search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேர்தல் ஆணையத்தின் கடிதத்திற்கு மு.க.ஸ்டாலின் பதிலளிப்பார்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
    X

    தேர்தல் ஆணையத்தின் கடிதத்திற்கு மு.க.ஸ்டாலின் பதிலளிப்பார்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

    • தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நேரங்களில் அளிக்கப்படும் வாக்குறுதிகளில் இலவசங்கள் குறித்து எந்த வகையில் அந்த இலவசங்கள் வழங்கப்படுகிறது?
    • நிதி குறித்து எழுத்துப்பூர்வமாக தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பி இருக்கிறது.

    மதுரை:

    மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி 3-வது மண்டலத்தில் சுந்தரராஜபுரம் பகுதியில் புதிய ரேஷன் கடையை தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து சுப்பிரமணியபுரத்தில் மாநகராட்சி உறுப்பினரின் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நேரங்களில் அளிக்கப்படும் வாக்குறுதிகளில் இலவசங்கள் குறித்து எந்த வகையில் அந்த இலவசங்கள் வழங்கப்படுகிறது? அதற்கான நிதி குறித்து எழுத்துப்பூர்வமாக தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பி இருக்கிறது.

    இந்த கடிதம் குறித்து பதில் அளிக்க வேண்டியது அரசியல் கட்சித் தலைவர்கள் தான். நான் எனது கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை என்றாலும் மாநில நிதி அமைச்சர் என்ற முறையில் அல்லது சராசரி ஒரு மனிதன் பகுத்தறிவு சிந்தனையுடன் சொல்லும் கருத்து என்னவென்றால் தேர்தல் ஆணையம் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு வரும்போது நாங்கள் எந்த குழுவும் அமைக்கவில்லை என்று கூறிவிட்டு தற்போது கூறும் கருத்து என்பது முரண்பாடாக இருக்கிறது.

    அப்போதே திராவிட முன்னேற்றக் கழகம் இந்த வழக்கு குறித்து எங்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியது. இந்த கருத்துக்கு அரசியல் அனுபவம் வாய்ந்த எங்கள் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளிப்பார்.

    மத்திய அரசு ஒரு தலைப்பட்சமாக நிதியினை வைத்து பல அரசியல் தந்திர வேலைகளை செய்ய முடியும் என்று நினைக்கிறது. தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை திறந்து வைத்த பிரதமர் அதே நாளில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி விட்டு மதுரையில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில் ஒரு சுவர் கூட எழுப்பவில்லை என்பது பாரபட்சமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி பொன் வசந்த், மண்டல தலைவர் பாண்டிச் செல்வி, மிசா பாண்டி, போஸ் முத்தையா, பாலா மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், மாவட்ட தலைவர் கார்த்திகேயன், ஜெயந்திபுரம் முருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×