search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை விபத்தில் முதியவர் பலி
    X

    சாலை விபத்தில் முதியவர் பலி

    • ஒரே மோட்டார் சைக்கிளில் பிள்ளையார்பட்டி பஞ்சா யத்து அலுவலகம் அருகில் சென்று கொண்டிருந்தார்.
    • 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு ேநர் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள வல்லம் பெரியார் நகரை சேர்ந்தவர் சையத் அபுதாஹிர் (வயது 57). இவர் நேற்று இரவு தனது மனைவி ஷாஜகான் பீவி (52) , பேரன் உமர் (8) ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் பிள்ளையார்பட்டி பஞ்சா யத்து அலுவலகம் அருகில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது களிமேடு அருகே உள்ள நரிமேடு பகுதியை சேர்ந்த ஹரிஹரன் (20), தமிழ்ச்செல்வன் (22) ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு ேநர் எதிர்பாராதவிதமாக மோதி கொண்டன. இந்த விபத்தில் சையத் அபுதாஹிர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இவரது மனைவி ஷாஜகான் பீவி மற்றும் பேரன் உமர் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து தஞ்சை யில் உள்ள தனியார் மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டுள்ளனர்.

    மேலும் படுகாயமடைந்த ஹரிஹரன், தமிழ்ச்செல்வன் இருவரும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகா ரின் பேரில் தமிழ் பல்கலைக்கழக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×