search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    4 கார்களில் கண்ணாடியை உடைத்து பணம்-லேப்டாப் திருட்டு
    X

    4 கார்களில் கண்ணாடியை உடைத்து பணம்-லேப்டாப் திருட்டு

    • 4 கார்களில் கண்ணாடியை உடைத்து பணம்-லேப்டாப் திருட்டப்பட்டது.
    • இதுகுறித்த புகாரின் பேரில் மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மேலக்கால் மெயின் ரோட்டை சேர்ந்தவர் முருகபூபதிராஜா (வயது 49). இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், வேதியல் துறை பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவர் காரில் குடும்பத்துடன் சென்றார். காளவாசல் அம்மன் கோவில் அருகே காரை நிறுத்தி விட்டு அருகில் உள்ள கடைக்கு முருகபூபதிராஜாசென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் காரின் முன்கதவு கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த லேப்டாப், ஐ-பேட், ஹார்டு டிரைவ், ஆப்பிள் பென்சில், திட்ட ஆவணங்கள், லேசர் பாய்ண்டர் உள்பட ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புடைய பொருட்களை கொள்ளை அடித்து தப்பி சென்றனர்.

    இது தொடர்பாக முருக பூபதிராஜா கரிமேடு குற்ற பலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விஸ்வநாதபுரம், மருதுபாண்டியர் தெருவை சேர்ந்தவர் அஜித் (36). சம்பவத்தன்று இரவு இவர் காரில் ராஜா முத்தையா மன்றத்துக்கு அருகில் உள்ள ஓட்டலுக்கு வந்தார். ஓட்டல் வாசலில் காரை நிறுத்தி விட்டு சென்றார். மர்ம நபர்கள் காரின் முன் கதவு கண்ணாடியை உடைத்து, லேப்டாப், ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அஜித் காருக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த இன்னொரு கார் கண்ணாடி யையும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்களும் திருடு போனது.

    ராமநாதபுரம் மாவட்டம், குருவடியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (40). சம்பவத்தன்று இரவு இவர் பாண்டி கோவில் ரோட்டில் உள்ள மதுபான கடை முன்பு காரை நிறுத்திவிட்டு சென்றார்.

    மர்ம நபர்கள் கார் கண்ணாடியை உடைத்து மணிபர்ஸ், ஏ.டி.எம். கார்டு, லேப்டாப் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×