என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
எம்.எல்.ஏ. அலுவலகத்தின் ஒரு பகுதியில் சொந்த செலவில் தற்காலிக ரேஷன் கடை அமைத்து கொடுத்த அமைச்சர் கீதாஜீவன்
- வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பணை சங்கத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க செல்ல இருப்பதால் தூரம் அதிகமாக இருக்கிறது பொதுமக்கள் என்று கோரிக்கை வைத்தனர்.
- இதனையடுத்து தனது சொந்த செலவில் அப்பகுதி மக்களுக்காக தற்காலிக ரேஷன் கடை அமைக்கப்பட்டு அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு வார்டாக சென்று வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து வருகிறார்.
அதை குறிப்பெடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட மனுக்கள் மீது புதிய துறை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டு தீர்த்து வைக்கப்படுகின்றன.
அதன்படி 30-வது வார்டு, 32-வது வார்டு பகுதி மக்களிடம் குறைகளை கேட்க சென்ற போது டூவிபுரம், மணிநகர், அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பணை சங்கத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க செல்ல இருப்பதால் தூரம் அதிகமாக இருக்கிறது.
பாலம் ஏறி, இறங்குவதால் பல முதியவர்களால் முடியாத நிலை வருகிறது. அதற்கு மாற்று ஏற்பாடு செய்து தரவேண்டும் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து டூவிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஒரு பகுதியில் தனது சொந்த செலவில் அப்பகுதி மக்களுக்காக தற்காலிக ரேஷன் கடை அமைக்கப்பட்டு ரிப்பன் வெட்டி அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், கவுன்சிலர்கள் அதிஷ்டமணி, கந்தசாமி, கனகராஜ், ஜெயசீலி, பவாணி மார்ஷல், சந்திர போஸ், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சிவக்குமார் என்ற செல்வின், அருண்சுந்தர், மாவட்ட பிரதிநிதிகள் ராஜ்குமார், மீனாட்சி சுந்தரம், செந்தில்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சிவன்யாதவ், வட்டச் செயலாளர்கள் செந்தில்குமார், முத்துராஜா, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, ம.தி.மு.க. மாநில கலை இலக்கிய அணி துணைச் செயலாளர் மகாராஜன், முன்னாள் கவுன்சிலர் அந்தோணிராஜ், நிர்வாகிகள் கிளிப்ராஜன், சுப்பையா, மணி, அல்பட், அற்புதராஜ், உணவு பொருள் வழங்கல் தாசில்தார் ஜஸ்டிஸ் செல்லத்துரை, பசுமை பண்ணை காய்கறி அங்காடி மேலாளர் ராஜதுரை, கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் அந்தோணி பட்டுராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்