என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
70 ஆடுகள் வெட்டி பக்தர்களுக்கு விருந்து
Byமாலை மலர்15 Jun 2022 9:45 AM GMT
- திருமங்கலம் அருகே கோவில் திருவிழாவில் 70 ஆடுகள் வெட்டி பக்தர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள தங்களாச்சேரி கிராமத்தில் பழமை வாய்ந்த சடையாண்டி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடம் ஒரு முறை வைகாசி பவுர்ணமி அன்று தங்களாச்சேரி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிராம மக்கள் திருவிழா கொண்டாடுவது வழக்கம்.
இந்த ஆண்டு வைகாசி திருவிழா நடந்தது. தங்களாச்சேரி, அம்மாபட்டி, பன்னிக்குண்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து நேர்த்திக்கடனாக ஆடுகளை வளர்த்து தானமாக வழங்கினர். அரிசி உள்ளிட்ட பலசரக்கு சாமான்களையும் வழங்கினர். நேர்த்திக் கடனாக வழங்கப்பட்ட 70 ஆடுகளை வெட்டி சடையாண்டி சுவாமிக்கு படையலிட்டனர்.
இதனைத் தொடர்ந்து காலையில் இருந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அசைவ உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X