search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
    X

    மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு

    • மோட்டார் சைக்கிளில் சென்ற போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்தார்.
    • ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட தில்லையம்பலம் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார்.

    திருவையாறு:

    திருவையாறு அருகே வீரசிங்கம்பேட்டை மெயி ன்ரோடைச் சார்ந்தவர் தில்லையம்பலம்(62). பெட்டிக்கடை நடத்திவந்தார். இவர் சம்பவத்தன்று இரவு விளாங்குடி ரோடில் கஸ்தூரிபாய் நகர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி பலத்த காயமடைந்தார். உடன் அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் தில்லையம்பலம் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார். இதுகுறித்து அவரது மகன் வினோத்குமார் (32) கொடுத்த புகாரின்பேரில் திருவையாறு இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்இன்ஸ்பெக்டர் அப்பர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறா ர்கள்.

    Next Story
    ×