என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாதவரத்தில் மாநகர பஸ் மோதி பிளஸ்-2 மாணவன் பலி
- பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் டிரைவரான அனுமந்தையை சேர்ந்த சங்கர் என்பவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
கொளத்தூர்:
வியாசர்பாடி,மேல்பட்டி பொன்னப்பன் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ராஜேஷ் (வயது16). இவர் பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பகுதி நேரமாக திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கேட்டரிங் சர்வீஸ் செய்து வந்தார். இவர் மாதவரம் அடுத்த வடபெரும்பாக்கத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வேலை முடிந்து செந்தில்குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டு இருந்தார்.
மாதவரம் ரவுண்டானா அருகே வந்தபோது பின்னால் வந்த மாநகர பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். செந்தில்குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் டிரைவரான அனுமந்தையை சேர்ந்த சங்கர் என்பவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்