search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பானிபூரி கடைக்காரரை கிரிக்கெட் மட்டையால் தாக்கியவர் கைது
    X

    பானிபூரி கடைக்காரரை கிரிக்கெட் மட்டையால் தாக்கியவர் கைது

    • உனது தந்தை கோவில் வரவு செலவு கணக்கு கேட்டால் கூற மாட்டாரா எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • சபரிசக்தியை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழவாசல் பூமால் ராவுத்தன் கோவில் தெருவை சேர்ந்தவர் சபரிசக்தி (வயது 20). இவர் கீழவாசல் வெள்ளை பிள்ளையார் கோவில் அருகே பானி பூரி கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இவரது கடைக்கு பழைய மாரியம்மன் கோவில் ரோடு சமுத்திரக்கரையை சேர்ந்த மேகநாதன் (22), புதுபட்டினத்தை சேர்ந்த ராஜா ஆகிய இரண்டு பேர் வந்தனர்.

    திடீரென அவர்கள் சபரி சக்தியை பார்த்து உனது தந்தை கோவில் வரவு செலவு கணக்கு கேட்டால் கூற மாட்டாரா எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே மேகநாதன், ராஜா ஆகியோர் ஆத்திரமடைந்து சபரிசக்தியை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் பலத்த காயம் அடைந்த சபரிசக்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    இது குறித்து அவர் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மேகதாதனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராஜாவை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×