search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில்  ரெயில் முன் பாய்ந்து மூதாட்டி தற்கொலை
    X

    நெல்லையில் ரெயில் முன் பாய்ந்து மூதாட்டி தற்கொலை

    • தச்சநல்லூரை அடுத்த கரையிருப்பு ரெயில்வே தண்டவாளம் பகுதியில் இன்று காலை பெண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக சந்திப்பு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • கரையிருப்பு தெற்கு தெருவை சேர்ந்த வேல் என்பவரின் மனைவி சுப்பம்மாள் (வயது 78) என்பது தெரிய வந்தது.

    நெல்லை:

    தச்சநல்லூரை அடுத்த கரையிருப்பு ரெயில்வே தண்டவாளம் பகுதியில் இன்று காலை பெண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக சந்திப்பு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த பெண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் விசாரணையில் கரையிருப்பு தெற்கு தெருவை சேர்ந்த வேல் என்பவரின் மனைவி சுப்பம்மாள் (வயது 78) என்பது தெரிய வந்தது. அவர் ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×