search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில்  கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு
    X

    கோவையில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு

    • தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
    • 3 பேர் மொபட்டில் பின் தொடர்ந்து சென்று மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர்.

    கோவை

    கோவை சங்கனூர் அருகே உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் முருகன் இவரது மகன் நிகந்தன் (வயது 21).

    இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் விமான நிலையம் பின்புறம் வழியாக சென்று கொண்டிருந்தார்.

    அப்போது 3 பேர் மொபட்டில் பின் தொடர்ந்து சென்று மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர்.

    பின்னர் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாளை காட்டி மிரட்டி அவரிடம் பணம் பறிக்க முயற்சி செய்தனர்.

    ஆனால் நிகந்தன் பணத்தை கொடுக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் 3 பேரும் சேர்ந்து அரிவாளால் அவரை வெட்டினர். நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார்.

    இதனை பார்த்த 3 பேரும் நிகந்தன் அணிந்திருந்த வெள்ளி கை செயின், மோதிரம், வாட்ச், ரூ. 150 ரொக்க பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிகந்தனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். இதுகுறித்து கிளைமேட் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டி செயின் மோதிரம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×