கூட்டம் நடந்தது.
    • தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக திகழ்ந்து வருகின்றது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதி குருவிகுளம் கிழக்கு ஒன்றியம் சார்பில் இளையரசனேந்தலில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடந்தது.

    மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் செந்தில்வேல், கடற்கரை, கனகராஜ், மாயகிருஷ்ணன் முத்தையா, மனோகரன், பொன்சீனி, முத்துசாமி, கணேசன், முத்துலட்சுமி, செல்வி, மணிமாலா, கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குருவிகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிறிஸ்டோபர் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.,தென்காசி எம்.பி. தனுஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தமிழகத்தை பொறுத்த வரை கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் எந்தவித மக்கள் முன்னேற்ற திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. தற்போது இந்தியாவை வியக்கும் வகையில் ஆட்சி நடத்திவரும் நமது முதல்- அமைச்சரின் சீரிய ஆட்சியில் 2 ஆண்டுகளில் வளர்ச்சி பாதையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக திகழ்ந்து வருகின்றது.

    சங்கரன்கோவில் தொகுதியை பொறுத்தவரை 32 ஆண்டுகள் அ.தி.மு.க. வசம் இருந்தும், அதில் சுமார் 16 ஆண்டுகள் அமைச்சர் அந்தஸ்தில் இருந்தும் முன்னேற்றம் என்பது ஒரு துளி கூட நடைபெறவில்லை.

    கலைஞர் ஆட்சியில் தான் இந்த பகுதி மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்தத் திட்டம் தான் இன்று வரை இந்த பகுதி மக்களுக்கு மிகப் பிரதான குடிநீர் ஆதாரமாக உள்ளது.

    மேலும் தற்பொழுதும் கலைஞர் வழியில் ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தாமிரபரணி திட்டம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு சீரான குடிநீர் விநியோகம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    சங்கரன்கோவில் தொகுதியில் பல்வேறு முன்னேற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக முதல்- அமைச்சரின் சீரிய ஆட்சியில் தமிழ்நாடு எல்லா வகையிலும் முன்னேறி வருகிறது என்பது உண்மை என்றார்.

    தொடர்ந்து நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து மாற்றுக் கட்சியில் இருந்து தி.மு.க.வில் இணைத்து கொண்ட நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஒன்றிய செயலாளர் பெரியதுரை, மாவட்ட துணை செயலாளர்கள் ராஜதுரை, புனிதா, பொதுக்குழு உறுப்பினர் பராசக்தி, நகர செயலாளர் புளியங்குடி அந்தோணிசாமி, பேரூர் செயலாளர் ரூபி பாலசுப்ரமணியம் ,கிளை செயலாளர்கள் ராமச்சந்திரன், பாலமுருகன், ராமசாமி, ஞானசெல்லப்பா, ராமமூர்த்தி, வேலுச்சாமி, கருப்பசாமி, ஆண்ட்ரூஸ், தங்கராஜ், முருகன், ராஜேந்திரன், கந்தவேல், கருப்பசாமி, சீதாராமன், மாரிசாமி, மாயகிருஷ்ணன் மற்றும் சூரப்பா, சகாயராஜ், பரமசிவன், சிகாமணி, ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை நக்க முத்தலன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் செய்திருந்தார். முடிவில் அருண் நன்றி கூறினார்.

    Next Story
    ×