என் மலர்
சேலம்
- கொத்தம்பாடி பகுதியில் மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா அ.தி.மு.க. பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடந்தது.
- 150 பேர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே உள்ள கொத்தம்பாடி பகுதியில் மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா அ.தி.மு.க. பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடந்தது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட மகளிர் அணி பொது செயலாளர் லதா சேகர், அ.ம.மு.க. கலை இலக்கிய அணி மாவட்ட செயலாளர் சிலம்பரசன், அ.ம.மு.க. மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவரும் ஊராட்சி மன்ற துணை தலைவருமான தமிழ்ச்செல்வன், சமத்துவ மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் சின்னசாமி, அ.ம.மு.க. ஆத்தூர் ஒன்றிய மாணவரணி செயலாளர் ராஜேஷ் குமார் மற்றும் நிர்வாகி பிரபாகரன் பா.ம.க. பிரமுகர் செல்வம், தி.மு.க. முன்னாள் கிளைச் செயலாளர் ஜனார்த்தனன் உள்பட 150 பேர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்டம் ஆத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ரஞ்சித் ஏற்பாடு செய்திருந்தார். புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. துண்டு அணிவித்து வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை யாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
2 கோடியே 4 லட்சம் உறுப்பினர்கள்
இதுவரை 2 கோடியே 4 லட்சம் பேர் அ.தி.மு.க.வில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு சோதனை காலத்திலும் சிறப்பான ஆட்சித் தந்தவர் புரட்சித்தலைவி அம்மா.
அ.தி.மு.க. ஆட்சியில் சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றி தந்துள்ளோம். ஆசியாவி லேயே மிகப்பெரிய கால்நடை பூங்காவை தலைவாசலில் உருவாக்கித் தந்தோம். இதன்மூலம் ஆத்தூர் மற்றும் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிகள் உலகளவில் சிறப்பு பெற்றுள்ளது.
விவசாய மக்களின் கோரிக்கைகளை நிறை வேற்றி தந்தது அ.தி.மு.க. தான். கிராம மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அ.தி.மு.க. ஆட்சியில்தான் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு மிக மிக குறைவாக இருந்ததால், யாருமே கோரிக்கை வைக்கப்படாத நிலையில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை நிறைவேற்றி தந்தோம்.
இதன்மூலம் ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் இந்த ஆண்டு ஏழை மாணவர்கள் 18 பேர் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு பெற்றுள்ளனர். இவர்களின் கல்வி கட்டணத்தை அரசே செலுத்துகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- வெங்கடாஜல கவுண்டர் அவென்யூைவ சேர்ந்தவர் வெங்கடேஷ் (37), செங்காந்தாள் வியாபாரம் செய்து வந்தார்.
- கண்ணு வலி கிழங்கு கொள்முதல் செய்ய 50 லட்சம் ரூபாயை எடுத்து கொண்டு நண்பர்களுடன் சேலம் இரும்பாலை அருகே வந்தார்.
சேலம்:
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வெங்கடாஜல கவுண்டர் அவென்யூைவ சேர்ந்தவர் வெங்கடேஷ் (37), செங்காந்தாள் வியாபாரம் செய்து வந்தார். கண்ணு வலி கிழங்கு கொள்முதல் செய்ய 50 லட்சம் ரூபாயை எடுத்து கொண்டு நண்பர்களுடன் சேலம் இரும்பாலை அருகே வந்தார்.
ரூ. 50 லட்சம் பறிப்பு
அப்போது 2 கார்களில் வந்த கும்பல் போலீஸ் போல நடித்து வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர்களை கடத்தி சென்று பணத்தை பறித்து கொண்டு தப்பினர். வெங்கடேஷ் புகார் படி இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் 6 பேரை கைது செய்தனர்.
மேலும் இதில் தொடர்பு டையவர்களை கைது செய்ய துணை கமிஷனர் மதிவாணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்தனர். இதை ெதாடர்ந்து கடந்த 20-ந் தேதி மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ராேகஷ் (33), நரேஷ்குமார் (37), சுரேஷ்குமார் (34) ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். காட்பாடி அருகே உள்ள முள்ளிபாளையத்தை சேர்ந்த வேலு (42) என்பவரை நேற்று கைது செய்தனர்.
ரூ.30 லட்சம் மீட்பு
இவர்களிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டு காரும் பறிமுதல் செய்யப்பட்டது . கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் வழக்கில் கைதானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இதில் யாருக்காவது தொடர்பு உண்டா ? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான வர்களை காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் இந்த வழக்கு தொடர்பாக பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்பதால் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
- அனில்குமார் (27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன் (50) என்பவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
- 8 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ஆரூர்பட்டி கிராமம் கணக்குப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அனில்குமார் (27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன் (50) என்பவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த தகராறு தொடர்பாக இரு தரப்பிலும் கொடுத்த புகாரின் பேரில் முருகன் (50), சிவன் (26), ரஞ்சித்குமார் (25), அனில்குமார் (27), சிவா (26), அன்பு (30), அரவிந்தன் (25), ராஜமுத்து (55) உட்பட 8 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்க ளாக மழை பெய்து வருகிறது.
சேலம்:
கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்க ளாக மழை பெய்து வருகிறது. நேற்றும் பரவலாக மழை பெய்தது.
கன மழை
குறிப்பாக எடப்பாடி, ெபத்தநாயக்கன் பாளையத்தில் நேற்றிரவு தொடங்கிய மழை விடிய விடிய கன மழையாக பெய்தது. இதே போல தலைவாசல், சங்ககிரி, ஆத்தூர் பகுதிகளிலும் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள்மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்காட்டில் நேற்றிரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை சாரல் மழையாக பெய்தது . மேலும் நேற்றிரவு பனி மூட்டமும் நிலவியது. இதனால் கடும் குளிர் நிலவி வருவதால் பொது மக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவியாய் தவித்து வருகிறார்கள்.
127.9 மி.மீ. மழை
மாவட்டத்தில் அதிக பட்சமாக எடப்பாடியில் 23 மி.மீ. மழை பெய்துள்ளது. பெத்தநாயக்கன் பாளையத்தில் 18, தம்மம்பட்டி 16, தலைவாசல் 14, சங்ககிரி 13.2, ஆத்தூர் 12, சேலம் 6.1, ஏற்காடு 6, வீரகனூர் 5, கரியகோவில் 5, கெங்கவல்லி 4, ஆனைமடுவு 3, ஓமலூர் 2, காடையாம்பட்டி 0.6 மி.மீ என மாவட்டம் முழுவதும் 127.90 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.
- டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 10-ந்தேதியுடன் நிறுத்தப்பட்டது.
- அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது.
இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து மேட்டூர் அணை நீர்மட்டம் 30 அடிக்கும் கீழ் குறைந்தது. இதனால் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 10-ந்தேதியுடன் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணைக்கு நேற்று 4 ஆயிரத்து 431 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 4 ஆயிரத்து 72 கனஅடியாக குறைந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
நேற்று 64.64 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 65.04 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 28.58 டி.எம்.சி.யாக உள்ளது.
- தினேஷ் (வயது 27). இவர் ஐ.டி கம்பெனியின் வேலை பார்த்து வருகிறார்.
- வீடு திறந்து கிடப்பதை பார்த்த மர்ம நபர்கள் உள்ளே புகுந்து தூங்கி கொண்டிருந்த ஜெயராணி முகத்தில் மிளகாய் பொடி தூவினர். இதனால் அவர் எரிச்சலில் சத்தம் போட்டு கொண்டிருந்தார்.
சேலம்:
சேலம் அழகாபுரம் மிட்டா புதூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் தினேஷ் (வயது 27). இவர் ஐ.டி கம்பெனியின் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை 5 மணிக்கு வீட்டில் இருந்து தினேஷ் தனது நண்பர் அருண் என்பவருடன் வெளியில் டீ குடிக்க சென்றார். வீட்டில் அவரது சித்தி, பாட்டி, தம்பி ஆகியோர் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது வீடு திறந்து கிடப்பதை பார்த்த மர்ம நபர்கள் உள்ளே புகுந்து தூங்கி கொண்டிருந்த ஜெயராணி முகத்தில் மிளகாய் பொடி தூவினர். இதனால் அவர் எரிச்சலில் சத்தம் போட்டு கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 5 பவுன் நகையை திருடிக் கொண்டு வெளியே ஓடினர்.
உடனே ஜெயராணி வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தார். அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இது குறித்து அழகாபுரம் போலீசில் புகார் ெகாடுக்கப்பட்டது. அப்போது ஜெயராணி தன் மீது மர்ம நபர் ஒருவர் மிளகாய் பொடி தூவி பீரோவில் இருந்த 5 பவுன் நகையை திருடி சென்று விட்டதாக கூறினார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முத்துராஜ் (வயது 27). இவரது தோட்டத்தில் தானாக வளர்ந்த 10 அடி உயரமும், 15 செ.மீட்டர் சுற்றளவு கொண்ட சந்தனம் மரம் வளர்ந்து வந்தது.
- நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த மரத்தை மர்ம நபர்கள் வெட்டினர்.
சேலம்:
சேலம் பெருமாள்மலை அடிவாரம் கழுக்கன்வட்டம் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 27). இவரது தோட்டத்தில் தானாக வளர்ந்த 10 அடி உயரமும், 15 செ.மீட்டர் சுற்றளவு கொண்ட சந்தனம் மரம் வளர்ந்து வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த மரத்தை மர்ம நபர்கள் வெட்டினர். இதனை பார்த்த முத்துராஜ் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அழகாபுரம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சற்று தூரத்தில் வெட்டப்பட்ட சந்தன மரக்கட்டைகள் கிடந்தது. சந்தன மரம் நன்றாக முற்றினால் தான் வாசனை வீசும். ஆனால் வெட்டப்பட்ட மரத்தின் கட்டை முற்றாததால் அதிலிருந்து எந்த வாசனையும் வீசவில்லை. மர்ம நபர்கள் சுமார் 50 கிலோ எடை கொண்ட சந்தன கட்டைகளை அங்கேயே வீசி விட்டு சென்று விட்டனர். இதனை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
- கார்த்திகை தீபத்தை யொட்டி, சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் இன்று காலை 6 மணிக்கு மூலவர் சுகவனேஸ்வரர், சொர்ணாம்பிகை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், விபூதி உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனை நடைபெற்றது.
- மாலை 6 மணிக்கு உற்சவர் சோமாஸ்கந்தர், சண்முகர் சாமிக்கு பூஜை நடக்கிறது.
சேலம்:
கார்த்திகை தீபத்தை யொட்டி, சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் இன்று காலை 6 மணிக்கு மூலவர் சுகவனேஸ்வரர், சொர்ணாம்பிகை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், விபூதி உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனை நடைபெற்றது.
தொடர்ந்து காலை நடராஜர் சன்னதியில்பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு உற்சவர் சோமாஸ்கந்தர், சண்முகர் சாமிக்கு பூஜை நடக்கிறது.பின்னர் மூலவர் சன்னதியில் இருந்து தீபம் ஏற்றுவது தொடங்கப்படுகிறது.
இதை அடுத்து உட்பிரகாரத்தில் சோமாஸ் கந்தர், சண்முகம் சாமி புறப்பாடு நடக்கிறது. வெளி பிரகாரத்தில் சொக்கப் பனை எரிப்பு முடிந்த பின்பு, கோவில் முன்பு உள்ள 2 தீப தூண்களில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. பின்னர் சோமாஸ்கந்தர், சண்முகர் திருவீதி உலா சின்ன கடை வீதி, 2-வது அக்ரஹாரம் வழியாக வலம் வருகிறது.
கோவிலில் ஏற்றப்படும் தீபம் 2 நாட்கள்தொடர்ந்து எரிய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இதையொட்டி, மகாதீபம் ஏற்றப்படும் தூண்களில் தற்காலிகமாக சாரம் கட்டப்பட்டுள்ளது. மேலும் திருவீதி உலாசெல்லும் வாகனங்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், சேலம் கோட்டை மாரியம்மன், தாரமங்கலம் கைலாச நாதர், பேளூர் தான்தோன்றீஸ்வரர், ஆத்தூர் காயநிர்ம லேஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர் உள்பட சேலம் மாவட்டத்தில் உள்ள சிவன், அம்மன், விநாயகர், முருகன் கோவில்களில் கார்த்திகை தீபத்தையொட்டி மகா தீபம் ஏற்றப்படுகிறது. சேலம் பழைய பஸ் நிலையம், கடைவீதி, வின்சென்ட், அஸ்தம்பட்டி, குகை, தாதகாப்பட்டி, நெத்திமேடு, செவ்வாய்பேட்டை, அம்மாப்பேட்டை, தேர்நிலையம், 2-வது அக்ரஹாரம் உள்பட பல பகுதிகளில், மண் அகல் விளக்குகள் விற்பனைக்காக குவிக்கப் பட்டுள்ளது. இதை பெண்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். ஒரு விளக்கு ரூ.5 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது.
- அப்துல்கலாம் அறக் கட்டளை இணைந்து அரசுப்பள்ளி மாண வர்களுக்கான மதிப்புமிகு மாணவர் விருது வழங்கும் விழா சேலத்தில் நடைபெற்றது.
- கரூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தலைவருமான என்.பாரி தலைமை வகித்தார். செயலாளர் பிரபாகரன் வரவேற்றார். தலைவர் மனோகரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சேலம்:
சேலம் கன்ஸ்யூமர் வாய்ஸ், 7-ம் அறிவு அறக்கட்டளை, அப்துல்கலாம் அறக் கட்டளை இணைந்து அரசுப்பள்ளி மாண வர்களுக்கான மதிப்புமிகு மாணவர் விருது வழங்கும் விழா சேலத்தில் நடைபெற்றது.
விழாவில் முன்னாள் மாவட்ட நீதிபதியும், கரூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தலைவருமான என்.பாரி தலைமை வகித்தார். செயலாளர் பிரபாகரன் வரவேற்றார். தலைவர் மனோகரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தனியார் கல்லூரி தாளாளர் ராஜேந்திர பிரசாத், ஓய்வு பெற்ற செயற்பொறியாளர் முத்துசாமி, ஓய்வுபெற்ற நல்லாசிரியர் முத்து மாரையன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில், சேலம் மத்திய சிறை கண் காணிப்பாளர் வினோத், ஜி.எஸ்.டி. மற்றும் கலால் துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 55 அரசுப்பள்ளி மாண வர்களுக்கு மதிப்புமிகு மாணவர் விருதும், 15 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருதும் வழங்கினார்கள்.
- இந்தியாவில் 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மரவள்ளி கிழங்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
- மரவள்ளி சாகுபடி பரப்பளவில் 25-வது இடத்திலும் உற்பத்தி திறனில் முதல் இடத்திலும் இந்தியா உள்ளது.
இந்தியாவில் 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மரவள்ளி கிழங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. மரவள்ளி சாகுபடி பரப்பளவில் 25-வது இடத்திலும் உற்பத்தி திறனில் முதல் இடத்திலும் இந்தியா உள்ளது. இந்தியாவில் 0.21 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்படுகிறது. மொத்த உற்பத்தி 7.74 மில்லியன் டன் ஆகும் .தமிழகத்தில் 64% கேரளாவில் 32% ஆந்திராவின் சில பகுதிகளில் 1.5 சதவீதமும் நாகலாந்து 1.2 சதவீதமும் அசாம் 0.5% என மரவள்ளி கிழங்கு பயிரிடப்படுகிறது.
நாட்டின் மரவள்ளிக்கிழங்கு மொத்த உற்பத்தியில் தமிழகத்தின் 64% பங்களித்து முதலிடம் வகிக்கிறது. மரவள்ளி கிழங்கிலிருந்து ஸ்டார்ச் மாவு ஜவ்வரிசி ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் 1.21 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்படுகிறது.
குறிப்பாக சேலம் நாமக்கல் மாவட்டங்களில் மரவள்ளி கிழங்கு அதிக அளவில் பயிரிடப்படுகிறது இதில் நாமக்கலில் 21 சதவீதம் தர்மபுரியில் 19% சேலத்தில் 15 சதவீதம் விழுப்புரம் 14% திருச்சி 9 சதவீதம் ஈரோடு 5சதவீதம் திருவண்ணாமலை 5 சதவீதம் உள்பட 14 மாவட்டங்களில் மரவள்ளிக்கிழங்கு பரவலாக பயிரிடப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் தமிழக அரசு நிறுவனமாக செயல்பட்டு வரும் சேலம் ஸ்டார்ச் மற்றும் சேகோ உற்பத்தியாளர்கள் சேவை தொழில் கூட்டுறவு சங்கம் (சேகோ சர்வ் )ஜவ்வரிசி மரவள்ளி கிழங்கு விவசாயம் ஜவ்வரிசி ஆலையை செயல்படுத்தி வருகிறது.
பாரம்பரியமிக்க சேலம் சேகோ (ஜவ்வரிசி) என்ற பெயரில் புவிசார் குறியீடு பெறும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. அதன் பயனாக கடந்த ஆகஸ்ட் மாதம் சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு கிடைத்தது.
இந்த நிறுவனம் மூலம் 2.17 லட்சம் ஜவ்வரிசி மூட்டைகளை தேக்கி வைக்கும் மின்னணு ஏலம் வசதி உள்ள நிறுவனமாக சேகோ சர்வ் நிறுவனம் விளங்குகிறது. அதேபோல தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழில் கூட்டுறவு சங்கமாக அந்த நிறுவனம் விளங்குகிறது .இந்த சங்கத்தில் 374 உறுப்பினர்கள் உள்ளனர். இந்தியாவில் ஜவ்வரிசிக்கு என்று பிரத்தியோக விற்பனை கேந்திரமாக சேகோ சர்வ் உள்ளது. ஜவ்வரிசியானது பாரம்பரிய மிக்க உணவு பொருளாகும். இது வட மாநில மக்களின் பண்டிகை நாட்களில் மிக முக்கிய உணவுப் பொருளாக உள்ளது.
சேலத்தை பொறுத்தவரை வெண்பட்டு, சேலம் மல்கோவா மாம்பழம் வரிசையில் சேலம் ஜவ்வரிசி புவிசார் குறியீடு பெற்றுள்ளது சிறப்பு அம்சமாகும் .இதன் மூலம் புதிய சந்தை வாய்ப்புகள் கிடைத்துள்ளதால் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. ஜவ்வரிசி சார்ந்த உற்பத்தி பொருளுக்கு தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் முக்கியத்துவம் பெற முடியும் என்பதால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.
ஜவ்வரிசி மற்றும் மரவள்ளிக்கிழங்கு மாவிலிருந்து தயாரிக்கப்படும் பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். ஜவ்வரிசி ஏற்றுமதிக்கு நல்வாய்ப்பாக புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால் அதன் ஏற்றுமதியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஜவ்வரிசி உடல்நலம் காக்கும் முக்கிய உணவு பொருளாக திகழ்கிறது. வட மாநிலங்களில் நோன்பு காலங்களில் ஜவ்வரிசியில் செய்யப்பட்ட உணவை காலையில் உட்கொள்கின்றனர். இதனால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது. இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் சத்து அதிகம் உள்ளதால் உடல் ஆரோக்கியத்துக்கு பலம் சேர்க்கிறது. ஜவ்வரிசியிலிருந்து கிச்சடி பாயாசம் வடை ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக மகராஷ்டிராவில் ஜவ்வரிசியில் தயார் செய்யப்படும் வடை மக்களால் விரும்பி சாப்பிடப்படுகிறது.
ஜவ்வரிசியில் இருந்து தயாராகும் உணவுப் பொருட்களை உட்கொள்வது கர்ப்பிணி களின் கரு வளர்ச்சிக்கு உதவுகிறது. அதேபோல் இரத்த அழுத்தத்தை குறைப்பதுடன் எலும்புகளை வலுப்படுத்துகிறது. மேலும் ஞாபக மறதி நோயான அல்சைமர் வராமல் காக்கிறது. இதனால் ஜவ்வரிசியை உணவு பொருளாக எடுத்து உடலை ஆரோக்கியமாக பாது காப்பதுடன் விவசாயிகளும் வாழ்வாதாரமும் மேம்பட உறுதுணையாக இருப்போம் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
- அர்த்தநாரீசுவரர் கோவில் நிர்வாகத்திடம் திருச்செங்கோடு ஊர் பொதுமக்கள் சார்பாக, தீப கொப்பரையானது காணிக்கையாக வழங்கப்பட்டது.
- திருக்கார்த்திகை தீபத்தன்று மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டி மேற்படி தீபக் கொப்பரையை பொதுமக்கள் திருக்கோயில் நிர்வாகத்திடம் வழங்கினார்கள்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவில் நிர்வாகத்திடம் திருச்செங்கோடு ஊர் பொதுமக்கள் சார்பாக, தீப கொப்பரையானது காணிக்கையாக வழங்கப்பட்டது.
இந்த தீபக் கொப்பரையானது தாமிர உலோகத்தால் ஆனது இதனை பல வருடங்களுக்கு முன்பாக திருச்செங்கோடு ஊர் பொதுமக்கள் பலரும் சேர்ந்து நன்கொடை வழங்கி இந்த தீப கொப்பரையை உருவாக்கியுள்ள நிலையில், அவர்களின் ஒரு சிலர் இனி வரும் காலங்களில் அர்த்தநாரீசுவரர் கோவில் நிர்வாகமே கோவில் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரியதின் அடிப்படையில் கோவில் நிர்வாகம் முன்னின்று வருடா வருடம் தொடர்ந்து திருக்கார்த்திகை தீபத்தன்று மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டி மேற்படி தீபக் கொப்பரையை பொதுமக்கள் திருக்கோயில் நிர்வாகத்திடம் வழங்கினார்கள்.
இந்த நிகழ்வில், ஊர்பொதுமக்கள் சார்பாக குமரவேல், திருநாவுக்கரசு, முருகேசன், மனோகர், சக்திவேல், ஆடிட்டர் நிவேதன், ரஜினிகாந்த், சுரேஷ், சரவணன் மற்றும் பலரும் பங்கேற்றனர்.
கோவில் நிர்வாகம் சார்பாக அர்த்தநாரீசுவரர் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் தங்கமுத்து, செயல் அலுவலர் ரமணிகாந்தன், அறங்காவ லர்கள் கார்த்திகேயன், அர்ஜுனன், அருணா சங்கர், பிரபாகரன் ஆகியோர்கள் தீபக் கொப்பரையை பெற்றுக் கொண்டனர்.
இதனை தொடர்ந்து இன்று காலை 8.30 மணியளவில் திருச்செங்கோடு கைலாசநாதர் கோவிலிருந்து தீபக் கொப்பரையை 4 ரதவீதிகளிலும் ஊர்வலமாக எடுத்து சென்று அர்த்தநாரீசுவரர் கோவிலின் மலை உச்சியில் தீபம் ஏற்றினர்.
- சிவ பக்தர் சக்கரவர்த்தி தலைமையிலான குழுவினர் ஒன்றிணைந்து ரூ.30 லட்சம் செலவில் தையல்நாயகி உடனுறை வைத்தியநாதருக்கு முதன்முறையாக கற்றளி கோவில் கட்டினர்.
- இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் நடைபெற்றது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி பெரியசாமி நகர் பகுதியில் சிவ பக்தர் சக்கரவர்த்தி தலைமையிலான குழுவினர் ஒன்றிணைந்து ரூ.30 லட்சம் செலவில் தையல்நாயகி உடனுறை வைத்தியநாதருக்கு முதன்முறையாக கற்றளி கோவில் கட்டினர். இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் நடைபெற்றது. தொடர்ந்து மண்டல அபிஷேக சிறப்பு பூஜை வழிபாடு நடந்து வருகிறது. இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்று வருகின்றனர்.
ஆசிரியை வளர்மதி புகழ் குடும்பத்தினர் சார்பில் அனைவருக்கும் அன்ன தான வழங்கப்பட்டது. அன்னதானத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சக்கரவர்த்தி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். இன்று மாலை மண்டலாபிஷேக 48 நாள் நிறைவு பூஜை நடைபெறுகிறது.






