என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பிளஸ்-2 மாணவர், டிரைவர் பரிதாப சாவு
- பிளஸ்-2 மாணவர், டிரைவர் பரிதாப இறந்தார்.
- இந்த விபத்து குறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள இ. புதுப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி. இவரது மகன் யுவராஜ் (வயது 17). பிளஸ்-2 முடித்துள்ள இவர் நேற்று திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த நண்பர் மோகன் (18) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.
இ.புதுப்பட்டி பகுதியில் சென்று கொண்டி ருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி முன்னாள் சென்று கொண்டிருந்த சரக்கு வேன் மீது மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி ரோட்டில் கவிழ்ந்தது. இதில் யுவராஜ், மோகன் இருவரும் படுகாயம் அடைந்தனர் தலையில் பலத்த காயமடைந்த யுவராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய மோகன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தெற்கு தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 37), கனரக வாகன ஓட்டுனரான இவர் நேற்று இரவு பெட்ரோல் போடுவதற்காக திண்டுக்கல் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த வழியாக செங்கல் ஏற்றி வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருந்தார். இந்த விபத்து குறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்