search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு மருத்துவமனையில் கழுத்தை அறுத்து கொண்ட வாலிபர்
    X

    பெருமாள்

    அரசு மருத்துவமனையில் கழுத்தை அறுத்து கொண்ட வாலிபர்

    • உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலைக்கு முயன்றார்.
    • ரத்தம் சிந்திய நிலையில் அவசர சிகிச்சை பிரிவு பகுதிக்கு நடந்து வந்தார்.

    உசிலம்பட்டி

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா பாலக்கோம்பை ராய வேலூரைச் சேர்ந்தவர் ராமன். இவரது மகன் பெருமாள் (வயது 35). இவர் இன்று காலை உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் தனது கழுத்தை அறுத்து ரத்தம் சிந்திய நிலையில் அவசர சிகிச்சை பிரிவு பகுதிக்கு நடந்து வந்தார்.

    செவிலியர்கள், டாக்டர்கள் உடனடியாக அவருக்கு சிகிச்சை அளித்தனர். எதற்காக அவர் தற்கொலைக்கு முயன்றார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    வாலிபர் ஒருவர் ஆஸ்பத்திரி வளாகத்தில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் உசிலம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×