என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாளையில் டாஸ்மாக் கடை தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு
- சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து வண்டியின் பதிவெண்ணை வைத்து விசாரணை செய்தனர்.
- மணிகண்டன் என்பவர் மார்க்கெட் பகுதிக்கு சென்று 2 பேரையும் அரிவாளால் வெட்டியது தெரிய வந்தது
நெல்லை:
பாளை சாவடி தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 51). அதே தெருவை சேர்ந்தவர் கணேசன்(54).
அரிவாள் வெட்டு
இவர்கள் 2 பேரும் பாளை மார்க்கெட் அருகே நேற்று நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், 2 பேரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றார்.
இதில் படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணியன், கணேசன் ஆகியோர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சி.சி.டி.வி. காமிரா
இதுதொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து அரிவாளால் வெட்டிய நபரை தேடி வந்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து வண்டியின் பதிவெண்ணை வைத்து விசாரணை செய்தனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன்(24) என்பவர் 2 பேரையும் வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-
டாஸ்மாக்கில் தகராறு
தாழையூத்து பூந்தோட்ட தெருவை சேர்ந்தவர் கங்கை முருகன்(வயது 56). இவர் தனது மனைவியின் சிகிச்சைக்காக சமீபத்தில் பாளை பரிசுத்த ஆவி தெருவில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறினார்.
நேற்று மார்க்கெட் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் அவர் மது அருந்த சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பாலசுப்பிரமணியன், கணேசன் ஆகியோருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
கைது
இந்த தகராறில் 2 பேரும் சேர்ந்து கங்கை முருகனை அவதூறாக பேசி உள்ளனர். இதனை கங்கை முருகன் தனது மகனிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் மார்க்கெட் பகுதிக்கு சென்று 2 பேரையும் அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து கங்கை முருகன், மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்