search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    யோகா தினம் கொண்டாட்டம்
    X

    யோகா தினம் கொண்டாட்டம்

    • திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.
    • யோகா தினம் விழா கல்லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா மற்றும் பொருளாளர் ஷகிலா ஷா ஆகியோர் வழிகாட்டுதலின்படி கல்லூரி இயக்குனர் ஆர்.சந்தோஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

    மதுரை

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியில் உள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யோகா தினம் விழா கல்லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா மற்றும் பொருளாளர் ஷகிலா ஷா ஆகியோர் வழிகாட்டுதலின்படி கல்லூரி இயக்குனர் ஆர்.சந்தோஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

    இந்த யோகா தினம் விழாவில் கல்லூரி முதல்வர் மு.நயாஸ் வரவேற்று பேசினார். கல்லூரி ஒருங்கிணைப்பாளரும், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருமான முனியாண்டி முன்னிலை வகித்தார்.

    இந்த நிகழ்ச்சியை கல்லூரி வளாக அதிகாரி சத்திய மூர்த்தி மற்றும் தேசிய மாணவர் படை அலுவரும், கல்லூரியின் உடற்கல்வி இயக்குனருமான நாராயணபிரபு ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர்.

    இந்த யோகா தினம் விழாவில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள், தேசிய மாணவர் படை மாணவ, மாணவியர் யோகா தினம் விழாவில் திரளாக கலந்து கொண்டு யோகா செய்தனர்.

    Next Story
    ×