search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரக்காணம் அருகேமரத்தில் மோட்டார் சைக்கிள்  மோதி வாலிபர் பலி
    X

    பலியான மணிமாறன்

    மரக்காணம் அருகேமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

    கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை ஓரத்தில் உள்ள ஒரு மரத்தில் மோதியது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் சுவேந்திரன் (வயது. 23). இவர் அதே பகுதியை சேர்ந்த மணிமாறன் (17) என்பவருடன்

    நேற்று மாலை மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட மரக்காணத்திலிருந்து நாரவாக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்தனர்.

    இவர்கள் பெட்ரோல் பங்க் அருகில் சென்றபோது குறுக்கே மாடு ஒன்று வந்துள்ளது. இந்த மாட்டின் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை சுவேந்திரன்

    திருப்பி உள்ளார். அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை ஓரத்தில் உள்ள ஒரு மரத்தில் மோதியது.

    இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிமாறன் இறந்தார். சுவேந்திரன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மரக்காணம் போலீசார் விசாரிக்கிறார்கள்.

    Next Story
    ×