search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் - அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
    X

    போட்டியில் வெற்றி பெற்ற ஒரு மாணவிக்கு அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கிய காட்சி. 

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் - அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

    • தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் கவிதைகள், திரைப்பட வசனங்கள் ஓப்புவித்தல் போட்டி தூத்துக்குடி போல்பேட்டை கீதா மெட்ரிக்பள்ளியில் நடைபெற்றது.
    • போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கினார்.

    தூத்துக்குடி:

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வடக்கு மாவட்ட தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் கவிதைகள், திரைப்பட வசனங்கள் ஓப்புவித்தல் போட்டி தூத்துக்குடி போல்பேட்டை கீதா மெட்ரிக்பள்ளியில் நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் சரத்பாலா தலைமை தாங்கி னார். மாவட்ட துணைத் தலைவர் ஞானப்பிரகாஷம், மாவட்ட துணை அமைப்பா ளர்கள் சோமநாதன், மனோ கரன், மாரியப்பன், தாமோதரகண்ணன், பால முருகன், ஆவுடையப்பன், மாநகர தலைவர் கணேசன், துணைத்தலைவர் சாமி, துணை அமைப்பாளர்கள் ஆனந்த், அற்புதராஜ், பழனி, சீதாலட்சுமி, ரமேஷ், ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மாநகர அமைப்பாளர் மரிய ஜோன் பிரான்சிஸ் வரவேற்று பேசினார். வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன் விழாவை தொடங்கி வைத்து பேசி னார்.

    விழாவில் மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லை செல்வம், மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக் குமார், மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணைச்செய லாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பொருளாளர் அனந்தையா, மாவட்ட துணைச்செய லாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் அந்தோணி ஸ்டாலின், வக்கீல் பாலகுருசாமி, வக்கீல் அசோக், ரமேஷ், விஸ்வநாதராஜா, சீனி வாசன், துணை அமைப்பா ளர்கள் அந்தோணி கண்ணன், பிரபு, ராமர், பகுதி செயலாளா ஜெயக் குமார், மாவட்ட பிரதிநிதி கள் நாராயணன், செல்வ குமார், சேர்மபாண்டியன், மாநகர அணி அமைப்பா ளர்கள் ஜீவன் ஜேக்கப், அருண்சுந்தர், சீதாராமன், துணை அமைப்பாளர்கள் கிறிஸ்டோபர் விஜயராஜ், ரவி, குமரன், இலக்கிய அணி சக்திவேல், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், கவுன்சி லர்கள் சரவணக்குமார், ஜாக்குலின்ஜெயா, நாகேஸ்வரி, விஜயகுமார், வட்டச்செயலாளர்கள் பால குருசாமி, பொன்னுச்சாமி, கருப்பசாமி, சேகர், முத்து ராஜா, ராஜாமணி, சக்தி வேல், சதீஷ்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசிங், குருசாமி மற்றும் கருணா, மணி, அல்பட், சத்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கி னார். மாவட்ட தலைவர் இருதயராஜ் நன்றி கூறினார்.

    Next Story
    ×