என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்25 July 2022 9:55 AM GMT
- நெல்லை மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு செய்த தி.மு.க. அரசு கட்டண உயர்வுகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
நெல்லை:
தமிழ் மாநில காங்கிரஸ் நெல்லை மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் தற்போது அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தி உள்ளது. ஏற்கனவே கடந்த 6 மாதத்திற்கு முன்புதான் வீட்டு வரி, சொத்து வரியை உயர்த்தியது. தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தி உள்ளது.
இது போன்று தொடர்ந்து ஏழை மக்களை பாதிக்கும் வகையில் அரசு பல்வேறு கட்டணங்களையும் உயர்த்தி வருவதால் பொது மக்களுக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது.
ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு செய்த தி.மு.க. அரசு இந்த கட்டண உயர்வுகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X