search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் தவற விட்ட பணத்தை ஒப்படைத்த வாலிபர்
    X

    சாலையில் தவற விட்ட பணத்தை ஒப்படைத்த வாலிபர்

    • சாலையில் தவற விட்ட பணத்தை வாலிபர் ஒப்படைத்தார்.
    • இன்ஸ்பெக்டர் சரவணன் அதனை லலிதாவிடம் வழங்கினார்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் செந்தில்குமார் (வயது30). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து திருநகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது தனக்கன்குளம் மெயின் ரோட்டில் ஒரு மணி பர்ஸ் கிடந்தது. அதை செந்தில்குமார் எடுத்து பார்த்தார். அதில் ரூ.67 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தது. அதை செந்தில்குமார் உடனடியாக திருநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    இதனையடுத்து மணி பர்சை தவற விட்ட வேடர்புளியங்குளம் வி.பி.சிந்தன் நகரை சேர்ந்த லலிதா என்பவரை அழைத்து இன்ஸ்பெக்டர் சரவணன் அதனை லலிதாவிடம் வழங்கினார்.

    Next Story
    ×