என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பரமத்திவேலூர் அருகே மின்சாரம் தாக்கி பால் வியாபாரி பலி
- பால் வியாபாரம் செய்யும் ரங்கநாதன் வெகு நேரமாகியும் வராததால் பாலகுமார் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தார்.
- மின்சாரம் தாக்கி கீழே விழுந்து கிடந்த ரங்கநாதனை அருகில் இருந்தவர்களின் உதவியுடன் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
பரமத்திவேலூர்:
கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீரங்கன். இவரது மகன் ரங்கநாதன்(வயது 47).இவர் பரமத்திவேலூர் தாலுகா சானார்பாளையத்தில் ஒரு வீட்டில் தனியாக தங்கி பாலகுமார் என்பவரிடம் பால் வியாபாரம் செய்து வந்தார்.
இந்த நிலையில் பால் வியாபாரம் செய்யும் ரங்கநாதன் வெகு நேரமாகியும் வராததால் பாலகுமார் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தார். அங்கு மின்சாரம் தாக்கி கீழே விழுந்து கிடந்த ரங்கநாதனை அருகில் இருந்தவர்களின் உதவியுடன் காப்பாற்றி பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரங்கநாதன் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், ரங்கநாதனின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். பால் வியா பாரி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்