என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கழிவு செய்யபட்ட கால்நடைகள் ஏலம்- கலெக்டர் தகவல்
- மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்த ஏலத்தில் பங்கு பெற அனுமதி இல்லை.
- ஏலத்தில் கலந்து கொள்பவர்களின் பெயர் மற்றும் முகவரி காவல்துறையினருக்கு அனுப்பி வைக்கப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாவட்டம் நடுவூர் கால்நடை பண்ணையில் கழிவு செய்யப்பட்ட 17 கால்நடைகள் வருகின்ற 17-ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் பொது ஏலம் நடைபெற உள்ளது.
அரசின் விதிமுறைகளின் படி பகிரங்கமாக அலுவலக வளாகத்தில் ஏலம் நடத்தப்படும். ஏலத்தில் கலந்து கொள்ள நபர்கள் தனித்தனியாக ஏல டேவணி தொகை / முன்வைப்புத் தொகை ரூ.20 ஆயிரம் டெப்டி டைரக்டர் ஆப் அனிமல் ஹஸ்பண்டரி, மாவட்ட லைவ்ஸ்டாக் பார்ம் நடுவூர் என்ற பெயரில் வங்கி வரைவோலை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஒரத்தநாடு மாற்றத்தக்க வகையில் வங்கி வரை ஓலை மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும்.
வங்கி வரை ஓலையில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர் பெயர்கள் மட்டுமே பதிவு செய்து டோக்கன் வழங்கப்பட்டு அந்த நபர் மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
வைப்புத் தொகை செலுத்தப்படும் வங்கி வரை ஓலைகள் அனைத்தும் 10-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை பெறப்பட்ட வங்கி வரை ஓலையாக இருக்க வேண்டும்.
வங்கி வரைவோலை துணை இயக்குனர் அலுவலகத்தில் 16-ந் தேதி காலை 10:30 மணி முதல் மாலை 4 மணி வரை பெறப்படும். ஏலத்தில் கலந்து கொள்பவர்களின் பெயர் மற்றும் முகவரி காவல்துறையினருக்கு அனுப்பி வைக்கப்படும். ஏலம் முடிந்தவுடன் அதிக தொகைக்கு ஏலம் கோரியவரை தவிர இதர ஏலதாரார்களின் வரை ஓலை திருப்பி வழங்கப்படும். மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்த ஏலத்தில் பங்கு பெற அனுமதி இல்லை.
ஏலம் கேட்பு செய்யப்பட்ட தொகையானது அரசு நிர்ணயித்த விலையை காட்டிலும் குறைவாக இருந்தாலோ அல்லது நிர்வாக காரணங்களினால் தடைபட்டாலோ அல்லது இயற்கை இடர்பாடுகளினால் காலதாமதம் ஏற்பட்டாலோ இந்நிகழ்வை தள்ளி வைக்கவும், ரத்து செய்யவும் அலுவலருக்கு முழு அதிகாரம் உண்டு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்