என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை அருகே முதியவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
- மதுபோதையில் இருந்த வாலிபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுடலைமுத்துவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார்
- தலைமறைவான கோபாலகிருஷ்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த சீதபற்பநல்லூர் அருகே உள்ள புதூர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து(வயது 60).
நேற்று இரவு சுடலைமுத்து தனது வீட்டின் முன்பு நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு அதே ஊரில் மேலத்தெருவில் வசிக்கும் கோபாலகிருஷ்ணன்(35) என்பவர் வந்தார்.
மதுபோதையில் இருந்த அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுடலைமுத்துவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சுடலைமுத்து நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதுதொடர்பாக சீதபற்பநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கோபாலகிருஷ்ணன் அந்த பகுதியில் உள்ள ஒரு குளத்தில் இரவு நேரங்களில் மீன்களை திருடி விற்று வந்துள்ளார்.
இதனை குத்தகை எடுத்தவர்கள் சுடலைமுத்துவிடம் கூறி உள்ளனர். இதனால் அவர், கோபாலகிருஷ்ணனை கண்டித்த ஆத்திரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவான கோபாலகிருஷ்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்