என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லையில் ரெயில் முன் பாய்ந்து மூதாட்டி தற்கொலை
Byமாலை மலர்29 Sep 2022 9:32 AM GMT
- தச்சநல்லூரை அடுத்த கரையிருப்பு ரெயில்வே தண்டவாளம் பகுதியில் இன்று காலை பெண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக சந்திப்பு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- கரையிருப்பு தெற்கு தெருவை சேர்ந்த வேல் என்பவரின் மனைவி சுப்பம்மாள் (வயது 78) என்பது தெரிய வந்தது.
நெல்லை:
தச்சநல்லூரை அடுத்த கரையிருப்பு ரெயில்வே தண்டவாளம் பகுதியில் இன்று காலை பெண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக சந்திப்பு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த பெண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில் கரையிருப்பு தெற்கு தெருவை சேர்ந்த வேல் என்பவரின் மனைவி சுப்பம்மாள் (வயது 78) என்பது தெரிய வந்தது. அவர் ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X