என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வாலிபர்-லாரி டிரைவர் உள்பட 4 பேர் தற்கொலை
- மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர்-லாரி டிரைவர் உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- கீழக்கரை, புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மதுரை
கீரைத்துறை காமராஜர்புரத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 37). இவர் சில நாட்களாக மன பதட்டத்துடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று காலை இவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சொக்கிகுளம் பெசன்ட் ரோட்டை சேர்ந்தவர் அருண்பாண்டியன் (வயது 26), கூலித்தொழிலாளி.இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. 6 மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கினார். இதன் காரணமாக அவருக்கு இடுப்புவலி இருந்தது.
பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் பலன் இல்லை. வாழ்க்கையில் விரக்தி அடைந்த அருண்பாண்டியன் நேற்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (50). லாரி டிரைவர்.நேற்று மதியம் இவர் பரவை காய்கறி மார்க்கெட்டுக்கு லோடு ஏற்றி வந்தார். அங்குள்ள வெங்காய கடை அருகே லாரியை நிறுத்தினார்.
இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த செல்வராஜ் லாரிக்குள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கூடல் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
புதூர் தேசிய விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த நாகசுப்பிரமணியன் மகன் பாண்டீஸ்வரன் (23).
இவர் சில நாட்களாக யாருடனும் பேசாமல் மவுனமாக இருந்தார். சம்பவத்தன்று இரவு இவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டுக்குள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்