search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கே.கே.நகரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது
    X

    கே.கே.நகரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
    • 2 பேரையும் போலீசார் கைது செய்து 1 கிலோ 600 கிராம் கஞ்சா, ரூ.5ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    சென்னை :

    கே.கே நகர், ராஜமன்னார் சாலை 80அடி சாலை சந்திப்பில் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது அவர்கள் கஞ்சா கடத்த வந்திருப்பது தெரிந்தது. விசாரணையில் அவர்கள் சைதாப்பேட்டையை சேர்ந்த பிரவீன், சுந்தர் என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து 1 கிலோ 600 கிராம் கஞ்சா, ரூ.5ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×