search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
    X

    காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் சங்கத்தினர்.

    தஞ்சையில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

    • ஒப்பந்தம், உத்தரவின் விபரத்தை வழங்க வேண்டும்.
    • தினக்கூலியை ரூ.550 லிருந்து 650 ஆக உயர்த்தி கொடுக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட தூய்மை பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் கலியபெருமாள் தலைமையில் நூற்றுக்கும் அதிகமான தூய்மை பணியாளர்கள் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

    அப்போது தூய்மை பணியாளர்களை புதிதாக டெண்டர் எடுத்த நிறுவனம் அல்லது முகமை யார் என்பதை அறிவிக்க வேண்டும்.

    ஒப்பந்தம், உத்தரவின் விபரத்தை வழங்க வேண்டும்.

    தஞ்சை மாநகர தூய்மை பணியாளர்கள் சார்பில் தினக்கூலியை ரூ.550 லிருந்து 650 ஆக உயர்த்தி கொடுக்க மாவட்ட ஆட்சியரின் செயல்முறை ஆணையை உடனே வழங்கிட வேண்டும்.

    மாநகர தூய்மை பணியா ளர்கள் நலச்சங்கத்திற்கு தெரிவிக்காமல் புதிய தூய்மை பணியாளர்களை நியமிக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதையடுத்து போலீசார், தூய்மை பணியாளர் சங்கத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இருப்பினும் தொடர்ந்து போராட்டத்தை மேற்கொ ண்டனா். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×