search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. வரலாறு தெரியாமல் பலர் பொய் பிரசாரம் செய்கிறார்கள் -  அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
    X

    கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசிய போது எடுத்தபடம். அருகில் மேயர் ஜெகன்பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. உள்பட பலர் உள்ளனர். 

    தி.மு.க. வரலாறு தெரியாமல் பலர் பொய் பிரசாரம் செய்கிறார்கள் - அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

    • தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பிரதிநிதிகள் கூட்டம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பிரதிநிதிகள் கூட்டம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மார்க்கண்யடேன் எம்.எல்.ஏ ., மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    தொகுதிக்கு 50 ஆயிரம் வீதம் 3 தொகுதிக்கும் 1 லட்சம் புதிய உறுப்பினர்கள் ஜூன் 3-ந் தேதிக்குள் சேர்க்க வேண்டும்.

    இதை முகாமாக நடத்தி அதில் ஒன்றிய செயலாளர்கள் பேரூர் செயலாளர்கள் உள்ளாட்சி அமைப்பை சேர்ந்தவர்கள் என அனைத்து அணியினரும் உள்ளடக்கி செய்ய வேண்டும்.

    ஓய்வின்றி உழைக்கும் முதல்-அமைச்சருக்கு நாம் பெருமை சேர்க்கும் வகையில் பணியாற்றி எம்.பி. தேர்தலில் முழுமையான வெற்றியை அடைய வேண்டும் அதுதான் நம்முடைய இலக்கு. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் பொய் பிரசாரம் செய்வதை முறியடிக்க வேண்டும்.

    குழப்பத்தை ஏற்படுத்தி வருவதையும் தடுக்க வேண்டும்.

    தி.மு.க.வின் வரலாறு தெரியாமல் பலர் பேசி வருகின்றனர். அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். முதல்-அமைச்சரின் திட்டங்கள் செயல்பாடுகள் அனைத்தும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக அமைய பெற்றுள்ளது. எம்.பி.யும் நம்முடைய குரலாக இருந்து தொகுதிக்காக நல்லமுறையில் பணியாற்றி வருகின்றார். 40க்கு 40 தொகுதியும் வென்றெடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    3 தொகுதிகளுக்கும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பெருமாள், வேல்சாமி, ஜோசப் ராஜ், மாவட்ட துணைச்செய லாளர் ராஜ் மோகன் செல்வின், அவைத்தலைவர் செல்வராஜ், பொருளாளர் ரவீந்திரன், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் பேசினார்கள்.

    கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி, கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் கலைச்செல்வி, நிர்மல்ராஜ், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட கவுன்சிலர் தங்க மாரியம்மாள், மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், கஸ்தூரி தங்கம், அந்தோணி ஸ்டாலின், ரமேஷ், உமாதேவி, மோகன்தாஸ், அபிராமி நாதன், துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், நலம் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், சின்னப்பாண்டியன், நவநீத கண்ணன், சின்னமாரிமுத்து, செல்வராஜ், மும்மூர்த்தி, ராமசுப்பு, அன்புராஜ், மாவட்ட பிரதிநிதிகள் சேர்மபாண்டியன், சக்திவேல், செல்வகுமார், செந்தில்குமார், இசக்கிராஜா, நாராயணன், மாநகர அணி அமைப்பாளர்கள் ஆனந்தகபரியேல்ராஜ், அருண்குமார், பிரபு,துணை அமைப்பாளர் அருண்சுந்தர், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமார், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜான் அலெக்ஸாண்டர், ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, மற்றும் ரவி, சூர்யா, அல்பட், மணி, உலகநாதன், வன்னியராஜ், பாஸ்கர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×