என் மலர்tooltip icon

    சேலம்

    • கூட்டத்திற்கு நகராட்சிமன்ற தலைவர் குப்பு என்கிற குணசேகரன் தலைமை வகித்தார்.
    • அடிப்படை வசதிகள் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் உள்ளதால் அதை உடனே நிறைவேற்றி தர வேண்டும் என்று கூறி மன்ற அறையில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி மன்றகூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சிமன்ற தலைவர் குப்பு என்கிற குணசேகரன் தலைமை வகித்தார். ஆணையாளர் சேம் கிங்ஸ்டன், துணைத்தலைவர் தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் பாலசுப்பிரமணியம், பா.ம.க. உறுப்பினர்கள் தனபால், குமரேசன், தி.மு.க. உறுப்பினர் வேதாச்சலம் ஆகியோர் தங்களின் வார்டுகளில் போதுமான அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் தவித்து வருவதாக குற்றம் சாட்டினர்.

    அதனைத் தொடர்ந்து பேசிய 4-வது வார்டு உறுப்பினர் சாமுண்டீஸ்வரி தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் போடப்பட்ட தார் சாலைகள் மிகவும் தரமற்ற முறையில் உள்ளதாக ஆணையாளரிடம் புகார் தெரிவித்தார். மேலும் குடிநீர் சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் உள்ளதால் அதை உடனே நிறைவேற்றி தர வேண்டும் என்று கூறி மன்ற அறையில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

    அதனைத் தொடர்ந்து தங்களின் வார்டுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனே நிறைவேற்றி தருவதாக தலைவர் உறுதி அளித்ததின் பேரில் மீண்டும் எழுந்து தனது இருக்கையில் அமர்ந்தார். இந்த கூட்டத்தில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மாவட்ட கலெக்டர் மற்றும் குழுவின் உறுப்பினர்களுடன் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, தொல்பொருள் அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுத்தலைவரும் எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன், மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் அரசு உறுதி மொழிக் குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் அண்ணாதுரை, அருள், எம்.கே.மோகன், ராமலிங்கம் ஆகியோருடன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்விற்குப் பின் அரசு உறுதிமொழிக் குழுத்தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஏற்காடு அரசு மருத்துவ மனையில் இருந்த உடல் மறுகூராய்வு செய்கின்ற இடம் பழுதடைந்த நிலையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய பிரேதப் பரிசோதனை அறை கட்டித் தரரப்படும் என்று அறிவித்தார். அதன் அடிப்படையில் தற்போது கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் நிலையில் உள்ளது.

    இந்த உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுவானது

    மாவட்ட கலெக்டர் மற்றும் குழுவின் உறுப்பினர்களுடன் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பணியானது தற்போது முற்றிலும் நிறைவுபெற்று உள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் இக்கட்டடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

    இதனைத் தொடர்ந்து குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, தொல்பொருள் அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் பிற்பகல் 3 மணிக்கு மேல் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுவானது அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் அலர்மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு இணைச் செயலாளர் கருணாநிதி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • ஒரு லிங்கை அனுப்பி அதில் பணத்தை முதலீடு செய்தால் அதிக கமிஷன் பெறலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறினர்.
    • இது தொடர்பாக அந்த நபரை மீண்டும் தொடர்பு கொள்ள முடியாததால் ஏமாற்றம் அடைந்த அவர் சம்பவம் குறித்து சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் கொடுத்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூரை சேர்ந்தவர் 32 வயது வாலிபர்். இவருக்கு பகுதி நேர வேலை ெதாடர்பாக வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி வந்தது. அதில் தொடர்பு கொண்ட போது மறுமுனையில் பேசிய மர்ம நபர் ஒரு லிங்கை அனுப்பி அதில் பணத்தை முதலீடு செய்தால் அதிக கமிஷன் பெறலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறினர்.

    இதனை நம்பிய அவர் 7 தவணைகளாக ரூ.6 லட்சத்து 71 ஆயித்து 241 - ஐ அவர் கூறிய வங்கி கணக்குக்கு அனுப்பினார். ஆனால் அவர் கூறிய படி கமிஷன் கொடுக்கவில்லை. இது தொடர்பாக அந்த நபரை மீண்டும் தொடர்பு கொள்ள முடியாததால் ஏமாற்றம் அடைந்த அவர் சம்பவம் குறித்து சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்று விசாரணை நடத்தினர்.
    • மணிகண்டன் என்ற மாற்று திறனாளி கொலை வழக்கிலும் குண்டர் சட்டத்தில் கைதானது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள குள்ளம்பட்டி பிரிவு ரோட்டில் விநாயகர் கோவில் உள்ளது.

    நேற்றிரவு 8 மணியளவில் இந்த பகுதியில் வாலிபர் ஒருவரின் தலை ஒன்று தனியாக துண்டிக்கப்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட சாலையில் வீசப்பட்டு கிடந்தது. இருட்டான பகுதி என்பதால் சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டு சென்றபோது தலை கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுபற்றி தெரிய வந்ததும் அந்த பகுதியில் வந்து சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

    இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன், வாழப்பாடி டி.எஸ்.பி. ஹரிசங்கரி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது கொலை செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு கிடந்த வாலிபருக்கு 35 வயது இருக்கும் என தெரிய வந்தது. மேலும் துண்டிக்கப்பட்டு கிடந்த தலையில் இருந்து ரத்தம் வடிந்ததால் கொலை நடந்து சில மணி நேரமே ஆவது தெரியவந்தது. எனவே உடல் இந்த பகுதியில் தான் எங்காவது வீசி இருக்கலாம் என்று போலீசார் கருதினர். தொடர்ந்து அந்த வாலிபரின் தலையை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் குள்ளம்பட்டி, அக்ரஹாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாலிபரின் உடலை தேடினர். இன்று அதிகாலை அக்ரஹாரம் ஏரி கரையில் வாலிபரின் உடலை போலீசார் மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்று விசாரணை நடத்தினர். மேலும் கொலை செய்ய ப்பட்ட நபர் குள்ளம்பட்டி, வலசையூர், காட்டூர் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம்? என்று போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக வாழப்பாடி டி.எஸ்.பி. ஹரிசங்கரி தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படையினர் கொலையாளியை தேடினர். அப்போது அங்குள்ள வேகத்தடை அருகே போலீசார் சார்பில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

    அதில் காரிப்பட்டியை அடுத்த கள்ளிக்காடு பகுதியை சேர்ந்த திருமலை (32) என்பவர் ரோட்டில் கிடந்த வாலிபரின் தலையை அங்கு வீசி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் கஞ்சா மற்றும் மது போதையில் இருந்ததால் உளறியபடியே இருந்தார். இதையடுத்து போலீசார் இன்று காலை அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர். மேலும் சம்பவம் குறித்து அந்த பகுதியில் நேற்றிரவு போலீசார் விசாரணை நடத்திய போது பரபரப்பு தகவல்கள் வெளியானது, அதன் விவரம் வருமாறு-

    கொலை செய்யப்பட்ட நபர் அங்குள்ள மதுக்கடையில் மது வாங்கிய போது திருமலைக்கும், கொலை செய்யப்பட்ட வாலிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும், அப்போது அந்த நபர் திருமலையை தாக்கியதாகவும், இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் திருமலை வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து கழுத்தை அறுத்து அந்த வாலிபரை கொலை செய்து தலையை அங்கு வீசி சென்றதும் தெரியவந்தது.

    மேலும் போலீசாரிடம் சிக்கியுள்ள திருமலை வாழப்பாடியை சேர்ந்த ஒருவரை கொலை செய்துள்ளார். மேலும் அந்த பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற மாற்று திறனாளி கொலை வழக்கிலும் குண்டர் சட்டத்தில் கைதானது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் 40 சதவீதம் விலை உயர்ந்துவிட்டது.
    • அ.தி.மு.க. ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.

    சேலம்:

    சேலம் மாநகர் மாவட்டத்திலுள்ள பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய இஸ்லாமிய மக்கள் 500 பேர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இதைத்தொடர்ந்து மசூதியில் இஸ்லாமியர்களுடன் இணைந்து தொழுகை மேற்கொண்டார். இதனிடையே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 520 வாக்குறுதிகளை செயல்படுத்தி நடைமுறைப்படுத்துவோம் என்று தேர்தல் நேரத்தில் தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். தி.மு.க. ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டு காலம் ஆகிவிட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த நன்மை என்னவென்றால் கேள்விக்குறியாக தான் உள்ளது. மேலும் தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளில் ஏதோ சிலவற்றை மட்டும் நிறைவேற்றிவிட்டு 520 அறிவிப்புகளையும் நிறைவேற்றிவிட்டதாக பொய்யாக சொல்லி வருகிறார். இது விஞ்ஞான உலகம், எதை சொன்னாலும் மக்கள் கேட்பதற்கு தயாராக இல்லை; குறிப்பாக 100 சதவீதம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக தி.மு.க. அரசாங்கம் மார்தட்டி வருகிறது.தமிழக முதல்வர் முழுபூசணிக்காயை சோற்றில் மறைத்து வருகிறார். அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் 40 சதவீதம் விலை உயர்ந்துவிட்டது. இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாது. அதிமுக மக்களுடன் மக்களாக வாழ்ந்து வருவதால் மக்களின் சிரமங்கள், துன்பங்கள் அனைத்தும் அறிந்து இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.


    தற்போது உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக கொண்டு வரவேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்; நிச்சயம் இது நடக்காது.

    அ.தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் சாதாரண தொண்டன் பொதுச்செயலாளர் கூட வரமுடியும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வகுத்து கொடுத்த கொள்கையில் இருந்து ஒரு புள்ளி அளவும் அதிமுக மாறாது. அதிமுகவைப் பொறுத்தவரைக்கும் ஜாதி, மதம், பேதம் கிடையாது; அனைவரும் ஒன்று என்று கருதக்கூடியது. அதிமுகவின் அவைத்தலைவர் ஒரு இஸ்லாமியர் என்று பெருமிதம் தெரிவித்தார். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் அதிமுகவை ஆதரிக்க வேண்டும்.

    40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அதிமுகவையே இஸ்லாமிய மக்கள் ஆதரவு தந்து வெற்றி பெறசெய்ய வேண்டும். இஸ்லாமிய மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்க அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவ்வாறு ஆதரித்தால் உங்களுடைய ஒவ்வொருவரின் குரல் பாராளுமன்றத்தில் நிச்சயம் ஒலிக்கும் என்றும் உறுதியளித்தார்.

    • சென்னை நோக்கி சென்ற கண்டெய்னர் லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.
    • கண்டெய்னர் லாரியின் டிரைவரான நெல்லையை சேர்ந்த பேச்சிமுத்து பாண்டியன் என்பவர் படுகாயம் அடைந்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் இருந்து சேலம் நோக்கி இன்று காலை 7 மணி அளவில் ஒரு மினி ஆட்டோ வந்து கொண்டிருந்தது. மினி ஆட்டோவை விழுப்புரத்தை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் அரக்கோணம் பகுதியை சேர்ந்த சுதர்சன் மற்றும் குடியாத்தம் பகுதியை சேர்ந்த பிரகாசம் ஆகியோரும் வந்தனர்.

    சேலம்-சென்னை புறவழிச் சாலையில் வாழப்பாடி கிழக்குக்காடு அருகே மினி ஆட்டோ வந்தபோது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கண்டெய்னர் லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.

    இந்த விபத்தில் மினி ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. இதில் டிரைவர் பிரவீன்குமார், சுதர்சன் மற்றும் பிரகாசம் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

    இது குறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் அங்கிருந்த சுங்கச்சாவடி பணியாளர்களுடன் சேர்ந்து கிரேன் எந்திரத்தை பயன்படுத்தி 3 பேர் உடலையும் மீட்டனர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தில் கண்டெய்னர் லாரியின் டிரைவரான நெல்லையை சேர்ந்த பேச்சிமுத்து பாண்டியன் என்பவர் படுகாயம் அடைந்தார். அவரையும் மீட்ட போலீசார் சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரி சங்கரி, இன்ஸ்பெக்டர் உமாசங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

    இந்த விபத்தால் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்களை அப்புறப்படுத்திய போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மினி ஆட்டோ மீது லாரி மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • மாதேஷ். இவரது மனைவிக்கு கடந்த 1½ மாதத்திற்கு முன்பு 3-வதாக பெண் குழந்தை பிறந்தது.
    • நேற்றிரவு குழந்தைக்கு வயிற்றுப்போக்குடன் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த குழந்தையை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    சேலம்:

    சேலம் அன்னதானப்பட்டி சண்முகாநகர் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். இவரது மனைவிக்கு கடந்த 1½ மாதத்திற்கு முன்பு 3-வதாக பெண் குழந்தை பிறந்தது.

    இந்த நிலையில் நேற்றிரவு குழந்தைக்கு வயிற்றுப்போக்குடன் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த குழந்தையை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை நேற்றிரவு பரிதாபமாக இறந்தது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குமார் (வயது 34). ஈரோட்டில் உள்ள தனியார் நீச்சல் குளத்தில் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்தார்.
    • போலி ஆவணங்களின் மூலம் எனது மகளை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், எனவே, குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருந்தார்.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் வீரன். இவரது மகன் குமார் (வயது 34). ஈரோட்டில் உள்ள தனியார் நீச்சல் குளத்தில் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்தார்.

    காதல்

    இவரும், ஈரோட்டை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். பிறகு அவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்ததால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு இருவரும் சங்ககிரி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

    இதனிடையே சம்பந்தப்பட்ட பெண்ணின் தந்தை தரப்பில் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் குமார் மீது ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது. அதில் போலி ஆவணங்களின் மூலம் எனது மகளை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், எனவே, குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், சாதி சான்றிதழ், பத்திரிகை உள்ளிட்ட போலியாக ஆவணங்கள் தயார் செய்து ஈரோட்டை சேர்ந்த பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்தது உறுதிசெய்யப்பட்டது.

    ஓராண்டு ஜெயில்

    இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சேலம் 6-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கு மாஜிஸ்திரேட்டு கமலகண்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, போலி ஆவணங்களின் மூலம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த குமாருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவு பிறப்பித்தார்.

    • சங்ககிரியை சேர்ந்தவர் 27 வயது வாலிபர். இவர் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடினார்.
    • ஆன்லைனின் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற முடியும் என கூறினார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் 27 வயது வாலிபர். இவர் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடினார். அப்போது இவரது வாட்ஸ் அப்புக்கு கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி பகுதி நேர வேலை குறித்து விளம்பரம் வந்தது.

    அதில் தெரிவிக்கப்பட்டிருந்த எண்களை டெலிகிராம் மூலம் அந்த வாலிபர் தொடர்பு கொண்டு பேசினார். எதிர்முனையில் பேசிய நபர் ஆன்லைனின் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற முடியும் என கூறினார். அதை நம்பிய அவர் மர்மநபர் அனுப்பிய யு.பி.ஐ.-ஐ.டி.க்களில் பல்வேறு வங்கி கணக்குகளில் இருந்து 9 லட்சத்து 33 ஆயிரத்து 710 ரூபாயை அனுப்பினார்.

    பணம் சென்றடைந்த நிலையில் மர்ம நபர் தொடர்பை துண்டித்து விட்டார். பல முறை முயற்சி செய்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாலிபர் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் அந்த வாலிபர் அனுப்பிய வங்கி கணக்கு எண்களை வைத்து பணம் யாரிடம் சென்றுள்ளது என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • சேலம் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி சேலம் நெத்திமேடு ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
    • வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்வாணி மற்றும் உடற்கல்வி இயக்குனர் சுரேஷ்குமார், சக ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

    காக்காபாளையம்:

    தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் சேலம் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி சேலம் நெத்திமேடு ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் கருப்பூர் எஸ்.எஸ்.ஆர்.எம் மேல்நிலைப் பள்ளியை எதிர்த்து களம் கண்ட இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 15-க்கு 11 என்ற புள்ளியில் வென்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர்.

    அதேபோல் 17 வயதுக்கு உட்பட்டோ ருக்கான போட்டியில் சேலம் ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியை எதிர்த்து இறுதி போட்டியில் விளையாடிய இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 2-ம் இடம் பிடித்தது.

    14 வயதுக்கு உட்பட்டோருக்கான பூப்பந்து போட்டியில் பெத்தநாயக்கன்பாளையம் அரசு மாதிரி பள்ளியை எதிர்த்து விளையாடி இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்வாணி மற்றும் உடற்கல்வி இயக்குனர் சுரேஷ்குமார், சக ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

    • சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற ஜனவரி மாதம் 7 மற்றும் 8-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.
    • சேலத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுடனான விழிப்புணர்வுக் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் இன்று நடைபெற்றது.

    சேலம்:

    சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற ஜனவரி மாதம் 7 மற்றும் 8-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு சேலத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுடனான விழிப்புணர்வுக் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத் தில் கலெக்டர் பேசியதாவது:-

    சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த விழிப்புணர்வினை உள்ளூர் தொழிலதிபர்கள், தொழில்முனைவோர், தொழிலார்வம் கொண்ட இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.

    சேலம் மாவட்டம் தொழில் நிறுவனங்கள் தொடங்கத் தேவையான ஒப்புதல்கள், தடையின்மைச்சான்றுகள், புதுப்பித்தல் போன்றவற்றை எளிதாகப் பெற ஒரு ஒற்றைச் சாளர தீர்வுக்கான இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பி டப்பட்ட கால வரம்புக்குள் பரிசீலிக்கப்பட்டு உரிய முடிவுகள் எடுக்கப்படும்.

    இதனைக் கண்காணிக்க மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு உள்ளது. தொழில்முனைவோருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்திட மாவட்ட நிர்வாகம் எப்போதும் தயாராக உள்ளது. எனவே, தொழில்முனைவோர் சேலம் மாவட்டத்தில் மென்மேலும் முதலீடு செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் 4,334 இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 124 தொழில் முனைவோர்கள் ரூ.1,638.91 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதில் மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ., மாவட்ட தொழில் மைய துணை இயக்குநர் சிவகுமார், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பெரியசாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவரசு, மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் ரவிச்சந்திரன், இந்திய தொழில் கூட்டமைப்பு (மாநில எம்.எஸ்.எம்.இ கொள்கை) சுதாகர், மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்க பொதுச் செயலாளர் செந்தில்முருகன், உற்பத்தி திறன் குழுத் தலைவர் இளங்கோவன், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் நாகராஜன் மற்றும் தொழில் வணிக சங்கப் பிரதிநிதிகள், தொழில திபர்கள், தொழிலார்வம் கொண்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    • சேலம் தலைமை தபால் நிலைய பாஸ்போர்ட் மையத்தில் தினமும் 100 முதல் 150 பேருக்கு நேர்காணல் நடத்தி பாஸ்போர்ட் வழங்கி வருகின்றனர்.
    • சேலம் மாவட்டத்தை சேர்ந்த 1 லட்சத்து 3 ஆயிரத்து 530 பேர் பாஸ்போர்ட் பெற்றுள்ளனர்.

    சேலம்:

    தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், சேலம், ராசிபுரம், ஈரோடு, குன்னூர், திருநெல்வேலி உள்பட பல்வேறு இடங்களில் மத்திய விமான போக்குவரத்து துறை சார்பில் பாஸ்போர்ட் வழங்கும் பணியை தபால் நிலைய சேவை மையங்கள் மூலம் மேற்கொண்டு வருகின்றன.

    கோவை மேற்கு மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் இயங்கும் சேலம் தலைமை தபால் நிலைய பாஸ்போர்ட் மையத்தில் தினமும் 100 முதல் 150 பேருக்கு நேர்காணல் நடத்தி பாஸ்போர்ட் வழங்கி வருகின்றனர். அதன்படி கடந்த 6 ஆண்டுகளில் சேவை மையத்தின் மூலம் இதுவரையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 1 லட்சத்து 3 ஆயிரத்து 530 பேர் பாஸ்போர்ட் பெற்றுள்ளனர்.

    ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தவுடன் நேர்காணலுக்கான தேதி விண்ணப்ப தாரருக்கு தெரியப்படுத்தப்படுகிறது. வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வயது தொடர்பான சான்றுக்காக பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு வந்து பதிவு செய்ய வேண்டும். இந்த நேர்காணல் முடிந்ததும் கோவை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு விண்ணப்பங்களின் முழு தகவல்களும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    பின்னர் பாஸ்போர்ட் தபால் மூலம் விண்ணப்பித்தவர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் இளைஞர்கள் எளிதாக பாஸ்போர்ட் பெற முடிவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×