என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உடன்குடியில் ரூ.68 லட்சம் கடன் உதவிகள் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்
- உடன்குடிதொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் இருபெரும் விழா நடைபெற்றது.
- வியாபாரிகள், சிறுவணிகர்கள், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு நலத்திட்டங்களை அமைச்சர் வழங்கினார்
உடன்குடி:
உடன்குடிதொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் செட்டியாபத்து ஊராட்சியில் உலர் தேங்காய் கொப்பரை கூடாரம் அமைக்க அடிக்கல் நாட்டுதல், பல்வேறு தரப்பினருக்கு ரூ.68 லட்சம் கடன் உதவிகள் வழங்குதல் ஆகிய இருபெரும் விழா நடைபெற்றது.
அடிக்கல் நாட்டினார்
விழாவிற்கு திருச்செந்தூர் கூட்டுறவு துணைப் பதிவாளர் வளர்மதி தலைமை தாங்கினார்.சங்க தலைவர்ஆஸ்ஸாப்அலி பாதுஷா, துணைத்தலைவர் சாந்திஸ்ரீராம், உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் பாலசிங், துணைத் தலைவி மீராசிராஜூதீன், உடன்குடிபேரூராட்சி மன்ற தலைவி ஹூமைரா ஆஸ்ஸாப் கல்லாசி, துணைத்தலைவர் சாந்தைய டியூர் மால்ராஜேஷ், செட்டியாபத்து ஊராட்சிமன்ற தலைவர் பாலமுருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்க செயலர் ஆனந்தராஜ் நவமணி, அனைவரையும் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று உலர் கொப்பரைத் தேங்காய் கூடாரம் அமைக்க அடிக்கல் நாட்டினார்.
கடன் உதவி
தொடர்ந்து வியா பாரிகள், சிறுவணிகர்கள், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு ரூ.68 லட்சம் கடன் உதவிகள், நலிந்தோர்களுக்கு நலத்திட்டங்களை அமைச்சர் வழங்கினார்.
தி.மு.க.வை சேர்ந்த மாநில மாணவரணி துணை செயலர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராம ஜெயம், கிழக்கு ஓன்றிய செயலர் இளங்கோ, உடன்குடி பேரூராட்சி உறுப்பினர்கள் ஜான்பாஸ்கர், அன்புராணி, சபானா, ஆபித், பிரதீப், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் முகமது சலீம், ஓன்றிய மகளிரணி அமைப்பாளர் ராஜேஷ்வரி, மாவட்ட நிர்வாகிகள் மகாவிஷ்ணு, ரவிராஜா, சிராஜூதீன், ஷேக் முகமது, இளைஞர் அணி அஜய், பாய்ஸ் காங்கிரசை சேர்ந்த நடராஜன், சிவசுப்பிரமணியன், ஜெயராமன், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மும்தாஜ், கந்தன், சாமுவேல், ராஜேந்திரன், குணசேகரன், பேச்சி முத்து உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்