search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில் தொடர் மோட்டார் சைக்கிள்  திருட்டில் ஈடுபட்டவர் கைது
    X

    தென்காசியில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர் கைது

    • ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது மகளை பார்ப்பதற்காக பிச்சைக்கனி மொபட்டில் சென்றுள்ளார்.
    • விசாரணையில் மகாலிங்கம் மொபட்டை திருடியது தெரியவந்தது.

    நெல்லை:

    தென்காசியை சேர்ந்த பிச்சைக்கனி என்பவர் நேற்று அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது மகளை பார்ப்பதற்காக மொபட்டில் சென்றுள்ளார். அப்போது மொபட்டை நிறுத்திவிட்டு உள்ளே சென்ற அவர் சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார். அப்போது அவரது மொபட்டை காணவில்லை.

    இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில் தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கடையம் அருகே உள்ள புங்கம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம்(வயது 63) என்பவர் மொபட்டை திருடியது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஆலங்குளம், கடையம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் சுமார் 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    Next Story
    ×