search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் கும்பாபிஷேக விழா
    X

    கோவில் கும்பாபிஷேக விழா

    • அலங்காநல்லூர் அருகே கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • அன்னதானமும் நடந்தது. விழா ஏற்பாடுகளை குமாரம் கிராம மரியாதைகாரர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம் கிராமத்தில் சக்தி விநாயகர், காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. 2 நாள் யாகசாலை பூஜையில் கணபதி ஹோமம், மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது.

    யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

    அன்னதானமும் நடந்தது. விழா ஏற்பாடுகளை குமாரம் கிராம மரியாதைகாரர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×