என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடியில் காதலனை தாக்கி இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது
- நேற்று முன்தினம் இரவு தனது 21 வயது காதலியுடன் தெற்கு பீச் ரோட்டோரத்தில் அமைக்கப்பட்டுள்ள குடையின் கீழ் இரவு 10 மணிக்கு பேசிக் கொண்டு இருந்தார்.
- அதன்பிறகு அந்த 2 பேரும் இளம்பெண்ணை தங்களது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கடற்கரை சாலையில் உள்ள ஒரு உப்பளத்துக்குள் அழைத்து சென்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு தனது 21 வயது காதலியுடன் தெற்கு பீச் ரோட்டோரத்தில் அமைக்கப்பட்டுள்ள குடையின் கீழ் இரவு 10 மணிக்கு பேசிக் கொண்டு இருந்தார்.
அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் காதல் ஜோடியை வழிமறித்து மிரட்டினர். பின்னர் காதலனை தாக்கி அங்கிருந்து விரட்டியடித்தார்கள். அதன்பிறகு அந்த 2 பேரும் இளம்பெண்ணை தங்களது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கடற்கரை சாலையில் உள்ள ஒரு உப்பளத்துக்குள் அழைத்து சென்றனர்.
அங்கு இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்கள். பின்னர் அவர்களில் ஒருவர், அந்த பெண்ணை மீண்டும் கடற்கரை சாலையில் கொண்டு வந்து விட்டு விட்டு சென்று விட்டார். இது தொடர்பாக அந்த இளம்பெண் போலீசார் புகார் செய்தார். அதன்பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் தூத்துக்குடியை சேர்ந்த வேல்முருகன் (வயது 24) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது நண்பரான தூத்துக்குடி லயன்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்த யோசோப்பு என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை யோசோப்பைதூத்துக்குடி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் மாரியம்மாள் மற்றும் போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்